தமிழ்நாட்டிற்கு வந்து தெலுங்கு பேசும் ‘காட்ஃபாதர்’.; தமிழ் இப்போ இல்லையாம்.!

தமிழ்நாட்டிற்கு வந்து தெலுங்கு பேசும் ‘காட்ஃபாதர்’.; தமிழ் இப்போ இல்லையாம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் மற்றும் சிரஞ்சீவியின் கொனிடேலா புரடக்சன் கம்பெனி இணைந்து தயாரித்துள்ள காட்பாதர் திரைப்படம் கடந்த அக்-5ஆம் தேதி வெளியானது.

சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் மோகன்ராஜா இயக்கியுள்ளார்.

இந்தப்படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது 100 கோடி வசூல் என்கிற இலக்கை தாண்டி இன்னும் வரவேற்புடன் இந்தப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தப்படத்தில் சல்மான்கான், நயன்தாரா, சத்யதேவ், சமுத்திரக்கனி, ஷயாஜி ஷிண்டே, தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஆந்திரா தெலங்கானாவில் இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து வரும் அக்டோபர் 14ம் தேதி தமிழகத்திலும் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு வெளியாக இருக்கிறது.

அதுமட்டுமல்ல இந்தப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இன்னும் ஒரு சில வாரங்களில் இதன் தமிழ் பதிப்பும் வெளியாக இருக்கிறது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிபர்’ திரைப்படத்தை தான் காட்பாதர் என்கிற பெயரில் ரீமேக் செய்துள்ளனர்.

அதேசமயம் இந்த படத்தை தெலுங்கு ரசிகர்களுக்கு பிடிக்கும் விதமாக மிகவும் நேர்த்தியாக ரீமேக் செய்து மோகன்ராஜா இயக்கியிருந்தது இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.

படத்தின் கதாநாயகியாக நடித்த நயன்தாரா மற்றும் நட்புக்காக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பாலிவுட் நடிகர் சல்மான்கான் ஆகியோரின் பங்களிப்பும் இந்த படத்தின் சிறப்பம்சமாக அமைந்து விட்டதும் குறிப்பிடத்தக்கது.

3 நாயகிகளுடன் 3 வேடங்களில் பான் இந்தியா படத்தில் டோவினோ தாமஸ்

3 நாயகிகளுடன் 3 வேடங்களில் பான் இந்தியா படத்தில் டோவினோ தாமஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் டோவினோ தாமஸ் தனது திரைப்பயணத்தில் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கும் திரைப்படம் ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’.

(இவர் தனுஷின் ‘மாரி 2’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.)

இப்படத்தை அறிமுக இயக்குனர் ஜிதின் லால் இயக்குகிறார். மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் கதையை சொல்லும் இப்படத்தில் டோவினோ மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.

படத்தின் டைட்டில் கேரக்டர்களான மணியன், அஜயன், குஞ்சிகேலு மூன்று பாத்திரங்களில் மாறுபட்ட தோற்றங்களில் டோவினோவே நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதையை சுஜித் நம்பியார் எழுதியுள்ளார். பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

பான்-இந்திய திரைப்படமாக பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’ படம் 3டியில் வெளியாகவுள்ளது.

கீர்த்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சுரபி லட்சுமி என மூன்று நாயகியகள் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இளைஞர்களின் உள்ளம் கவர்ந்த தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கும் முதல் மலையாளப் படம் இதுவாகும்.

மேலும் இப்படத்தில் பாசில் ஜோசப், கிஷோர், ஹரிஷ் உத்தமன், ஹரீஷ் பேரடி, ஜெகதீஷ் ஆகியோர் மற்ற முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை UGM Productions தயாரிக்கிறது.

Magic Frames நிறுவனம் தயாரிப்பில் இணைந்துள்ளது. இப்படத்தின் திரைக்கதை கேரளாவின் களரி எனும் தற்காப்புக் கலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் பிரபல இசை அமைப்பாளர் திபு நினன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தில் நிறைய ஆக்‌ஷன் காட்சிகள் இருப்பதால், நடிகர் டோவினோ பிரத்யேகமாக களரி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

தயாரிப்பு வடிவமைப்பாளர் – கோகுல் தாஸ், ஆடை வடிவமைப்பாளர் – பிரவீன் வர்மா, ஒப்பனை – ரோனெக்ஸ் சேவியர்,
புரடக்சன் கண்ட்ரோலர் – பாதுஷா
எடிட்டிங் – ஷமீர் முகமது,
ஸ்டில்ஸ் – ஜோமோன் T ஜான்
மார்க்கெட்டிங் டிசைன் – பப்பட் மீடியா டிஜிட்டல் மார்க்கெட்டிங் – தனய் சூர்யா & திலீப் லெக்கலா (trendy tolly)
மக்கள் தொடர்பு – சதீஷ் குமார் (AIM)

அஜயந்தே ரண்டம் மோஷனம்

Ajayante Randam Moshanam Kicks-off with an auspicious pooja ceremony

#AjayanteRandamMoshanam Kicks-off with an auspicious pooja ceremony ?

Pan india film releasing in 3D ? ing @ttovino @IamKrithiShetty @aishu_dil #SurabhiLajshmi

A #JithinLal ?

#TovinoThomas @dhibuofficial #UGMProductions @magicframes2011 @urstanaysuriya #ARMMovie @teamaimpr

‘ஏழு கடல் ஏழு மலை’-யில் நிவின் பாலி – அஞ்சலி ஜோடியை இணைக்கும் ராம்

‘ஏழு கடல் ஏழு மலை’-யில் நிவின் பாலி – அஞ்சலி ஜோடியை இணைக்கும் ராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் ராம்.

இவர் இயக்கிய ‘தங்க மீன்கள்’ படம் நல்ல வரவேற்பை பெற்று மூன்று தேசிய விருதுகளை வென்றது.

மேலும் ராம் இயக்கிய தரமணி மற்றும் பேரன்பு ஆகிய படங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

தங்கமீன்கள் & சவரக்கத்தி & சைக்கோ ஆகிய படங்களிலும் நடிகராக நடித்துள்ளார் இயக்குனர் ராம்.

இந்த நிலையில் தற்போது பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி & அஞ்சலி ஜோடியை புதிய படத்திற்காக இயக்கி வருகிறார் ராம்.

இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க NK.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய மதி.VS படத்தொகுப்பு செய்து வருகிறார்.

நடன இயக்குனராக சாண்டியும் ஸ்டண்ட் இயக்குனராக ஸ்டண்ட் சில்வாவும் பணியாற்றியுள்ளனர்.

V ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு “ஏழு கடல் ஏழு மலை” என பெயரிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மேலும் டைட்டிலை அறிவிக்கும் வகையில் டைட்டில் அறிவிப்பு வீடியோவையும் படக்குழுவி வெளியிட்டுள்ளது.

இன்று அக்டோபர் 11ஆம் தேதி இயக்குனர் ராம் மற்றும் நடிகர் நிவின்பாலி ஆகியோரின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Nivin Pauly and Anjali Joining movie title release

இந்தியாவின் ஆஸ்கர் விருதுக்கான பட்டியலில் இருந்த ‘செல்லோ ஷோ’ வின் குழந்தை நட்சத்திரம் ராகுல் கோலி காலமானார்

இந்தியாவின் ஆஸ்கர் விருதுக்கான பட்டியலில் இருந்த ‘செல்லோ ஷோ’ வின் குழந்தை நட்சத்திரம் ராகுல் கோலி காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஆஸ்கார் நுழைவுத் தேர்வாகியதில் இருந்தே ‘லாஸ்ட் ஃபிலிம் ஷோ’ (குஜராத்தியில் ‘செல்லோ ஷோ’) டிரேண்டிங்கில் உள்ளது.
இப்படத்தில் முக்கிய வேடத்தில் ராகுல் கோலி மரணம் அடைந்தார் என்ற அதிர்ச்சி என செய்தி வெளியாகியுள்ளது.

10 வயதான ராகுல் கோலி , ரத்த புற்றுநோயால் பாதிக்க பட்டிருந்தார் . பல மாதங்களாக புற்றுநோயுடன் போராடிய அவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் மரணமடைந்த செய்தி திரை உலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

‘தளபதி 67’ படத்தில் வாய்ப்பு இல்லை – நெருங்கிய நண்பரிடம் லோகேஷ் கனகராஜ்

‘தளபதி 67’ படத்தில் வாய்ப்பு இல்லை – நெருங்கிய நண்பரிடம் லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீப காலமாக சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருக்கும் திரைப்படம் விஜய்யின் ‘தளபதி 67’ தான்.

கெளதம் வாசுதேவ் மேனன் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்க தன்னை அணுகியதை உறுதிப்படுத்திய நிலையில், த்ரிஷா, சமந்தா, கீர்த்தி சுரேஷ், பிருத்விராஜ் சுகுமாரன், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலி கான் மற்றும் பலர் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் கலையரசன் தனது நெருங்கிய நண்பர் லோகேஷ் கனகராஜால் தளபதி 67 படத்தில் நடிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டதாக ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

உண்மைச்சம்பவம்: ‘வந்தியத்தேவன் மீது PCR வழக்கு’ வழங்கும் ஜெம்ஸ் பிக்சர்ஸ்

உண்மைச்சம்பவம்: ‘வந்தியத்தேவன் மீது PCR வழக்கு’ வழங்கும் ஜெம்ஸ் பிக்சர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மரப்பாச்சி, ஆண்கள் ஜாக்கிரதை, படங்களை தயாரித்த “ஜெம்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரே நேரத்தில், “வந்தியத்தேவன் மீது PCR வழக்கு, “அக்கினிப்பாதை என இரண்டு படங்களை தயாரிக்க உள்ளது.

அதில் ,”வந்தியத்தேவன் மீது பி சி ஆர் வழக்கு” படத்தை” ஒரு நடிகையின் வாக்குமூலம்” படத்தை இயக்கிய ராஜ் கிருஷ்ணா இயக்குகிறார் .

மற்றொரு படமான ‘அக்னி பாதை’ படத்தை தயாரிப்பாளர் முருகானந்தம் இயக்குகிறார்.

படத்தின் கதை, வசனத்தை தயாரிப்பாளர் முருகானந்தம் எழுதுவதோடு, கதையின் நாயகனாகவும் நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஒளிப்பதிவு :அருள்.
இசை :பாலகணேஷ் .
எடிட்டிங் :B.S.வாசு.
கலை : ஜனா .
மக்கள் தொடர்பு : மணவை புவன்.
இணை தயாரிப்பு – ஆயர்பாடி கண்ணன்
தயாரிப்பு – ஜெம் பிக்சர்ஸ் சார்பில் முருகானந்தம்.
இயக்கம் – ராஜ் கிருஷ்ணா

” வந்தியத்தேவன் மீது பி சி ஆர் வழக்கு ” படத்தைப் பற்றி இயக்குனர் ராஜ் கிருஷ்ணாவிடம் கேட்டபோது …

கடந்த ஆட்சியில் ஒரு கல்வியாளன், ஒரு அரசியல்வாதியால் பந்தாடப்பட்ட உண்மை சம்பவம் அடிப்படையாக கொண்டு இந்த கதையை உருவாக்கியுள்ளோம்.

உலகில் கல்வி என்பது ஒருவனுக்கு கிடைத்துவிட்டால் அது அவனது ஏழு தலைமுறையை காக்கும்.

ஆனால் அந்த கல்வியை காசுக்கு விற்கும் அரசியல்வாதிகள் கல்வியாளனாக மாறி நடத்தும் அநியாயங்கள் பற்றிய உண்மை சம்பவம் இது என்றார் ராஜ் கிருஷ்ணா.

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 26 ஆம் தேதி தொடங்கி , ஒரே கட்ட படப்பிடிப்பில் முடித்து ஜனவரியில் திரையிட திட்டமிட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து ஜெம் பிக்சர்ஸின் அடுத்த படமான “அக்னி பாதை” படப்பிடிப்பை நவம்பரில் தொடங்க உள்ளதாக தயாரிப்பாளர் முருகானந்தம் தெரிவித்தார்.

More Articles
Follows