தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து திமுக எம்பி ஆ.ராசா பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.
முதல்வரை தரக்குறைவாக விமர்சனம் செய்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
எனவே ராசா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இதனையடுத்து மனு மீதான உரிய நடவடிக்கை எடுக்க கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் ஆ.ராசா மீது 3 சட்டப்பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் தமிழகம் & தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கையும் அனுப்பியது.
இதனையடுத்து புகார் குறித்து விளக்கம் அளிக்கும்படி ஆ.ராசா தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால் முதல்வருக்கு எதிரான விமர்சனம் குறித்து ஆ.ராசா அளித்த விளக்கம் திருப்தி இல்லை எனவும் அவர் 2 நாட்களுக்கு பிரச்சாரம் செய்ய தடை விதித்தது தேர்தல் ஆணையம்.
அத்துடன் திமுகவின் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்தும் ஆ.ராசாவின் பெயரை நீக்கவும் உத்தரவிட்டது.
தேர்தல் விதிமுறைகளை மீறி ஆ.ராசா
பேசியது கண்டிக்கத்தக்கது,
இனி எச்சரிக்கையுடன் பேச வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
Election Commission warns DMK Raja for his controversy speech