தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை சட்ட விரோதமான முறையில் விளையாடியவர் மதன்.
இவரது பெயரிலேயே யூ-டியூப்மும் நடத்தி வந்துள்ளார். அதில் 8 லட்சம் பேர் பாலோயர்களாக உள்ளனர்.
பப்ஜி விளையாட்டு மூலம் சிறுவர் சிறுமிகளுடன் ஆபாசமாக பேசுவது இவரது பாணி. இவர் உடனே பெண் குரலும் ஆபாசபாக பேசும். அது இவரது மனைவி கீர்த்திகாவின் குரல்.
இவர்களின் யூடியூப் பக்கம் கீர்த்திகா பெயரில்தான் இருந்துள்ளது.
காதுகளே கூசும் அளவுக்கு அறுவறுக்கத் தக்க வகையில் இவர்களது பேச்சுக்கள் இருக்கும்.
இவர்களின் ஆபாச பேச்சு வலையில் விழும் வசதியான பிள்ளைகளிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளனர். அவர்களும் இவர்களிடம் தொடர்ந்து பணம் கொடுத்து விளையாடி வந்துள்ளனர்.
இதன்பின் மதனின் மேல் சில புகார்கள் குவியத் தொடங்கியது.
சென்னை சைபர் கிரைம் போலீசில் பலர் புகார் அளிக்கப்பட்டது.
சிறுவர்களின் உயிரையே பறிக்கும் பப்ஜி விளையாட்டை சட்டவிரோதமாக பயன்படுத்தியுள்ளார் எனவும் சிறுவர் சிறுமிகளுடன் ஆபாசமாக பேசி லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளார் எனவும் புகார்கள் குவிந்தன.
இதையடுத்து அவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர் கிரைம் பிரிவு போலீசார்.
எனவே விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை.
கடந்த 14ஆம் தேதி சென்னை பெருங்களத்தூரில் உள்ள மதனின் வீட்டிற்கு சென்ற போலீசார் குடும்பத்தினரிடம் விசாரணையை தொடங்கினர்.
மேலும் மதனின் சொந்த ஊரான சேலத்திற்கு சென்று அவரது மனைவி கீர்த்திகாவை பிடித்தனர்.
கீர்த்திகாவை கைது செய்து நீதிமன்றக்காவலில் சிறையில் அடைத்துள்ளனர். மதன் தலைமறைவாக உள்ளார்.
கீர்த்திகாவிடம் நடத்திய விசாரணையில் 2 பி.எம்.டபில்யூ கார்கள், ஆடி கார் ஆகியவை உள்ளன.
இவையில்லாமல் பெருங்களத்தூரில் இரண்டு தனி சொகுசு வீடுகள் என உல்லாசத்துடன் இருந்துள்ளனர். இத்துடன் பல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர்.
மதனுடன் ஆன்லைன் கேம் விளையாடும் போது..”மற்றவர்களிடம் போலீசெல்லாம் நமக்கு ச்சும்மா ப்ரோ.. ஒன்றும் பண்ண முடியாது.” என ஓவர் கெத்தாக பேசுவாராம் மதன்.
இந்த நிலையில், தலைமறைவாக இருந்த பப்ஜி மதன் தருமபுரியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதன் மீது இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 509, 294 பி உள்ளிட்ட 4 பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று மாலைக்குள் சென்னைக்கு அழைத்து வரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
போலீசிடம் சிக்கிய உடன், ‘நான் செய்தது தவறு’ என காலில் விழுந்து அழுது கெஞ்சியதாகவும், அவன் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
மதனுக்கு உதவிய நண்பர்கள் & அவனது தோழிகளை பிடிக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
Madan a PUBG player turned YouTuber was arrested.
#PUBG #pubgmadan #pubgmadhan #YouTube #YouTuber #Madan #toxicmadan