எல்லாம் நேரத்தில் வந்து சேரும். அதுவரைக்கும் பொறுமை – விக்னேஷ் சிவன்

எல்லாம் நேரத்தில் வந்து சேரும். அதுவரைக்கும் பொறுமை – விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஜூன் 9 தேதி நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் திரைப் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.

திருமணமான 4 மாதங்களில் அக்டோபர் 9ஆம் தேதி தங்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் அறிவித்தார்.

இவர்கள் ஏற்கனவே செய்துக் கொண்ட ஒப்பந்தம்படி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

வாடகைத்தாய் மூலம் இவர்கள் குழந்தை பெற்றதில் விதிகளை மீறி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

எனவே நயன்தாரா, விக்னேஷ் சிவனிடம் தமிழ்நாடு அரசு விசாரணை நடத்தவுள்ளது.

இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்ய குழு அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தனது சோசியல் மீடியா பக்கத்தில் விக்னேஷ் சிவன் இரண்டு பதிவுகளை பதிவிட்டுள்ளார்.

அதில்….

‛உங்களிடம் அக்கறை செலுத்துபவர்கள் மீது கவனம் செலுத்துங்கள். அவர்கள்தான் எப்போதும் உங்களுடனே இருப்பார்கள். அவர்கள்தான் உங்களுக்கானவர்கள்’

இன்னொரு பதிவில்…

‛எல்லாம் சரியான நேரத்தில் உங்களை வந்து சேரும். அதுவரைக்கும் பொறுமையுடனும் நன்றியுடனும் இருங்கள்’ என்று பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

Everything will arrive in time says Vignesh Sivan

‘மெஹந்தி சர்க்கஸ்’ ஹீரோவுடன் இணையும் இயக்குனர் சீனுராமசாமி

‘மெஹந்தி சர்க்கஸ்’ ஹீரோவுடன் இணையும் இயக்குனர் சீனுராமசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய தேசிய விருது பெற்றவர். இயக்குனர் சீனு ராமசாமி.

விரைவில் இவரது இயக்கத்தில் மாதம்பட்டி சினிமாஸ் தயாரிப்பில் மாதம்பட்டி ரங்கராஜ் நடிக்கும் புதிய படம் உருவாகவுள்ளது.

‘மெஹந்தி சர்க்கஸ்’ திரைப்படத்தில் நடித்தவர் மாதம்பட்டி ரங்கராஜ். இளம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் திகழும் இவர், தற்போது பிரபல திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் தமது அடுத்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

முன்னதாக ‘கேசினோ’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ள மாதம்பட்டி ரங்கராஜ், தற்போது நடிகர் யோகிபாபுவுடன் இணைந்து பெயரிடப்படாத மற்றுமொரு திரைப் படத்திலும் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில்தான் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்திலான தம்முடைய அடுத்த திரைப்படத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்த ‘மாமனிதன்’ திரைப்படம் கடைசியாக வெளியாகி நல்ல வரவேற்பையும், விமர்சகர்களின் நல்ல மதிப்பீடுகளையும் பெற்றது.

இதனைத் தொடர்ந்து தற்போது சீனு ராமசாமி இயக்கத்திலான நல்ல ஒரு காதல் கதையில் மாதம்பட்டி ரங்கராஜ் நடிக்கவிருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, சென்னை மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறவிருக்கிறது.

வரும் டிசம்பரில் தொடங்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு உள்ளிட்ட இதர விபரங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன.

இப்படத்தின் இதர தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகையர் தொடர்பான தேர்வுகள் நடைபெற்று வரு நிலையில், அவை குறித்த இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

இன்று அக்டோபர் 13ஆம் தேதி இயக்குனர் சீனுராமசாமியின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Director Seenuramasamy joins the hero of ‘Mehandi Circus’

32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மணிரத்னம்?

32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மணிரத்னம்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் மணிரத்னம் ரஜினிக்கு மிகவும் பிடித்த ஒரு கதைக்களத்தை விவரித்ததாகவும், இந்த படம் 2023 இன் பிற்பகுதியில் தொடங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்க ஆர்வமாக இருப்பதாகவும், அடுத்த ஆண்டு ஏப்ரலில் ‘பொன்னியின் செல்வன் 2’ வெளியான பிறகு கூடுதல் விவரங்கள் வெளிவரும் என்றும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த கிளாசிக் காம்போ மீண்டும் ஒன்றிணைவதற்கும் பெரிய திரையில் மேஜிக்கை உருவாக்குவதற்கும் அதிகார பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.

நயன்தாரா வாடகைத்தாய் ட்வின்ஸ் விவகாரம்.; விசாரணை தொடங்கியது

நயன்தாரா வாடகைத்தாய் ட்வின்ஸ் விவகாரம்.; விசாரணை தொடங்கியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஜூன் 9 தேதி நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் திரைப் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.

திருமணமான 4 மாதங்களில் அக்டோபர் 9ஆம் தேதி தங்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் அறிவித்தார்.

திருமணமாகி நான்கு மாதங்களில் குழந்தைகள் எப்படி? என நெட்டிசன்கள் பலரும் கேள்வி கேட்டனர்.

இவர்கள் ஏற்கனவே செய்துக் கொண்ட ஒப்பந்தம்படி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

வாடகைத்தாய் மூலம் இவர்கள் குழந்தை பெற்றதில் விதிகளை மீறி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

எனவே நயன்தாரா விக்னேஷ் சிவனிடம் தமிழ்நாடு அரசு விசாரணை நடத்தவுள்ளது.

இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்ய குழு அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இணை இயக்குநர் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு விசாரணையை தற்போது தொடங்கியது.

அவசியம் ஏற்பட்டால் நயன்தாரா – விக்னேஷ் சிவனிடமும் விசாரணை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

Nayanthara Surrogate Twins case. The investigation began

‘பிரின்ஸ்’: படத்தின் அதிகார பூர்வ சென்சார் மற்றும் ரன்னிங் டைம் இதோ !

‘பிரின்ஸ்’: படத்தின் அதிகார பூர்வ சென்சார் மற்றும் ரன்னிங் டைம் இதோ !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அக்டோபர் 21 ஆம் தேதி (தெலுங்கு மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் வெளியாகும்) ‘பிரின்ஸ்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படுவதை முன்னிட்டு, அதன் சென்சார் விவரங்கள் வெளியாகியுள்ளது.

நகைச்சுவை மிகுந்த இப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது சென்சார் குழு. மேலும் படத்தின் ரன்னிங் டைம் 143 நிமிடம் என வெளியாகியுள்ளது.

தெலுங்கு நகரத்தில் இந்திய பள்ளி ஆசிரியருக்கும் பிரிட்டிஷ் பள்ளி ஆசிரியருக்கும் இடையிலான காதல் கதையை படம் சொல்கிறது.

இயக்குனர் அனுதீப், சத்யராஜ் ஆகியோர் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளனர்.

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் வாழ்நாள் வசூலை மிஞ்சும் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் 1’

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் வாழ்நாள் வசூலை மிஞ்சும் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் 1’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பொன்னியின் செல்வன் 1’ திரைப்படம் முதல் வாரத்தில் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள நிலையில், தற்போது இரண்டாவது வார முடிவில் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தின் வசூலை முறியடித்து PS1 தமிழ்நாட்டில் ஆல்-டைம் GROSSER ஆக உள்ளது.

தர ஆய்வுகளின் படி, கோலிவுட்டில் ஒரே வருடத்தில், அதுவும் நான்கு மாத கால இடைவெளியில் இரண்டு பிளாக் பஸ்டர் படங்கள் வெளியிடுவது அரிதான நிகழ்வு.

More Articles
Follows