தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா பொது முடக்கத்தால் கடந்த மார்ச் 24ஆம் தேதியன்று புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மதுக்கடைகள் மூடப்பட்டன.
50 நாட்களை கடந்த வேளையில் கடந்த மே 19 ஆம் தேதியே புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.
இதனையடுத்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மதுக்கடைகளை திறக்க எடுக்கப்பட்ட முடிவுக்கு ஒப்புதல் கேட்டு துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் மதுபானங்கள் மீது கொரோனா (COVID 19) வரி விதிக்க கோரிய கிரண்பேடி, அதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார்.
மேலும் தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு இணையாக விலையை உயர்த்தவும் ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.
இதனால் மதுக்கடைகளை திறப்பதில் சிக்கல் நீடிக்கவே மதுப்பிரியர்களை வருத்தமடைய செய்தது.
இந்த நிலையில் கோவிட் வரி விதிப்பதற்கு புதுச்சேரி அமைச்சரவை ஒப்புதல் அளித்ததால், மதுபான கடைகளை திறப்பது தொடர்பான முடிவுக்கு கிரண்பேடி அனுமதி அளித்தார்.
இதனையடுத்து நாளை மே 25வது நாள் ரம்ஜான் தினத்தன்று புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்கப்படலாம் என தெரிய வந்துள்ளது.