இந்திய சுதந்திர தினம் 75.. கப்பலோட்டிய தமிழன் வஉசி 150..; ஜிவி.பிரகாஷ் அருண்ராஜா ஆகியோரின் புதிய முயற்சி

இந்திய சுதந்திர தினம் 75.. கப்பலோட்டிய தமிழன் வஉசி 150..; ஜிவி.பிரகாஷ் அருண்ராஜா ஆகியோரின் புதிய முயற்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சுதந்திரதின 75வது ஆண்டு கொண்டாட்டங்கள் வரும் ஆகஸ்டு 15-லிருந்து துவங்குகிறது.

கப்பலோட்டிய தமிழன் என்று புகழப்படும் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டமும் வரும் செப்டம்பர் 5-லிருந்து தொடங்குகிறது.

இந்திய சுதந்திர போருக்கு எப்படி தமிழ்நாடு முன்னோடியாக திகழ்ந்ததோ, அதுபோல இந்திய சுதந்திரதின கொண்டாட்டத்திற்கும், தமிழ்நாடு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.

50-வது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசையில் வைரமுத்து அவர்களின் வரிகளில் பரத்பாலா அவர்களின் இயக்கத்தில், ‘தாய்மண்ணே வணக்கம்’ – ‘வந்தே மாதரம்’ என்ற பாடல் வெளியிடப்பட்டு இந்திய அளவில் பிரபலமானது.

வரும் 75வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தில் தமிழர்களின் தியாகத்தை உணர்த்தும் விதமாகவும் இந்தியாவெங்கும் இருக்கும் சுதந்திர வீரர்களின் பெருமைகளை போற்றும்படியும் ஏ.ராஜசேகர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் அருண்ராஜா காமராஜ் வரிகளில் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில் பிரமாண்டமாக மற்றுமொரு பாடல் உருவாகிறது.

தமிழில் தொடங்கி இந்தியாவில் திரைப்படங்கள் உருவாகும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஒரியா, மராட்டி, பெங்காலி, போஜ்புரி, பஞ்சாபி, குஜராத்தி, கொங்கனி உள்ளிட்ட 12 மொழிகளில் இந்த பாடல் உருவாகிறது.

இந்தியாவில் உள்ள முன்னணி திரைப்பட கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் இப்பாடல் உருவாக்கத்தில் பங்கு கொள்ளவிருக்கிறார்கள்.

கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை இயற்கை எழில் கொஞ்சும் பல்வேறு இடங்களிலும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களிலும் இப்பாடல் படமாக்கப்பட இருக்கிறது.

இந்தியாவில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் காட்சி ஊடகங்களிலும் இப்பாடல் திரையிடப்பட இருக்கிறது.

இப்படப்பிடிப்பின் சிறப்பு நிகழ்வாக கனெக்டிங் இந்தியா வித் கலர்ஸ் (Connecting India With Colors) என்ற தலைப்பில் உலக சாதனை முயற்சியாக 6 கி.மீ. நீளத்திற்கு கேன்வாஸ் பெயிண்டிங் (Canvas Painting) வரையப்படுகிறது.
தமிழகம் தொடங்கி இந்தியாவெங்கும் சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களின் வரலாற்று நிகழ்வுகள் வரையப்படுகிறது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 75 முன்னணி ஓவியக்கலைஞர் வரைகிறார்கள்.

இந்த உலக சாதனையை (Guinness book of records, limca book of records and Asian book of records) -ல் பதிவு செய்யப்போகிறோம்.

இந்த பாடலின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் (FIRST LOOK MOTION POSTER) வெளியீடு வரும் செப்டம்பர் 5-ல் தொடங்கும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது ஆண்டு விழாவில் வெளியிடப்பட இருக்கிறது.

இவ்விழாவில் வ.உ.சி. எழுதிய அனைத்து நூல்களையும் உள்ளடக்கிய வ.உ.சி பெட்டகம்’ வெளியிடப்பட இருக்கிறது.

வ.உ.சி-யின் 150வது ஆண்டை குறிக்கும் பொருட்டு உலகெங்கும் இருக்கும் 150 தமிழ் ஆளுமைகள் எழுதும் ‘வ.உ.சி 150’ என்ற புத்தகம் வெளியிடப்படவிருக்கிறது.

இந்தியாவில் உள்ள சுதந்திர போராட்ட வீரர்களில் வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு தான் முதன் முதலில் அரசியல் வாழ்க்கை வரலாறு 1906-ல் எழுதப்பட்டது.

வெள்ளையர்களால் இந்தியாவில் தடை செய்யப்பட்டு லண்டன் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுவிட்ட அந்த நூலை மீட்டெடுத்து ( நூலகர் மற்றும் ஆய்வாளர் திரு.ரங்கையா முருகன்) தமிழில் தமிழ்பெருஞ்சொல் வ.உ.சி. என்றும் ஆங்கிலத்தில் தி பிக் வேர்ட் வி.ஒ.சி. THE BIG WORD V.O.C.என்றும் வெளியிடுகிறோம்.

இவையனைத்தும் ஆடியோ புத்தகமாகவும் (AUDIO BOOK ), வீடியோ புத்தகமாகவும் (VIDEO BOOK), கிண்டில் வர்ஷனாகவும் (KIDLE VERSION) வ.உ.சி. செயலியாகவும் (V.O.C. MOBILE APP) இலவசமாக டிஜிட்டலில் பதிவேற்றுகிறோம்.

மாபெரும் இந்நிகழ்வை நல்லறிஞர்களின் துணை கொண்டு சக்ரா அறக்கட்டளை நிறுவனர் சக்ரா ராஜசேகர் மற்றும் விதை புத்தக வெளியீட்டு நிறுவனர் ஆ.சுப்ரமணியன் இணைந்து முன்னெடுத்திருக்கிறார்கள்.

GV Prakash and Arun Raja joins for special song

‘நெருப்பா இருப்பான்…’ ஹிப் ஹாப் ஆதியை நினைத்து மயங்கிய மாதுரி

‘நெருப்பா இருப்பான்…’ ஹிப் ஹாப் ஆதியை நினைத்து மயங்கிய மாதுரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹிப் ஹாப் ஆதியின் “சிவகுமாரின் சபதம்” படத்திலிருந்து, முதலில் வெளியிடப்பட்ட இரண்டு சிங்கிள் பாடல்களின் பெரு வெற்றியை தொடர்ந்து, மூன்றாவது பாடலாக “நெருப்பா இருப்பான்” தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ரொமாண்டிக் வகை பாடலை பத்மலதா பாடியுள்ளார். படத்தில் கதாநாயகி (மாதுரி ) கதாநாயகனை (ஆதி) காதலித்து, அவரது அழகை மற்றும் போற்றத்தக்க பண்பை, நினைத்துருகி பாடுவதாக வரும் பாடல் இது.

முதல் இரண்டு பாடல்கள் போலவே, இப்பாடலும் ரசிகர்களிடம் பேராதரவு பெற்று வருகிறது.

முதன்மை பாத்திரத்தில் நடிப்பது மற்றும் இசையமைப்பதோடு, ஹிப்ஹாப் தமிழா இப்படத்திற்கு கதை, திரைக்கதை, பாடல்கள், எழுதி படத்தை இயக்கவும் செய்துள்ளார்.

அருண்ராஜா DF. Tech (ஒளிப்பதிவு), தீபக் S. துவாரகநாத் (படத்தொகுப்பு), சந்தோஷ் (நடன இயக்குனர்), ஸ்ரீஜித் சாரங் (கலரிஸ்ட்), வாசுதேவன் (கலை இயக்குனர்), Nectar Pixels Media (VFX), தபஸ் நாயக் (ஒலி கலவை), நிகில் மேத்யூஸ் (ஒலி பொறியாளர்), Sync Cinema (SFX), அமுதன் பிரியான் (டிசைன்ஸ்), அஸ்வந்த் ராஜேந்திரன் (நிர்வாக தயாரிப்பாளர்) ஆக பணியாற்றியுள்ளனர்.

TG தியாகராஜன், செந்தில் தியாகராஜன், அர்ஜீன் தியாகராஜன் ஆகியோர் SathyaJyothi Films சார்பில் ஹிஃபாப் தமிழா மற்றும் Indie Rebels உடன் இணைந்து சிவக்குமார் சபதம் படத்தை தயாரித்துள்ளனர்.

Hiphop Aadhi starrer Sivakumarin Sabadham has unveiled the third single Neruppa Iruppan

சர்ஜுன் இயக்கத்தில் போலீஸ் அதிகாரியாக அதர்வா அசத்தும் ‘துணிந்த பின்’

சர்ஜுன் இயக்கத்தில் போலீஸ் அதிகாரியாக அதர்வா அசத்தும் ‘துணிந்த பின்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில், முன்னணி நடசத்திரமாக வலம் வரும் இளம் நடிகர் அதர்வா முரளி.

விரைவில் வெளியாகவுள்ள “நவரசா” ஆந்தாலஜி திரைப்படத்தில் தைரியம் பற்றிய பகுதியில், இயக்குநர் சர்ஜுன் KM இயக்கியுள்ள “துணிந்த பின்” கதையில் அனுபவமில்லாமல் தடுமாறும் காவல் அதிகாரி ‘வெற்றி’ பாத்திரத்தில் அதர்வா நடித்துள்ளார்.

தமிழின் முன்னணி கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ள “நவரசா” ஆந்தாலஜி திரைப்படம், Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று உலகளவில் வெளியாகிறது.

இயக்குநர் சர்ஜூன் KM உடன் இணைந்து பணிபுரிந்த அனுபவம் மற்றும் வெற்றி என்ற கதாபாத்திரத்தில் நடித்தது பற்றி, நடிகர் அதர்வா முரளி கூறியதாவது..

இயக்குநர் சர்ஜுன் இந்த படத்தின் திரைக்கதையை பற்றி விவரிக்கும் போது, எந்த உணர்வை பற்றிய கதையை சொல்லப்போகிறார், என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தேன்.

இந்தப் படம் தைரியத்தை அடிப்படையாக கொண்டு உருவாக உள்ளது என்று அவர் விவரித்த பின்னர், என் மனம் சந்தோஷத்தின் உச்சிக்கு சென்றது.

நான் ஸ்பெஷல் டாஸ்க் போர்சில் உள்ள ஒரு சிறப்பு அதிகாரியாக (Special Task Force officer) நடிக்கவுள்ளேன், என்று கூறியபோது ஆடம்பர காவல் அதிகாரி உடையில், மிக ஸ்டைலாக என்னை நானே கற்பனை செய்து கொண்டேன்.

இந்தப்படம் எனக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

இயக்குநர் சர்ஜுன் உடன் பணி புரிந்தது மற்றும் வெற்றி என்ற கதாபாத்திரத்தை செய்தது மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது.

“நவரசா” மனித உணர்வுளில் 9 ரசங்களான, கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை கொண்டு, ஒன்பது வெவ்வேறு அழகான கதைகளை கூறும் ஆந்தாலஜி திரைப்படமாகும்.

தமிழின் 40 க்கும் மேற்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள், ஆளுமைமிக்க இயக்குநர்கள் பங்களிப்பில், இந்தியாவின் மிக முக்கிய படைப்பாக, “நவரசா” உருவாகியுள்ளது.

Justickets நிறுவனத்தின் சார்பில் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளனர்.

ATHARVAA RECALLS HIS EXPERIENCE WORKING WITH FILMMAKER SARJUN KM FOR THE UPCOMING NETFLIX ANTHOLOGY ‘NAVARASA’

BREAKING ஆகஸ்ட் 9 வரை தமிழகத்தில் ஊரடங்கு..; பள்ளிகள் தியேட்டர்கள் திறக்கப்படுமா.? எதற்கெல்லாம் தடை.? எதற்கெல்லாம் அனுமதி.. ஒரு பார்வை..

BREAKING ஆகஸ்ட் 9 வரை தமிழகத்தில் ஊரடங்கு..; பள்ளிகள் தியேட்டர்கள் திறக்கப்படுமா.? எதற்கெல்லாம் தடை.? எதற்கெல்லாம் அனுமதி.. ஒரு பார்வை..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாளை ஜூலை 31ஆம் தேதியுடன் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு முடிவடைகிறது.

எனவே தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆகஸ்ட் 9 வரை ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு.

கூடுதலாக எவ்வித தளர்வுகளுமின்றி 31-7-2021 முதல் 9-8-2021 காலை 6.00 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.

இதில் கூறப்பட்டுள்ளதாவது…

*கூடுதலாக தளர்வுகள் இன்றி, ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு

சில பகுதிகளில், அதிகளவில் கூட்டம் சேருவது தொடர்ந்து காணப்பட்டால் அப்பகுதியை மூடலாம்.

விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினருக்கு முதல்வர் உத்தரவு

கூட்டம் அதிகமுள்ள பகுதிகளை மூட, மாவட்ட ஆட்சியர்கள் அல்லது மாநகராட்சி ஆணையர்கள் நடவடிக்கை எடுக்கலாம்.

கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து கடைகளும், உரிய காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.

பொது இடங்களுக்கு வருவோர் அனைவரும், மாஸ்க் அணிவதும், தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயம்.

கடைகள், வணிக வளாகங்களின் நுழைவு வாயிலில் சானிடைசர் கட்டாயம் வைக்க வேண்டும்.

கடைகளுக்கு வருவோருக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும்.

கடைகளில் பணிபுரிவோரும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்

தமிழ்நாட்டில் கொரோனா 3ஆவது அலை வராத வகையில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை திறக்கப்படாது.

சினிமா தியேட்டர்கள் திறக்கப்படாது. அதற்கான தடை தொடரும்.

நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகள் அனுமதி இல்லை.

மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

MK Stalin extends TN lockdown till August 9th

தன் மகன் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய விஷால்.; ‘அப்பாவின் ஆனந்தம்’ வைரலாகும் வீடியோ

தன் மகன் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய விஷால்.; ‘அப்பாவின் ஆனந்தம்’ வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் தயாரிப்பாளர் தயாரிப்பாளர் சங்கத் முன்னாள் தலைவர் என பன்முகம் கொண்டவர் விஷால்.

இவர் நேற்று, மிக செல்லமாக வளர்த்து வரும் நாய் ஆகஸ்ட் பிறந்த நாளை கோலகலமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

தடபுடல் ஏற்பாடுகளுன், குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து பிறந்த நாள் கேக்கை வெட்டி கொண்டாடியுள்ளார்.

அதனிலும் மேலாக ஆகஸ்ட் உடன் இணைந்து எடுத்துக்கொண்ட ஒரு வீடியோ அவரது பேரன்பை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. அந்த வீடியோவில், சாப்பாட்டு மேடையில் அகஸ்டின் அமர்ந்து மனிதன் போல் உடையணிந்து கைகளால் பிஸ்கட் எடுத்து சாப்பிடுகிறது. தண்ணீர் குடிக்கிறது.

இறுதியில் பின்னால் இருந்து நடிகர் விஷால் எழுந்து அந்த மேஜிக்கை நிகழ்த்திய சந்தோஷத்தில் சிரிக்கிறார்.

இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

தனது பையன் என செல்லம் கொண்டாடும் அகஸ்டின் பிறந்த நாளை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்திருப்பது, சிறு உயிர்களிடத்திலும் பேரன்பை காட்டும் அவரது நல்ல மனதை வெளிப்படுத்துவதாக இணையத்தில் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

பிராணியிடம் அன்பு செலுத்துங்கள்.

Actor Vishal’s son #August s bday video goes viral

அவர்கள் ஸ்பைடர் மேனோ சூப்பர் மேனோ அல்ல..; ‘பொன்னியின் செல்வன்’ அப்டேட் அளித்த சுஹாசினி

அவர்கள் ஸ்பைடர் மேனோ சூப்பர் மேனோ அல்ல..; ‘பொன்னியின் செல்வன்’ அப்டேட் அளித்த சுஹாசினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இப்படம் உருவாகி வருகிறது.

ஏஆர். ரஹ்மான் இசையமைக்க விக்ரம் கார்த்தி சரத்குமார் ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இதன் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடந்து வருகிறது.

அது தொடர்பான புகைப்படம் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் லீக் ஆனது.

இன்று இயக்குனர் மணிரத்னத்தில் மனைவியும் நடிகையுமான சுஹாசினி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதில்… “அவர்கள் ஸ்பைடர் மேனோ, சூப்பர் மேனோ அல்ல ஆனால், கேமரா மேன்கள், தங்கள் உருவத்தை மறையச் செய்வதற்கு அந்த ஆடைகள் பொருத்தமானவை,” என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

Suhasini Mani Ratnam gives Ponniyin Selvan update

More Articles
Follows