போலீஸ் எல்லாம் ச்சும்மா ப்ரோ.; ஆபாச பேச்சு கீர்த்திகாவை தொடர்ந்து யூடியூபர் மதனும் கைது

போலீஸ் எல்லாம் ச்சும்மா ப்ரோ.; ஆபாச பேச்சு கீர்த்திகாவை தொடர்ந்து யூடியூபர் மதனும் கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை சட்ட விரோதமான முறையில் விளையாடியவர் மதன்.

இவரது பெயரிலேயே யூ-டியூப்மும் நடத்தி வந்துள்ளார். அதில் 8 லட்சம் பேர் பாலோயர்களாக உள்ளனர்.

பப்ஜி விளையாட்டு மூலம் சிறுவர் சிறுமிகளுடன் ஆபாசமாக பேசுவது இவரது பாணி. இவர் உடனே பெண் குரலும் ஆபாசபாக பேசும். அது இவரது மனைவி கீர்த்திகாவின் குரல்.

இவர்களின் யூடியூப் பக்கம் கீர்த்திகா பெயரில்தான் இருந்துள்ளது.

காதுகளே கூசும் அளவுக்கு அறுவறுக்கத் தக்க வகையில் இவர்களது பேச்சுக்கள் இருக்கும்.

இவர்களின் ஆபாச பேச்சு வலையில் விழும் வசதியான பிள்ளைகளிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளனர். அவர்களும் இவர்களிடம் தொடர்ந்து பணம் கொடுத்து விளையாடி வந்துள்ளனர்.

இதன்பின் மதனின் மேல் சில புகார்கள் குவியத் தொடங்கியது.

சென்னை சைபர் கிரைம் போலீசில் பலர் புகார் அளிக்கப்பட்டது.

சிறுவர்களின் உயிரையே பறிக்கும் பப்ஜி விளையாட்டை சட்டவிரோதமாக பயன்படுத்தியுள்ளார் எனவும் சிறுவர் சிறுமிகளுடன் ஆபாசமாக பேசி லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளார் எனவும் புகார்கள் குவிந்தன.

இதையடுத்து அவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர் கிரைம் பிரிவு போலீசார்.

எனவே விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை.

கடந்த 14ஆம் தேதி சென்னை பெருங்களத்தூரில் உள்ள மதனின் வீட்டிற்கு சென்ற போலீசார் குடும்பத்தினரிடம் விசாரணையை தொடங்கினர்.

மேலும் மதனின் சொந்த ஊரான சேலத்திற்கு சென்று அவரது மனைவி கீர்த்திகாவை பிடித்தனர்.

கீர்த்திகாவை கைது செய்து நீதிமன்றக்காவலில் சிறையில் அடைத்துள்ளனர். மதன் தலைமறைவாக உள்ளார்.

கீர்த்திகாவிடம் நடத்திய விசாரணையில் 2 பி.எம்.டபில்யூ கார்கள், ஆடி கார் ஆகியவை உள்ளன.

இவையில்லாமல் பெருங்களத்தூரில் இரண்டு தனி சொகுசு வீடுகள் என உல்லாசத்துடன் இருந்துள்ளனர். இத்துடன் பல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர்.

மதனுடன் ஆன்லைன் கேம் விளையாடும் போது..”மற்றவர்களிடம் போலீசெல்லாம் நமக்கு ச்சும்மா ப்ரோ.. ஒன்றும் பண்ண முடியாது.” என ஓவர் கெத்தாக பேசுவாராம் மதன்.

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த பப்ஜி மதன் தருமபுரியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதன் மீது இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 509, 294 பி உள்ளிட்ட 4 பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று மாலைக்குள் சென்னைக்கு அழைத்து வரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

போலீசிடம் சிக்கிய உடன், ‘நான் செய்தது தவறு’ என காலில் விழுந்து அழுது கெஞ்சியதாகவும், அவன் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மதனுக்கு உதவிய நண்பர்கள் & அவனது தோழிகளை பிடிக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Madan a PUBG player turned YouTuber was arrested.

#PUBG #pubgmadan #pubgmadhan #YouTube #YouTuber #Madan #toxicmadan

விஜய் பிறந்த நாளில் முப்பெரும் விழா.; வேற லெவல் வெய்ட்டிங்கில் ரசிகர்கள்

விஜய் பிறந்த நாளில் முப்பெரும் விழா.; வேற லெவல் வெய்ட்டிங்கில் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்து வரும் அவரின் ‘தளபதி 65’வது திரைப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார்.

அனிருத் இசையமைக்க பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து வருகிறார்.

இப்பட முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் கொரோனா லாக்டவுன் பிரச்சினையால் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.

விஜய்யின் பிறந்த நாள் ஜூன் 22ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்கு முந்தைய நாள் 21ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் தளபதி 65 பட டைட்டில் & பர்ஸ்ட் லுக் ரிலீசாகவுள்ளது.

இதனையடுத்து அவரின் அடுத்த படமான ‘தளபதி 66’ படம் குறித்த தகவல்களும் வருகின்றன.

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கவுள்ள ’தளபதி 66’ பட அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

அதாவது ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்த நாளில் ’தளபதி 66’ படத்தின் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

தளபதி 65 + தளபதி 66 + விஜய் பர்த்டே.. இப்போ சொல்லுங்க இதை விட விஜய் ரசிகர்களுக்கு வேறென்ன முப்பெரும் விழா இருக்க போகிறது..??

Triple treat for Vijay fans on Thalapathy Birthday

தனியார் பள்ளிகளை தவிர்க்கும் பெற்றோர்.; அரசுப் பள்ளிகளை மேம்படுத்த கமல் தரும் யோசனை

தனியார் பள்ளிகளை தவிர்க்கும் பெற்றோர்.; அரசுப் பள்ளிகளை மேம்படுத்த கமல் தரும் யோசனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

*அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும்!” – மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் கமல் ஹாசன் அவர்கள் அறிக்கை*

அந்த அறிக்கையில்..

“பெருந்தொற்று காலம் உருவாக்கிய பொருளாதார நெருக்கடி, மருத்துவப் படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு, தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, பாடப்புத்தகம் முதல் சீருடை வரை அனைத்தும் இலவசம் உள்ளிட்ட பல காரணங்களால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கூடுதலாக இரண்டு லட்சம் மாணவர்கள் சேரும் வாய்ப்புண்டு என கல்வியாளர்கள் கருதுகிறார்கள்.

அதற்கேற்ப பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் 15% வரை இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது.

கடந்த காலத்தில், பல்வேறு காரணங்களால் மக்கள் அரசுப் பள்ளிகளைப் புறக்கணித்து வந்தார்கள். போதிய வருவாய் இல்லாதவர்களும் கூட கடன் வாங்கியேனும் தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைத்தார்கள்.

ஏழை எளிய நடுத்தர மக்கள் வாழ்வில் பிள்ளைகளின் கல்வி என்பது பொருளியல் சிக்கலை உருவாக்கும் ஒன்றாகவே இருந்தது.

இன்று சூழல் பெருமளவில் மாறி மக்கள் அரசுப்பள்ளிகளை நோக்கி ஆர்வமுடன் வருகிறார்கள்.

இதற்கேற்ப பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும்.

ஆசிரியர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், மாணவர்கள் ஆங்கிலத்தை தன்னம்பிக்கையோடு பேசவும் எழுதுவதற்கும் தேவையான பயிற்சிகள், ஆன்லைன் வகுப்புகளைத் தங்குதடையின்றி நடத்துவதற்கான தொழில்நுட்ப வசதிகள் ஆகியவை அளிக்கப்பட வேண்டும்.

தரமான நூலகங்கள், ஆய்வகங்கள், காற்றோட்டமான வகுப்பறை, சுகாதாரமான குடிநீர், சுத்தமான கழிப்பறை, ஆரோக்யமான மதிய உணவு, நவீன விளையாட்டு உபகரணங்கள் என நம் அரசுப்பள்ளிகளை தனியார் பள்ளிகளை விட பன்மடங்கு மேம்பட்டதாக மாற்றமுடியும்.

தமிழக அரசுக்கு இதைச் செய்யும் ஆற்றல் உண்டு என நான் நம்புகிறேன். இதைச் சாத்தியமாக்க வேண்டும் என தமிழக முதல்வருக்குக் கோரிக்கை விடுக்கிறேன்.

– கமல்ஹாசன்
தலைவர் – மக்கள் நீதி மய்யம்

Kamals ideas to improve standards of Govt Schools

விஜய்சேதுபதிக்காக காத்திருக்கும் ‘தி ஃபேமிலி மேன் 3வது சீசன்’ படக்குழு

விஜய்சேதுபதிக்காக காத்திருக்கும் ‘தி ஃபேமிலி மேன் 3வது சீசன்’ படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

,

சமீபத்தில் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த வெப் சீரிஸ் என்றால் அது ‘தி பேமிலி மேன் 2.’ தான்.

2வது பாகமும் முதல் பாகத்தை போல பெரும் வரவேற்பை பெற்றது.

இதன் முதல் பாகத்தில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, ஜெயவந்த் காசிநாத் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இது காஷ்மீர் தீவிரவாதிகள் பற்றிய கதைக்களமாக இருந்தது.

‘தி பேமிலி மேன் 2’ சீசனில் சமந்தா இலங்கையை சேர்ந்த பெண்ணாக நடித்திருந்தார்.

இந்த ‘தி பேமிலி மேன் 2’ சீசனுக்கு தமிழர்களிடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த தொடரில் இலங்கை போராளி குழு தலைவர் பாஸ்கரனாக நடிக்க விஜய் சேதுபதியைத்தான் முதலில் அணுகினார்களாம்.

இதற்காக ஒரு முறை படக்குழு சென்னை வந்து சென்றதாம்.

ஆனால் விஜய்சேதுபதி் நடிக்க மறுத்து பின்னர் அவரே மைம்கோபியை சிபாரிசு செய்தாராம்.

இத்தகவலை மனோஜ் பாஜ்பாய் தன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தி பேமிலி மேன் – 3வது சீசனில் நடிக்க விஜய்சேதுபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் அதே பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

தி பேமிலி மேன் – 3.. சீனாவில் உருவாகி இந்தியாவை தாக்கும் கொரோனா வைரஸ் பற்றிய கதைக்களம் என சொல்லப்படுகிறது.

The Family Man 3 web series team waiting for Vijay Sethupathi

விஜய்யின் நெருங்கிய நண்பருக்கும் வனிதாவுக்கும் இப்படியொரு உறவு.? சொல்லவே இல்ல

விஜய்யின் நெருங்கிய நண்பருக்கும் வனிதாவுக்கும் இப்படியொரு உறவு.? சொல்லவே இல்ல

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருமணங்களின் சர்ச்சை ராணி என பெயரெடுத்தவர் நடிகை வனிதா.

இவர் 3 முறை திருமணம் செய்து 3வது கணவரையும் விவாகரத்து செய்து விட்டு தற்போது தனது 2 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார்.

யூடிப்பில் வீடியோக்களை பதிவிட்டும் ரியால்ட்டி ஷோக்களில் பங்கேற்றும் பரபரப்பாக காணப்படுகிறார்.

இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் ஒன்றில் கலந்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

இதில் சுரேஷ் சக்கரவர்த்தி, சஞ்சீவ், ப்ரீதாவுடன் எடுத்த செல்பி புகைப்படங்களை பதிவிட்டார்.

சஞ்சீவ்வை ‘என் ப்ரதர்’ என குறிப்பிட்டு இருந்தார் வனிதா.

‘சஞ்சீவ் எப்படி உங்களுக்கு ப்ரதர்’? என ரசிகர்கள் கேள்வி கேட்டனர்.

இதற்கு வனிதா அளித்த விளக்கத்தில் ’என் தாயார் மஞ்சுளாவின் சொந்த சகோதரி ஷ்யாமளா மகன் தான் சஞ்சீவ்’ என குறிப்பிட்டுள்ளார்.

அப்படி என்றால் வனிதா & சஞ்சீவ் இடையே உள்ளது அக்கா-தம்பி உறவு என்பதை ரசிகர்கள் ஒப்புக் கொண்டனர்.

நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் சஞ்சீவ்வும் ஒருவர். இருவரும் பல படங்களில் நண்பர்களாக நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Do you know What relationship between Vanitha and Sanjeev

தனி விமானத்தில் தன் தங்கத்தை தாங்கி கொண்டு பறந்த விக்னேஷ் சிவன்

தனி விமானத்தில் தன் தங்கத்தை தாங்கி கொண்டு பறந்த விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் நடிகர் பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன்.

தற்போது ரவுடி பிக்சர்ஸ் பெயரில் தன் நீண்ண்ண்ண்ட நாள் காதலி நயன்தாராவுடன் இணைந்து படங்களை தயாரித்து வருகிறார்.

காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.

இவர் நயன்தாராவை ‘என் தங்கமே’ என்று செல்லமாக அழைப்பதுண்டு.

இந்த காதல் பறவைகள் அடிக்கடி பாரீன் பறப்பதுண்டு.

தற்போது கொரோனா காலம் என்பதால் தனி விமானத்தில் பறக்கின்றனர்.

இந்த நிலையில் தனி விமானத்தில் சென்னையில் இருந்து கொச்சிக்கு சினிமா சூட்டிங்குக்காக பறந்துள்ளனர்.

மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் ‘பாட்டு’ என்ற படத்தில் பத்து பாசிலுடன் நயன்தாரா நடிக்கிறார்.

இதற்காக தான் தனது காதலன் விக்னேஷையும் அழைத்து சென்றுள்ளார் நயன்.

தனி விமானத்தில் சென்ற இவர்கள் கொச்சியில் தரை இறங்கிய போது எடுத்த போட்டோஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

தன் காதலி நயன் விமானப் படிகளில் இறங்கி வரும்போது தாங்கி பிடித்து அவர் இறங்க உதவி செய்யும் போட்டோக்களும் வைரலாகி வருகிறது.

Vicky and Nayanthara fly to Cochi for Pattu shoot

More Articles
Follows