தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல பின்னணி பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவருக்கு எக்மோ & வெண்டிலேட்டா் கருவிகளின் துணையுடன் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.
எஸ்.பி.பி.க்குச் சா்வதேச மருத்துவ நிபுணா்களும், உள்நாட்டு மருத்துவக் குழுவினரும் சிகிச்சையளித்து வருகின்றனர்.
எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை நிா்வாகமும் தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான தகவல்களை அவரது மகன் சரண் தினமும் தெரிவித்து வருகிறார்.
ஆனால் எஸ்.பி.பி்க்கு எப்படி கொரோனா தொற்று ஏற்பட்டது? என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.
கடந்த ஜூலை 30, 31-ல் நடைபெற்ற தெலுங்கு டிவி நிகழ்ச்சி சூட்டிங்கில் பாடகர் எஸ்.பி.பி. ராமோஜி ஃபிலிம் ஸ்டூடியோவில் கலந்துகொண்டுள்ளார்.
இதில் எஸ்.பி.பி.யுடன் படப்பிடிப்பில் பங்கேற்ற பாடகி மாளவிகா, கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார்.
எனவே மாளவிகாவினால் தான் எஸ்.பி.பிக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது என தகவல் பரவியது.
இந்த நிலையில் பாடகி மாளவிகா விளக்கம் அளித்துள்ளார்.
“கடந்த 5 மாதங்களில் நானோ என் குடும்பத்தினரோ வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை.
டிவி படப்பிடிப்புக்காக தான் முதல்முறையாக வெளியே வந்தேன்.
எஸ்.பி.பி. பங்கேற்ற நிகழ்ச்சி ஜூலை 30 அன்று படமாக்கப்பட்டது.
சூட்டிங் 2-வது நாளில் பங்கேற்ற நான்கு பாடகிகளில் நானும் ஒருவர்.
ஒருவேளை எனக்கு கரோனா இருந்திருந்தால் என்னுடன் ஒப்பனை அறையைப் பகிர்ந்த தொகுப்பாளருக்கு கொரோனா வந்திருக்கும்.
எஸ்.பி.பி.க்கு கொரோனா என அறிந்தவுடன் நான் பரிசோதனை மேற்கொண்டேன்.
அதன் ரிசல்ட் ஆகஸ்ட் 8 அன்று கிடைத்தது.
என்னுடன் சேர்ந்து என் தந்தை, என் தாய், என் மகள் என அனைவருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. என் கணவருக்கு கரோனா இல்லை.
நாங்களும் இப்போது கடினமான சூழலில் உள்ளோம். எனவே வதந்திகளைப் பரப்பாதீர்.
வதந்தி பரப்பியவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என மாளவிகா விளக்கம் அளித்துள்ளார்.