குடும்பத்தை காக்க போராட்டம்.; அமானுஷ்ய சம்பவங்கள் நிறைந்த ‘ஜெனி’

குடும்பத்தை காக்க போராட்டம்.; அமானுஷ்ய சம்பவங்கள் நிறைந்த ‘ஜெனி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்த் திரையுலகில் வெற்றி எழுத்தாளராக தயாரிப்பாளராக வலம் வந்தவர் திரைப்பட வித்தகர் தூயவன்.

அவரது புதல்வர் பாபு தூயவன் தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் பயின்று ‘கதம் கதம்’ என்ற படத்தை தயாரித்து இயக்கியிருந்தார்.

‘இட்லி’ என்ற படத்தையும் தயாரித்திருக்கிறார். அவரது மேற்பார்வையில் அவரது துணைவியார் A. முஸ்தரி தயாரித்திருக்கும் திகில் படம் தான் ‘ஜெனி’.

திரைப்படக் கல்லூரியில் பயின்று சில படங்களையும் ஏராளமான தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியிருக்கும் நித்தியானந்தம் இயக்கத்தில் இந்தப்படம் உருவாகி இருக்கிறது.

ஜெனி

பாரீஸ் ஜெயராஜ் படத்தின் முக்கிய வேடத்தில் நடித்த விவாந்த் நாயகனாக நடித்துள்ளார்.

‘மைடியர் பூதம்’ திரைப் படத்தில் குழந்தை நாயகனாக மிரட்டிய பரம் விக்னேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர்களோடு மைதிலி, பிஜாய் மேனன், ஆக்க்ஷன் பிரகாஷ் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

ஜெனி

துஷ்ட ஆவி ஒன்று சிறுவனை ஆக்ரமிக்க முயல அதிலிருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் காக்க அந்த சிறுவனும் அவர் தந்தையும் போராடும் திகிலூட்டும் அமானுஷ்ய சம்பவங்கள் நிறைந்த இந்தப் படத்தின் கதை, திரைக் கதையை அறிவாற்றல் பிதா எழுத வசனத்தை பாஸ்கர் ராஜ் எழுதியிருக்கிறார்.

யுதீஷ் இசையமைத்துள்ளார். திரைப் படக் கல்லூரி மாணவர்களான கீதாகரன் ஒளிப்பதிவு செய்துள்ளார் ஹரிகுமரன் படத்தொகுப்பு செய்துள்ளார். இணை தயாரிப்பு – A.M.சயீஃப், நிர்வாக தயாரிப்பு – K. தங்கராஜ்.

ஜெனி

இரசிகர்களை இருக்கை நுனியில் பதைபதைப்போடு பார்க்க வைக்கும் திரைப்பட உலகம் பிரமாண்டமாய் பிரபஞ்ச அளவுக்கு விரிந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் குறுகிய முதலீட்டில் குறுகிய கால அளவில் நல்ல படைப்பாளிகளை மட்டுமே வைத்து அழுத்தமான படைப்பாக இந்த படம் உருவாகி இருக்கிறது.

இரசிகர்கள் நல்ல உணர்வு பூர்வமான படங்களுக்கு என்றென்றும் ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் பாபு தூயவன் – A. முஸ்தரி தயாரித்திருக்கும் ‘ஜெனி’ திரைப்படம் விரைவில் வெள்ளித் திரையில் உங்களை பரவசப்படுத்த வருகிறது.

இது ஒரு திரைப்படக் கல்லூரி மாணவர்களின் மாறுபட்ட படைப்பு.

ஜெனி

Horror Thriller movie Jeni updates

விவசாயிகளுக்கு எதிரான நவீன கயவர்களை அழிக்கும் படம்.; பாலாஜிக்கு ‘ஜம்பு மஹாரிஷி’ பேரவை பாராட்டு

விவசாயிகளுக்கு எதிரான நவீன கயவர்களை அழிக்கும் படம்.; பாலாஜிக்கு ‘ஜம்பு மஹாரிஷி’ பேரவை பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று ஏப்ரல் 21.. திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் பாலாஜி அவர்கள் திரைக்கதை, வசனம் எழுதி, நடித்து, இயக்கி, தயாரித்த ஜம்பு மஹாரிஷி திரைப்படம் வெளியிடப்பட்டது.

முதல் காட்சியை ஜம்பு மஹாரிஷி பேரவை நிர்வாகிகளோடு பல்வேறு சமூதாய சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் C.R பாஸ்கரன் & P.அன்பரசன் ஆகியோர்கள் பார்வையிட்டனர்.

பொதுவாக நாங்கள் திரைப்படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த படத்தை பாருங்கள், இந்த படத்தை பாருங்கள் என்று விளம்பரப்படுத்துவதில்லை.

ஏதோ ஒரு போட்டோவை படத்தில் காண்பித்து அதை வாம்மா மின்னல்… என்று படத்தில் வரவைத்து, இது சமூதாய படம் என்று பிரச்சாரம் செய்து, மேலும் பல்வேறு சமூதாயங்க ளிடையே பீதியையும், பரபரப்பை உறுவாக்கி, பூதாகாரப்படுத்தி, பல்வேறு குழுக்களை தயார் செய்து சமூதாய மக்களிடையே நிதிகொடு, பேனர் வை, படத்தைப்பார், போஸ்டர் ஒட்டுனு பிரச்சாரம் செய்து வணிகமாக்கி பணம் கொழிக்கும் தயாரிப்பாளர் /இயக்குநர் இருக்கும் சமுதாயத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, விவசாயியாக வாழ்ந்து யாரிடமும் கையேந்தாமல், 14 வருடங்களாக போராடி, யாரின் உதவியில்லாமல், சமுதாய மக்களிடையே சுயவிளம்பரம் செய்யாமல், யாரின் ஆதர மற்றும் தயவுமில்லாமல், சமூதாயத்தை பெருமை படுத்தும் வகையில் ஜம்பு மஹாரிஷியின் வரலாற்றை திரைப்படமாக எடுத்து வெளியிட்ட பாலாஜியை பாராட்டவேண்டும்.

படத்தின் முதல் பாகம் விவசாயத்தின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையிலும் இந்திய விவசாயத்தை கெடுக்க நினைக்கும் வெள்ளையரோடு இணைந்து செயல்படுகின்றவரை அழித்து இந்திய விளைநிலங்களை காப்பதாக படம் அமைந்துள்ளது.

இரண்டாவது பாதி ஜம்பு மஹாரிஷி வரலாறு, யாகம் செய்தல், அதில் தோன்றிய ருத்ரவீரன், வாதாபியை அழித்து இந்த உலகத்தை காப்பதாக எடுக்கப்பட்டுள்ளது.

கடைசியாக இரண்டையும் இணைத்து ஜம்பு மஹாரிஷியின் ஆசியோடு விவசாயிகளுக்கு எதிரான நவீன கயவர்களை அழிப்பதாக படம் அமைந்துள்ளது.

சுயவிளம்பரமில்லாத பாலாஜியை பாராட்டுகிறோம்.

ஜம்புமஹாரிஷி படம் வெற்றியடைய வேண்டும் என வாழ்த்துகிறோம்.

இங்ஙனம்
ஜம்பு மஹாரிஷி பேரவை

Jambu Maharishi association appreciates Director Balaji

ரஜினி – சிம்பு பாராட்டு.. ஒரு நல்ல படம் என்ன செய்யும் என்பதை ‘அயோத்தி’ காட்டியுள்ளது.. – சசிகுமார்

ரஜினி – சிம்பு பாராட்டு.. ஒரு நல்ல படம் என்ன செய்யும் என்பதை ‘அயோத்தி’ காட்டியுள்ளது.. – சசிகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்து வெளியான படம் ‘அயோத்தி’.

முதலில் தியேட்டரில் வெளியாகி பின்பு ஓடிடியில் வெளியாகி தற்போது 50 நாட்களைக் கடந்துள்ள நிலையில் பட குழுவினர் வெற்றி விழா கொண்டாடினர்.

இந்த விழாவில் *நடிகர்-இயக்குநர் சசிகுமார் பேசியதாவது…*

இந்தப்படம் ஓடிடிக்கு விற்றதால் அவசரமாக வெளியிட வேண்டிய சூழ்நிலை. எந்த புரமோசனும் செய்யவில்லை. ஆனால் ரவீந்திரன் சார் முடிந்த அளவு நிறைய தியேட்டர்கள் போடுகிறேன் என்று அவரால் முடிந்த அத்தனையும் செய்தார்.

படம் வெளியானதே நிறைய பேருக்கு தெரியவில்லை. ஆனால் பத்திரிகை நண்பர்கள் பாராட்டி எழுத ஆரம்பித்த பிறகு பலர் கவனிக்க ஆரம்பித்தார்கள்.

மக்கள் தங்கள் படமாக கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். இந்தப்படம் குறித்து மந்திரமூர்த்தி சொன்னபோதே இதன் ஆழம் எனக்கு புரிந்தது. இந்தப்படத்தை மகேந்திரன் சாருக்கும், பாலு மகேந்திரா சாருக்கும் போட்டுக்காட்ட எனக்கு ஆசை. அவர்கள் இருந்திருந்தால் கண்டிப்பாக காட்டியிருப்பேன்.

மகேந்திரன் சார் நண்டு என ஒரு படம் எடுத்தார். அதில் இதே போல் இந்தி கதாப்பாத்திரங்கள் இந்தியில் பேசுவார்கள். அப்போதே அதைச் செய்து விட்டார்.

ஆனால் தயாரிப்பாளர் ஒத்துக் கொள்ளாததால் அது படத்தில் வரவில்லை. இந்தப்படம் மூலம் அவர் ஆத்மா சாந்தியடையும். படம் பார்த்துவிட்டு நிறைய பிரபலங்கள் பாராட்டினார்கள்.

ரஜினி சார் போன் செய்து பாராட்டினார். நண்பர் சிம்பு பாராட்டினார். ஒரு நல்ல படம் என்ன செய்யும் என்பதை இந்தப்படம் காட்டியுள்ளது. நான் இனிமேல் எந்த மாதிரி படம் செய்ய வேண்டும் என்று சொல்லியுள்ளீர்கள். எல்லோருக்கும் நன்றி.

sasikumar speech in ayothi 50 days celebration

சினிமா இருக்கும்வரை ‘அயோத்தி’ படம் பேசப்படும் – சமுத்திரக்கனி

சினிமா இருக்கும்வரை ‘அயோத்தி’ படம் பேசப்படும் – சமுத்திரக்கனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்து வெளியான படம் ‘அயோத்தி’.

முதலில் தியேட்டரில் வெளியாகி பின்பு ஓடிடியில் வெளியாகி தற்போது 50 நாட்களைக் கடந்துள்ள நிலையில் பட குழுவினர் வெற்றி விழா கொண்டாடினர்.

இந்த விழாவில் *இயக்குநர் – நடிகர் சமுத்திரகனி பேசியதாவது…*

சமீபமாக நானும் சசியும் அடிக்கடி சந்தித்துகொள்ள முடிவதில்லை. எப்படியும் பார்த்து விடுவோம், அப்போது நாங்கள் செய்யும் படங்கள் பற்றி பேசிக்கொள்வோம். அப்போதே இந்தப்படம் பற்றி மிக நம்பிக்கையோடு சொன்னார்.

ஒரு படம் 10 வருடம் 20 வருடம் 50 வருடம் கடந்தும் பேசப்படும். இந்தப்படம் திரைத்துறை இருக்கும் வரை பேசப்படும்.

இந்தப்படம் பற்றி தெலுங்கில் என்னிடம் கேட்டார்கள் இப்படி ஒரு படம் வந்திருக்கிறது நீங்கள் பாருங்கள் தெலுங்கில் நீங்கள் செய்ய முடியுமா? அது என் தம்பி படம் என் சகோதரர் தான் தயாரிப்பாளர் என பெருமையோடு சொன்னேன்.

இந்தப்படம் மொழி தாண்டி பலரை ஈர்த்திருக்கிறது அது தான் உண்மையான வெற்றி. இந்தப்படத்தை இந்தியில் அப்படியே வெளியிட வேண்டும். அங்கும் இது ஜெயிக்கும். மந்திரமூர்த்தி முதல் படத்திலேயே தன்னை நிரூபித்து விட்டான்.

சசி நிஜ வாழ்க்கையிலேயே எல்லோருக்கும் ஓடி உதவும் மனிதன். யாஷ்பால் சர்மா, ப்ரீத்தி நடிப்பு அற்புதம். இன்னும் இந்தப்படம் ஓடும். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

Samuthirakani speech in ayothi 50 days celebration

என் வீட்டுக்கு இதுவரை நான் 1 ரூபாய் தந்ததில்லை.. – ‘அயோத்தி’ மந்திரமூர்த்தி

என் வீட்டுக்கு இதுவரை நான் 1 ரூபாய் தந்ததில்லை.. – ‘அயோத்தி’ மந்திரமூர்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்து வெளியான படம் ‘அயோத்தி’.

முதலில் தியேட்டரில் வெளியாகி பின்பு ஓடிடியில் வெளியாகி தற்போது 50 நாட்களைக் கடந்துள்ள நிலையில் பட குழுவினர் வெற்றி விழா கொண்டாடினர்.

இந்த விழாவில் இயக்குநர் மந்திரமூர்த்தி பேசியதாவது…*

இந்தப்படம் ரிலீஸான பிறகு எல்லோரும் சொன்னது: இந்தப்படம் சரியான சமயத்தில் சரியான கருத்துடன் வந்திருக்கிறது என்றார்கள் அது என் மூலம் நடந்திருக்கிறது, அவ்வளவு தான். அதற்கு இயற்கைக்கும் இறைவனுக்கும் நன்றி. என் அப்பா அம்மாவுக்கு நன்றி.

என் வீட்டுக்கு இதுவரை 1 ரூபாய் தந்ததில்லை ஆனால் என்னிடம் எதுவும் எதிர்பார்க்காமல் ஆதரித்த பெற்றோருக்கு நன்றி. என் குரு பாலாஜி அருள் சார், அவர் இப்போது உயிரோடில்லை. அவருக்கு நன்றி. சசி சார் ஒத்துக் கொண்டிருக்காவிட்டால் இந்தப்படம் நடந்திருக்காது. தனக்கு காட்சிகள் இல்லை என்றாலும், ஒதுங்கி நின்று நடித்தார்.

வேறு எந்த நடிகரும் செய்திருக்க மாட்டார்கள். சசி அண்ணாவிற்கு நன்றி. யஷ்பால், பிரீத்தி அற்புதமாக நடித்தார்கள். இசையமைப்பாளர் ரகுநந்தனை படுத்தி எடுத்து விட்டேன்.

இப்படத்தில் அனைவரும் தங்கள் படமாக உழைத்தார்கள். படத்தை மக்களிடம் கொண்டு சென்ற பத்திரிகையாளர்களுக்கு நன்றி. இறுதியாக இந்தப்படத்தை நான் எடுக்கிறேன் என்று எனக்கு ஊக்கமளித்த ரவீந்தரன் சாருக்கு நன்றி.

Director Manthira Moorthy speech in ayothi 50 days celebration

‘அயோத்தி’ பட யஷ்பால் என் இயக்கத்தில் அப்போதே நடித்து விட்டார் – சுரேஷ் கிருஷ்ணா

‘அயோத்தி’ பட யஷ்பால் என் இயக்கத்தில் அப்போதே நடித்து விட்டார் – சுரேஷ் கிருஷ்ணா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்து வெளியான படம் ‘அயோத்தி’.

முதலில் தியேட்டரில் வெளியாகி பின்பு ஓடிடியில் வெளியாகி தற்போது 50 நாட்களைக் கடந்துள்ள நிலையில் பட குழுவினர் வெற்றி விழா கொண்டாடினர்.

இந்த விழாவில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா பேசியதாவது…*

இந்த கமலா திரையரங்கு பழைய நினைவுகளை தருகிறது. அண்ணாமலை, பாட்ஷா 25வது வாரம் கோலாகலமாக இங்கு ஓடின.

இந்த காலத்தில் 50 நாட்களை கடப்பது அரிதாக மாறிவிட்டது. அந்த வகையில் பிரமாண்ட வெற்றியை சாத்தியமாக்கியிருக்கிறது.

அயோத்தி. இந்த கதையை நம்பி தயாரித்த டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரனுக்கு ஹேட்ஸ் ஆஃப். இப்படி ஒரு கதையை புதுமுக இயக்குநரை நம்பி எடுப்பது மிகப்பெரிய விசயம். இது ஒரு அற்புதம். இந்தக்கதை ஓடும் என நம்பிய படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்.

சசிகுமார் பேசிக்கொண்டிருக்கும் போது கதை தான் ஹீரோயிசம் என்றார், அது முழுக்க உண்மை. அனுபவம் வாய்ந்த இயக்குநர்கள் ஒரு படத்தை இயக்குவது போல் இயக்கியிருகிறார் மந்திரமூர்த்தி.

யஷ்பால் ஆளவந்தானில் நடித்திருந்தார் இதில் பின்னியிருக்கிறார். அந்த சின்னப்பெண் மிரட்டிவிட்டார். மொழி ஒரு தடையாகவே இல்லை. இந்தப்படம் வெற்றிபெற்றதற்கு படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்.

*நடிகை ப்ரீத்தி அஸ்ரானி பேசியதாவது…*

உங்கள் பாரட்டுகளுக்கு நன்றி. தமிழில் இந்த மாதிரி ஒரு வாய்ப்பு முதல் படத்திலேயே கிடைத்தது மிகப்பெரிய ஆசிர்வாதம். எனக்கு வாய்ப்பளித்த மூர்த்தி சார், ரவீந்திரன் சார், சசிகுமார் சாருக்கு நன்றி. அயோத்தி படம் மனித நேயத்திற்கு மொழி இல்லை என்பதை சொல்கிறது, அனைவரும் அதை பின்பற்றுவோம் எனக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

*நடிகர் யஷ்பால் சர்மா பேசியதாவது…*

நீங்கள் காட்டும் அன்பும், பாராட்டுகளும் விருதை விட மிகப்பெரிது. என்னை இந்தப்படத்தில் நடிக்க வைத்த இயக்குநருக்கு பெரிய நன்றி. சசிகுமார் நாங்கள் வெகு நட்போடு இருந்தோம்,

அவருக்கு என் நன்றி. கோவிட் காலத்தில் பல இடைஞ்சலுக்கு மத்தியில் இந்தப்படத்தை எடுத்தார்கள். நான் நடித்ததில் மிகச்சிறந்த படம். அனைவருக்கும் என் நன்றி..

suresh krishna speech in ayothi 50 days celebration

More Articles
Follows