தமிழ் புத்தாண்டிலும் தமிழ் சினிமாவுக்கு சோதனை காலம்தான்

தமிழ் புத்தாண்டிலும் தமிழ் சினிமாவுக்கு சோதனை காலம்தான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

For the first time No Tamil movie is release on Tamil new Yearதிரையரங்குகளில் படங்களை திரையிடுவதற்கு கொடுக்கப்படும் கியூப் டிஜிட்டல் கட்டணங்களை குறைக்க சொல்லி தயாரிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தி வருகின்றனர்.

கட்டணங்களை குறைக்கும் வரை புதுப்படங்களை ரிலீஸ் செய்ய மாட்டோம் என கூறி கடந்த 42 நாட்களாக திரையுலகினர் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.

இந்த வேலை நிறுத்தத்தால் இதுவரை சுமார் 50க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகவில்லையாம்.

தமிழ் சினிமா தோன்றிய காலத்திலிருந்து இப்படி ஒரு ஸ்டிரைக்கை திரையுலகினர் கண்டதில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் க்யூப் இல்லாத வேறு சில டிஜிட்டல் சேவை நிறுவனங்களுடன் தயாரிப்பாளர் சங்கம் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகிறது.

இதனால் ஸ்டிரைக் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் முழுவதுமாக எல்லா பிரச்சினைகளையும் தீர்த்துவிட்டு சில சட்டச் சிக்கல்களை முடித்து விட்டுத்தான் ஸ்டிரைக் தயாரிப்பாளர்கள் சங்கம் வாபஸ் பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுபோன்ற சின்ன சின்ன ஸ்டிரைக்குகளை சினிமா உலகம் பார்த்துள்ளது.

ஆனால் பண்டிகை நாட்களில் எப்படியாவது படங்கள் வெளியாகிவிடும்

ஆனால் இந்தாண்டுதான் முதன்முறையாக தமிழ்ப் புத்தாண்டுக்கு ஒரு படங்கள் கூட வெளியாகாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே ஸ்டிரைக் முடியும்போது கோடை விடுமுறையை கணக்கில் கொண்டு மே மாதம் நிறைய படங்களை வெளியிடுவார்கள் என கூறப்படுகிறது.

ஆனால் அவையனைத்தையும் மக்கள் ஒரே மாதத்தில் பார்ப்பார்களா? பார்க்கத்தான் முடியுமா? என்பதுதான் தற்போதைய கேள்வி.

For the first time No Tamil movie is release on Tamil new Year

பாலாவின் அடுத்த படம் முடிவானது; லென்ஸ் பட டைரக்டருடன் இணைகிறார்

பாலாவின் அடுத்த படம் முடிவானது; லென்ஸ் பட டைரக்டருடன் இணைகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director balaசில ஆண்டுகளாக படங்களை இயக்குவதை மட்டுமே செய்து வந்தார் பாலா.

தற்போது படங்களை தயாரித்தும் வருகிறார்.

நாச்சியார் படத்தை தொடர்ந்து ஒரு புதிய படத்தை தனது ‘பி ஸ்டூடியோஸ்’ சார்பில் தயாரிக்கிறார்.

லென்ஸ் பட இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்கிறார்.

‘லென்ஸ்’ படத்தை தமிழில் இயக்குநர் வெற்றிமாறன் வாங்கி வெளியிட்டு இருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

விரைவில் இந்த புதிய படம் தொடங்கப்பட உள்ளது.

சமுத்திரக்கனி மற்றும் பிரபுதேவாவை இயக்கும் பார்த்திபன்

சமுத்திரக்கனி மற்றும் பிரபுதேவாவை இயக்கும் பார்த்திபன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

parthibanபார்த்திபன் இயக்கத்தில் ஐஸ்வர்யா படு கவர்ச்சியாக நடித்து வெளியான படம் உள்ளே வெளியே.

கடந்த 1993ம் ஆண்டு வெளியான இப்படத்தின் இரண்டாவது பாகத்தை விரைவில் இயக்க முடிவு செய்திருப்பதாக பார்த்திபன் அறிவித்தார் என்பதை பார்த்தோம்.

இப்படத்தின் முக்கிய கேரக்டரில் சமுத்திரக்கனி நடிக்கவிருக்கிறாராம்.

இவர்களுடன் மம்தா மோகன்தாஸ், ஆடுகளம் கிஷோர், எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ சங்கர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தைத் தொடர்ந்து, பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளாராம் பார்த்திபன்.

ஏற்கெனவே ஜேம்ஸ் பாண்டு’, `சுயம்வரம்’ ஆகிய படங்களில் பார்த்திபன் மற்றும் பிரபுதேவா இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஆண்டனி பெயரில் சமந்தாவை லவ் பண்ணும் விஜய் தேவரகொண்டா

விஜய் ஆண்டனி பெயரில் சமந்தாவை லவ் பண்ணும் விஜய் தேவரகொண்டா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mahanati vijayபழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படம் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும், தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும் உருவாகி வருகிறது.

இதில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடித்துள்ளனர்.

இதன் பர்ஸ்ட் வெளியானவுடன் இவர்களின் மேக் அப்பை பலரும் பாராட்டினர்.

மேலும் சமந்தா, விஜய் தேவரகொண்டா, மோகன்பாபு, பிரகாஷ் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர்.

மதுரவாணி என்ற பத்திரிகை நிருபராக நடிக்கிறார் சமந்தா.

இதனிடையில் விஜய் தேவரகொண்டாவின் போஸ்டரை வெளியிட்டனர்.

படத்தில் இவருடைய பெயர் விஜய் ஆண்டனியாம். இவரும் சமந்தாவும் படத்தில் காதலர்களாக வருகிறார்கள் எனத் தெரிய வந்துள்ளது.

வருகிற மே 9ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

Vijay Deverakonda as Vijay Antony romance with Samantha in Mahanati movie

mahanati

பிரியா வாரியரை இயக்குகிறாரா சூது கவ்வும் பட இயக்குனர்..?

பிரியா வாரியரை இயக்குகிறாரா சூது கவ்வும் பட இயக்குனர்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nalan kumarasamyஒரு அடார் லவ் என்ற மலையாள படத்தில் இடம் பெற்ற மாணிக்க மலராய பூவி என்ற பாடலின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் ப்ரியா வாரியர்.

இந்த படமே இன்னும் வெளியாகாத நிலையில் இவர் செய்த புருவ அசைவுகள் படத்திற்கு பெரும் பப்ளிசிட்டியாக அமைந்து விட்டது.

எனவே படத்தை மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியிட உள்ளனர்.

இதனால் ப்ரியா வாரியரை தங்களது படத்தில் நடிக்க வைக்க பல இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் போட்டி போட ஆரம்பித்து விட்டனர்.

இந்நிலையில், சூது கவ்வும், காதலும் கடந்து போகும் ஆகிய படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்தில் பிரியா நடிக்க போவதாக செய்திகள் வந்தன.

ஆனால் இதை டைரக்டர் நலன் குமாரசாமி மறுத்துள்ளார்.

இரண்டே நாட்களில் நடக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையில் வரலட்சுமி

இரண்டே நாட்களில் நடக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையில் வரலட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Varalakshmi fighting for tribal people in Velvet Nagaram movieமேக்கர்ஸ் ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் கார்த்திக் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வெல்வெட் நகரம்.’

இதில் முதல் முறையாக கதையின் நாயகியாக நடித்திருக்கிறார் வரலட்சுமி. இவருடன் மாளவிகா சுந்தர், ரமேஷ் திலக், அர்ஜெய், ‘துருவங்கள் பதினாறு’ புகழ் பிரகாஷ் ராகவன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

பகத்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, ‘அருவி’ படத்தின் படதொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா எடிட்டிங் செய்கிறார். ‘கோலி சோடா 2’ புகழ் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி இசையமைக்கிறார்.

இப்படத்திற்கு சண்டை பயிற்சி ‘துப்பறிவாளன்’ தினேஷ். இதற்கு திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் மனோஜ்குமார் நடராஜன்.

படத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது,‘ கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஃபீமேல் சென்ட்ரிக் (female centric) திரைப்படம் இது.

சில ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானல் மற்றும் சென்னையில் நடைபெற்ற வெவ்வேறு உண்மை சம்பவங்களை தழுவி ஆக்சன் திரில்லராக உருவாக்கப்பட்ட படம் தான் ‘வெல்வெட் நகரம்’.

இதன் திரைக்கதை 48 மணி நேரத்தில் நடைபெறுவது போல் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.

இதில் மதுரையில் களப்பணியாற்றும் பத்திரிக்கையாளராக வரலட்சுமி நடித்திருக்கிறார்.

கொடைக்கானலில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு இழைக்கப்பட்ட ஒரு அநீதிக்கான ஆதாரத்தைத் தேடியும், அதன் முழு பின்னணியையும் பற்றி துப்பறிவதற்காக மதுரையிலிருந்து சென்னைக்கு வருகிறார் வரலட்சுமி.

இங்கு அவர் சந்திக்கும் எதிர்பாராத சம்பவங்களை விறுவிறுப்பான ஆக்சன் கலந்து சொல்லும் படமாக ‘வெல்வெட் நகரம்’ தயாராகியிருக்கிறது.

படத்தின் படபிடிப்பு சென்னை, கொடைக்கானல், மதுரை உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றிருக்கிறது. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.’ என்றார்.

Varalakshmi fighting for tribal people in Velvet Nagaram movie

velvet nagaram varalaxmi

More Articles
Follows