தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்திற்கு இளையராஜா சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதில் தான் இசையமைத்த பாடல்களை இனி தன் அனுமதியின்றி எவரும் பாடக்கூடாது என இளையராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஒரு தனியார் டிவிக்கு இளையராஜாவின் சகோதரரும், பிரபல இசையமைப்பாளருமான கங்கை அமரன் கருத்து தெரிவித்துள்ளார். அதில்…
இளையராஜாவுக்கு அகங்காரம் உள்ளது. தான் இசையமைத்த பாடல்களுக்கு ராயல்டி கேட்பது முட்டாள்தனமானது.
ராயல்டி கேட்டுதான் பாடல்கள் கேட்க வேண்டும் என மக்களை கட்டாயப்படுத்த முடியுமா?
இசையை தெய்வீகமாக நேசிப்பவர்களிடம் இப்படி சொல்லலாமா?
ராயல்டி பெற்றுதான் வாழவேண்டும் என்ற நிலைமையில் இருக்கிறாரா? இளையராஜா எப்போதுதான் திருந்துவார்..? என கங்கை அமரன் சாரமாரி கேள்விகளை கேட்டுள்ளார்.
Gangai amaran reaction to Ilayaraja legal notice to SPB