ஸ்ரீகோகுலம் மூவீஸ் தயாரிக்கும் ரொமாண்டிக் காமெடி படத்தில் நடிக்கும் ஹரிஷ் கல்யாண்!

ஸ்ரீகோகுலம் மூவீஸ் தயாரிக்கும் ரொமாண்டிக் காமெடி படத்தில் நடிக்கும் ஹரிஷ் கல்யாண்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

harish kalyanஹரிஷ் கல்யாண் இளம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, ஒரு புதிய அலையை உருவாக்கி இருக்கிறார். இளைய தலைமுறையினரை ஈர்க்கும் வகையான படங்களுக்கு ஒரு பெஞ்ச்மார்க்கை வைத்த “பியார் பிரேமா காதல்” படத்தினை தொடர்ந்து, அடுத்து ‘இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்’ என்ற காதலை மையப்படுத்திய படமும், இளம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து அவரது அடுத்த படத்தை மூத்த இயக்குனர் சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்குகிறார். சஞ்சய் இயக்குனர் விஜயிடம் உதவி இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரொமாண்டி காமெடி படம் ஒரு இளைஞனின் “ஜோதிட நம்பிக்கைகள்” பற்றி பேசுகிறது. முக்கியமாக திருமணம் செய்து கொள்ள விரும்பும் அந்த இளைஞன் மீது இந்த நம்பிக்கைகள் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை பேசுகிறது. சமீபத்தில் “காயம்குளம் கொச்சூன்னி” போன்ற பல பெரிய பட்ஜெட் மலையாள படங்களை தயாரித்த ஸ்ரீ கோகுலம் மூவீஸ், கோகுலம் கோபாலன் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த கோகுலம் கோபாலன் சகல வசதிகளையும் கொண்ட ஜி.ஸ்டூடியோவை சொந்தமாக வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

“என்னுடைய நாயகன் விருப்பம் மிகவும் குறுகியதாக இருந்தது. இன்றைய இளைஞர்கள் தங்களுடன் தொடர்பு படுத்திக்கொள்ள கூடிய ஒரு நாயகனை தேர்ந்தெடுக்க வேண்டி இருந்தது. மிக முக்கியமாக திருமணம் ஆகாத ஒரு இளம் நாயகன் நடிக்க வேண்டியிருந்தது. ஹரிஷ் கல்யாண் இந்த படத்தில் நடிக்க மிகவும் பொருத்தமாக இருந்தார். கதையை கேட்டவுடன் அவரின் உற்சாகமும், ஈடுபாடும் எனக்கு பெரிய உந்துதலை கொடுத்தது. என் முதல் படத்திலேயே எனக்கு இப்படி ஒரு பெரிய தயாரிப்பாளர் கிடைத்தது என் பாக்கியம். சிறந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்ந்தெடுக்க எனக்கு ஊக்கமளித்தனர். நாயகி மற்றும் மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க தேர்வு நடந்து வருகிறது. தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும் நடக்கிறது. மார்ச் மாதத்தின் மத்தியில் படப்பிடிப்பை தொடங்க உழைத்து வருகிறோம். தலைப்பை இன்னும் இறுதி செய்யவில்லை, தலைப்பை அறிவித்த பிறகு ரசிகர்களின் ஆர்வம் இன்னும் அதிகமாகும்” என்றார் இயக்குனர் சஞ்சய் பாரதி.

தமிழ் ராக்கர்ஸை கடவுள் தான் அழிக்க வேண்டும்.. விஷால் நம்பிக்கை

தமிழ் ராக்கர்ஸை கடவுள் தான் அழிக்க வேண்டும்.. விஷால் நம்பிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal met CM edappadi palanisamyஇளையராஜா 75″ நிகழ்ச்சிக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்ததற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து விஷால் நன்றி கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நன்றி தெரிவித்த கையோடு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளையும் முதலமைச்சரிடம் வைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசை தாங்கள் கடவுளாக நினைப்பதாகக் கூறிய விஷால், அரசு நினைத்தால் தமிழ் ராக்கர்ஸை ஒழித்து விடலாம் என்று தெரிவித்தார்.

அட்லி இயக்கும் தளபதி 63 படத்தில் கிறிஸ்தவராக விஜய்.?

அட்லி இயக்கும் தளபதி 63 படத்தில் கிறிஸ்தவராக விஜய்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thalapathy 63 stillsவிஜய் & அட்லீ 3வது முறையாக இணையும் படத்தை தயாரிக்கிறது ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ்.

தற்காலிகபாக ‘தளபதி 63’ என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தில் விளையாட்டுப் பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய்.

இதில் விஜய்யுடன் நயன்தாரா, கதிர், விவேக், யோகி பாபு, ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா ஆகியோரும் நடிக்கின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

கலை இயக்குநராக முத்துராஜ் பணியாற்ற, ரூபன் எடிட்டிங் செய்கிறார்.

இதன் படப்பிடிப்பு, சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தாண்டு தீபாவளிக்கு இப்படத்தை வெளியிடுகின்றனர்.

இந்நிலையில், விஜய்யின் கதாபாத்திரத்துக்கு மைக்கேல் என்ற கிறிஸ்தவ பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திறனற்ற தமிழக அரசு; ஆட்சியிலிருந்து அனுப்பப்பட வேண்டும்… கமல் பேச்சு

திறனற்ற தமிழக அரசு; ஆட்சியிலிருந்து அனுப்பப்பட வேண்டும்… கமல் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Haasanமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பொள்ளாச்சியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

அவர் பேசியதாவது..

மக்கள் என்னை எப்படி பார்க்கிறார்கள் என்பதை உணர முடிகிறது.

ஈரோட்டில் ஒரு வயதான பெண்மணி என்னிடம் வந்து நீங்களும் எங்களை ஏமாற்றிவிடாதீர்கள் என்றார்.

மோடி அரசு விமர்சனக் குரல்களை தடுக்க வெற்றுக் கூச்சலிடுகிறது.

தமிழக அரசை யாரும் மதிப்பீடு செய்ய வேண்டாம். அது திறனற்றது. ஆட்சியிலிருந்து அனுப்பப்பட வேண்டிய அரசாக அது உள்ளது.” எனப் பேசினார்.

பொது நலன் கருதி விழாவில் புயலை கிளப்பிய தமிழ் ராக்கர்ஸ்

பொது நலன் கருதி விழாவில் புயலை கிளப்பிய தமிழ் ராக்கர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pothu nalan karuthiபொது நலன் கருதி பட ட்ரைலர் வெளியீட்டு விழாவில் திருமுருகன் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.

சீயோன் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இவருடன் சிறப்பு விருந்தினர்களாக பிடி. செல்வகுமார், மிஷ்கின், வசந்தபாலன், உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டார்.

அப்போது தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் நடத்துபவர்களை கண்டுபிடிக்க முடியவில்லையா அல்லது கண்டுபிடித்து விட்டு அமைதியாக இருக்கிறீர்களா என தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலுக்கு இயக்குனர் வசந்தபாலன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

மலையாளம், தெலுங்கு உள்ளிட் மற்ற மொழி படங்கள் வெளியாகி 6 மாதம் ஆனால் கூட அந்த இணையத்தில் படங்கள் இல்லை. ஆனால் தமிழ் படம் மட்டும் உடனே வெளியாகிறது என ஆவேசத்துடன் பேசினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய இயக்குனர் மிஷ்கின், தமிழ் ராக்கர்ஸை பிடிப்பதற்காக இரவு பகலாக விஷால் உழைத்ததை தான் நேரில் பார்த்ததாக கூறினார்.

பின்னர் படக்குழுவினரை வாழ்த்தினார்.

சுற்றியிருக்கும் அனைத்தையும் விரும்ப சொல்லும் படம் ‘தேவ்’ : கார்த்தி

சுற்றியிருக்கும் அனைத்தையும் விரும்ப சொல்லும் படம் ‘தேவ்’ : கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor karthiரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள தேவ் திரைப்படம் வருகிற பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பாக லட்சுமண் தயாரித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

விரைவில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.

இதில் கதாநாயகன் கார்த்தி, கதாநாயகி ரகுல்ப்ரீத் சிங், தயாரிப்பாளர் லட்சுமண், இயக்குனர் ரஜத் ரவிசங்கர், கேமராமேன் வேல்ராஜ் , கலை இயக்குனர் ராஜீவன், விநியோஸ்தகர் முரளி, நடிகர் ஆர்.ஜே. விக்னேஷ், நடிகை அம்ருதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கார்த்தி பேசும்போது

தயாரிப்பாளர் லக்ஷ்மனும் நானும் குழந்தை பருவ நண்பர்கள். எப்போதும் ஒன்றாக தான் இருப்போம். அவரைப் பார்த்து இப்படி ஒரு உண்மையான மனிதன் இருக்க முடியுமா? என்று ஆச்சர்யபட்டிருக்கிறேன்.

அவரின் தாத்தா வெற்றி படமான “மதுர வீரனை” தயாரித்தவர். லக்ஷ்மன் அவரின் பரம்பரையிலிருந்து வந்து இப்படத்தை தயாரிப்பதில் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் இருக்கிறது.

இப்படம் காதல் கதை மட்டுமல்ல. உங்களை சுற்றியிருக்கும் அனைத்தையும் விரும்ப வேண்டும் என்று கூறும் படம். இந்த நிமிடம் உன்னுடைய இதயம் என்ன சொல்கிறதோ அதை செய் என்ற கருத்தை தாங்கி வரும்.

ரஜாத் திறமையான இயக்குநர். அவர் இன்னும் நிறைய படங்கள் இயக்க வேண்டும் என்று அவரை பார்க்கும் போதெல்லாம் கூறுவேன்.

ரகுல் ப்ரித் சிங் சிறந்த நடிகை. இதுபோல அவர் பல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். இப்படத்திற்காக ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அனைவருக்கும் இப்படம் மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.

தயாரிப்பாளர் லக்ஷ்மன் பேசுகையில்,

குழந்தை பருவத்தில் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே கார்த்தி இருந்தார். அவருடன் இருக்கும் தருணங்கள் அழகானதாக இருக்கும். ரஜாத் கதை சொல்லும்போது என்ன கூறினாரோ அதை அப்படியே படமாக்கிக் கொடுத்திருக்கிறார். பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம். அங்கு சவாலான பல தருணங்களை சந்தித்தோம். பட குழுவினரின் இந்த செயலைக் கண்டு நான் பிரமித்தேன் என்றார்.

ரகுல் ப்ரீத் சிங் பேசும்போது

இயக்குநர் ரஜாத் என் மேல் நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரத்தைக் கொடுத்திருக்கிறார். கதை கேட்டதும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிலும் என்னுடைய கதாபாத்திரத்தை விரும்பி நடித்தேன். இயக்குநர் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார்.

கார்த்தியைப் பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவருடன் பணியாற்றுவது கடினமாக இருக்காது. ‘தீரன் அதிகாரம் ஒன்று’ எங்கள் கூட்டணி வெற்றி பெற்றது.

அதுபோல் இப்படத்திலும் வெற்றி பெரும் என்று நம்புகிறேன். கார்த்திக்குடன் இன்னும் பல படங்களில் இணைந்து பணியாற்றும் அழகான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார்.

இயக்குநர் ரஜாத் ரவி ஷங்கர் பேசும்போது

இந்த கதை தான் என்னுடைய முதல் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஒரு இரவு உணவு வேளையில் பேசிக்கொண்டிருக்கும் போது தான் முடிவானது.

இப்படம் எடுத்து முடிக்க குறைவான நேரம் தான் ஒதுக்கினோம். ஆனால் அதற்குள் படப்பிடிப்பிற்கு தேவையான அனைத்து உபகாரணங்களையும் தயாரிப்பு நிர்வாகம் சிறப்பாக செய்து கொடுத்தார்கள்.

கார்த்திக் அண்ணாவின் முதல் படத்திலிருந்தே நான் அவருடைய ரசிகன். இப்படத்திற்காக கடினமாக உழைத்திருக்கிறார். மேலும் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்.

ரகுல் ப்ரீத் சிங்கை பொறுத்தவரை வந்தோம், நடித்தோம், சென்றோம் என்ற பழக்கம் அவரிடம் இருக்காது. அவரது நடிப்பில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவது போல் தான் இருக்கும். இந்த படத்தில் அவருடைய முழு திறமையையும் காட்டியிருக்கிறார்.

அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி என்றார்.

More Articles
Follows