தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 7 வயது சிறுமி ஜெயப்பிரியா கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு புதரில் வீசப்பட்டாள்.
இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதனையடுத்து Justice for Jayapriya என்ற ஹேஷ்டேக் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவத்திற்கு கோலிவுட் பிரபலங்கள் பலரும் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
ராதிகா சரத்குமார்…
அந்த சிறுமிக்கு நடந்த கொடுமை பற்றி படிக்கும்போதே என் இதயம் நொறுங்குகிறது. கண்களில் கண்ணீர் சிந்தாமல் அதைப் பற்றி எழுதக்கூட வலிமை இல்லை, குற்றவாளிகளை விடக்கூடாது.
அதுல்யா ரவி…
தமிழகத்தில் இதயத்தை வலிக்கச் செய்யும் இன்னொரு சம்பவம் நடந்துள்ளது. குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்கிறவர்கள் மாற மாட்டார்கள். கடுமையான தண்டனைகள் கொடுக்க வேண்டும்.
பிக்பாஸ் நடிகர் கவின்..
இன்னும் எத்தனை ஹேஷ்டேக் போடணும், இன்னும் எத்தனை நியாயம் கேட்கணும். இன்னும் எவ்வளவு போராடனும். அந்த குழந்தை மாஸ்க் போட்டு சிரிச்சுக்கிட்டு இருக்குற ஒரு போட்டோ, இன்னொரு போட்டோவை பார்க்க கூட முடியல.
நல்லா நல்லா இருப்பிங்ககளா டா நீங்க எல்லாம். ஒரு குழந்தையை கற்பழித்து கொல்றதை விட பெரிய தப்பு என்ன இருக்க முடியும். பொண்ண பெத்தவன் எல்லாம் பயப்படுற மாதிரி இந்த தப்பெல்லாம் செய்றவனும் பயப்படனும் தானே. அதுக்காகவாச்சும் ஒரு சட்டம் பொறக்க கூடாதா?
பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா
என்ன ஒரு வெட்கக்கேடான முட்டாள்தனம். 7 வயது பெண் குழந்தையை எப்படி பாலியல் பலாத்காரம் செய்ய முடியும்.. இதற்கு ஒரே ஒரு தண்டனை உடனே தூக்கிலிட வேண்டும். என் இதயம் நொறுங்கிவிட்டது. கடவுள் அந்த சிறுமியின் குடும்பத்திற்கு அதிக பலத்தை அளிக்கட்டும்.