தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு தினம் தினம் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் மட்டும் 33,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 1000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.
இந்த வைரஸை கட்டுப்படுத்த வருகிற மே 3 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதனால் மக்கள் தங்கள் வேலைகளை இழந்து செய்வதறியாமல் உள்ளனர்.
திருமணம் உள்ளிட்ட எந்தவொரு நல்ல காரியங்களையும் செய்யாமல் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் புதுமைக்கு பெயர் போன கேரளால் ஒரு வித்தியாசமான திருமணம் அரங்கேறியுள்ளது.
கோட்டயம் பகுதியை அடுத்துள்ள கங்கனசேரியை சேர்ந்த வங்கி ஊழியரான ஸ்ரீஜித் நடேசன் என்பவருக்கும், ஐடி பணியாற்றி வரும் அஞ்சனா என்ற பெண்ணிற்கும் சில மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயக்கப்பட்டது.
அதன்படி இந்தாண்ட 2020 ஏப்ரல் 26 ஆம் தேதி அன்று திருமணம் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது.
ஆனால் தற்போது ஊரடங்கு அமலில் உத்தரப் பிரதேசத்தில் பணிபுரியும் மணப்பெண்ணால் கேரளாவிற்கு வர முடியாமல் போய்விட்டது.
இதனையடுத்து திருமணத்தை வீடியோ கால் மூலம் நடத்தியுள்ளனர்.
மணமகன் செல்போனில் வீடியோ காலில் தெரிந்த மணமகள் அஞ்சனாவிற்கு தாலி கட்டினார். அதாவது செல்போனுக்கு தாலி கட்டியுள்ளார்.
அப்போது உ.பியில் இருந்து மணமகள் அஞ்சனா தானே தனது கழுத்தில் தாலி கட்டிக்கொண்டார்.
என்ன கொடுமை சார் இது என்றுதானே நினைக்கிறீர்கள்.. அதாவது கொரோனா கொடுமை இதுதானோ…
ஆனால் உலகத்தில் பல பேர் செல்போனுடன் தான் குடும்பம் நடத்தி வருகின்றனர் என்பது வேறு கதை..
Kerala Bride Groom ties Thaali to the Cell phone