தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விக்னேஷ் சிவன் இயக்கிய ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார் சூர்யா.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில், ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.
இந்தப் படத்துக்காக சென்னையில் ஈவிபி பொழுதுபோக்குப் பூங்காவில் அம்பாசமுத்திரம் போல செட் போடப்பட்டுள்ளது.
இந்த படத்தை இந்தாண்டு 2018 தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவுள்ளனர்.
இப்படத்தைத் தொடர்ந்து, ‘இறுதிச்சுற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா என்பதை பார்த்தோம்.
இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க இருக்கிறாராம்.