தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மலக்குழிக்குள் உயிரை மாய்த்துக் கொண்டவர்களின் கதைகளைத் தேடி ஆவணமாக்கியவர் திவ்யா பாரதி.
சமீபத்தில் பெரியார் சாக்ரடீஸ் விருது பெற்றார் திவ்யாபாரதி.
2009ஆம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவியாக இருந்த போது போராட்டத்தில் ஈடுபட்டதாக திவ்யாபாரதி மீது புகார் உள்ளது.
8 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கில் மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார் திவ்யாபாரதி.
தலித் மாணவர் விடுதியில் பாம்பு கடித்து இறந்த மாணவரின் உடலை வாங்க மறுத்து மதுரை மருத்துவமனையில் போராடினார் திவ்யா பாரதி.
கைது செய்யப்பட்ட திவ்யபாரதி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவாக முகநூலில் எழுதிய மாணவி வளர்மதி கைது செய்யப்பட்ட நிலையில் திவ்யாபாரதியின் கைதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.