தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொடிய வைரசான கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் உலக மருத்துவர்களே திணறி வருகின்றனர்.
இந்த வைரஸ் பாதிப்பால் உலகமெங்கும் பல்வேறு மரண செய்திகளை கேட்டு வருகிறோம்.
இந்தியாவில் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
தமிழகம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் வைரஸ் பரவல் மிக வேகமாக உள்ளது.
அதுபோல் கர்நாடகாவிலும் தற்போது அதிகரித்து வருகிறது.
முக்கியமாக பெங்களுருவில் இந்த வைரஸ் பாதிப்பு நபர்களின் எண்ணிக்கை கூடி வருகிறது.
எனவே ஊரடங்கு நீடிக்கப்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதனிடையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா அண்மையில் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கை நீடிக்க வேண்டாம் என்றால் மக்களை வீட்டிலேயே பாதுக்காப்பாக இருக்க வலியுறுத்துங்கள் என தெரிவித்திருந்தாராம்.