தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ஷூ’. (REPEAT SHOE)
இப்படத்தின் வித்தியாசமான தலைப்பை போன்று இந்த படம் கொஞ்சம் வித்தியாசமாக தான் உருவாகியுள்ளதாம்.
நிட்கோ ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் கார்த்தி மற்றும் நியாஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
இந்த படத்தில் யோகிபாபுவுடன் இணைந்து ரெடின் கிங்ஸ்லீ, குக் வித் கோமாளி பாலா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
அறிமுக இயக்குனர் கல்யாண் என்பவர் இயக்க இந்த படத்திற்கு சி.எஸ்.சாம் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் ‘ஷூ’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் பாக்யராஜ், கதாசிரியர் லியாகத் அலிகான், எழுத்தாளர் அஜயன் பாலா, ஜாகுவார் தங்கம், நடிகர் கூல் சுரேஷ், நடிகை ஷீலா, நடிகர் விஜய் விஷ்வா உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
இந்த விழாவில் கதாசிரியர் லியாகத் அலிகான் & எழுத்தாளர் அஜயன் பாலா இருவரும் பேசும்போது…
“தமிழ் சினிமாவில் கதாசிரியர்களை மதிப்பதில்லை. ஆனால் கேரளாவில் ஒரு படம் உருவாகும் போதே Script writer யார் என்றே கேட்கிறார்கள். கதை தான் அங்கு நாயகன். அந்த நிலை இங்கு வர வேண்டும்.”
இவ்வாறு ஒரே கருத்தை இருவரும் பேசினர்.