தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தனலட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் டாக்டர். ஸ்ரீனி சௌந்தரராஜன் நாயகனாக நடித்து இயக்கியுள்ள புதிய படம் ‘கபில் ரிட்டன்ஸ்’.
நாயகியாக நிமிஷா, பருத்திவீரன் சரவணன், ரியாஸ்கான், வையாபுரி, மாஸ்டர் பரத், சத்தியமூர்த்தி, சார்லஸ் ஆண்டனி, ரேஷ்மி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் கதை,திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் ஸ்ரீனி சௌந்தரராஜன்.
இவர் படத்தை பற்றி கூறுகையில்…
“மகன் இன்ஜினியராக வேண்டும் என்று தந்தையும், டாக்டராக வேண்டும் என்று தாயும், கலெக்டராக வேண்டும் என்று தாத்தாவும் கனவு காண்கிறார்கள்.
திடீரென கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பு மகனைத் தேடி வர, தந்தையோ மகனுக்கு கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பை ‘வேண்டாம்’ என மறுக்கிறார்.
மேலும் தான் ஒரு கொலை குற்றவாளி என்ற மன உளைச்சலுக்கும் ஆளாகிறார்.
இதன் பின்னணி குறித்து அவரது மனைவி ஆராய, அவருக்கு திடுக்கிடும் ஒரு விஷயம் தெரிய வருகிறது. இது தான் தான் கதையின் திருப்பு முனையாக அமைகிறது. இவ்வாறான ஒரு சுவாரசியமான கதைக்களத்துடன் சஸ்பென்ஸ் திரில்லருடன் சொல்லப்படும் கதை தான், ‘கபில் ரிட்டன்ஸ்’ என்றார்.
இப்படத்தின் ஒளிப்பதிவை ஷியாம் ராஜ் கவனிக்க,ஆர்.எஸ்.பிரதாப் ராஜ் இசையமைத்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னை, திருச்சி, மலைக்கோட்டை, உறையூர், மதுரை, திருமங்கலம், திடியன் மலை போன்ற பகுதிகளில் நடைபெற்றது.
இந்தப் படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேச்சாளர் சுப வீரபாண்டியன், கவிஞர் சினேகன், இயக்குனர்கள் ஆர்வி உதயகுமார், பேரரசு, நடிகர் வையாபுரி உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினார்.
இயக்குனர் பேரரசு பேசும்போது..
“நானும் சுப வீர பாண்டியனும் ஒரே மேடையில் இருப்பதால் பலருக்கு சந்தேகம் வந்திருக்கலாம்.. நான் ஆன்மீகவாதி சுப வீரபாண்டியன் ஓர் நாத்திகவாதி.
எங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் கபில் ரிட்டர்ன்ஸ் படத்திற்காக நாங்கள் இணைந்து வாழ்தேதி வந்துள்ளோம். சுப வீரபாண்டியன் கடவுள் மறுப்பாளர். என்றாலும் அவருக்கு கடவுள் இருக்கிறார். காரணம் வாழ்த்த வேண்டும்.. மற்றவர்களை பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் இருக்கிறது.. எனவே அது கடவுளின் குணம். மற்றவர்களை வாழ்த்த நினைப்பதும் கடவுளின் எண்ணமே” என்று பேசினார்.
அதன் பின்னர் சுப வீரபாண்டியன் பேசும்போது.. “இந்த வயதிலும் நான் ஓய்வு இல்லாமல் உழைத்துக் கொண்டு இருக்கிறேன். எனவே பலரும் எப்படி உழைக்கிறீர்கள் என கேட்கிறார்கள். நாம் ஓய்வெடுக்க நினைத்து விட்டால் அது தேங்கி விடும். ஓடிக்கொண்டே இருப்பதால் உடல்நிலை நன்றாக இருக்கிறது” என்று பேசினார்.
Kapil returns movie news updates