தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
டிவியில் பிரபலமான நடிகை மகாலட்சுமி சினிமா தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
குண்டாக உயரமாக இருக்கும் ரவீந்தரை உயரம் குறைவாக இருக்கும் மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டதால் பலரும் பலவிதமான கமெண்ட்களை அள்ளி வீசினர். மேலும் இது இவர்களுக்கு முதல் திருமணம் அல்ல என்பதாலும் கூடுதல் கமெண்ட்களை அள்ளி வீசினர்.
இது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் எனவும் சிலர் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் இவர்களுக்கு திருமணம் ஆகி சில மாதங்களே ஆன நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டதாகவும் இருவரும் விவகாரத்து செய்ய உள்ளதாகவும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
நம் தளத்தில் அப்படி ஏதும் செய்தி வெளியாகவில்லை. இந்த நிலையில் மகாலட்சுமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த விவகாரத்து விவகாரம் குறித்து தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதில்… “டேய்.. புருசா.. தனியாக இருக்கும் உன் புகைப்படத்தை பதிவிட வேண்டாம் என பலமுறை சொல்லி இருக்கிறேன்.
அதனால் தற்போது சமூக வலைத் தளங்களில் தவறான செய்தியை போடுகின்றனர்.
இதுபோன்ற தனியாக இருக்கும் போட்டோக்களை நீங்கள் பதிவிட்டால் இனி மூன்று வேளையும் உங்களுக்கு சேமியா உப்புமா தான் சமைத்து போடுவேன் எனவும் எச்சரித்துள்ளார் மகாலட்சுமி.
மேலும் யூடியூப் ஊடகங்களுக்கு.. இன்னுமாடா நாங்க ட்ரெண்டு.. இதுக்கு இல்லையா ஒரு எண்டு? எனவும் கலாய்த்து பதிவிட்டுள்ளார் மகாலட்சுமி்.
Mahalakshmi Ravinder instagram post viral on social media