தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் சென்னை ஸ்டெர்லிங் சாலையில் தனது பி.எம்.டபிள்யூ காரில் சென்று கொண்டிருந்தார்.
அவரு காரை சோதனையிடுவதற்கான போலீசார் நிறுத்த முயற்சித்துள்ளனர்.
ஆனால் காரை நிறுத்தாமல் மனோஜ் வேகமாக சென்றதாக சொல்லப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அடுத்து, அடுத்த சிக்னலில் காரை மறிக்கும்படி போக்குவரத்து போலீசார், தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த பகுதியில் இருந்த போக்குவரத்து போலீசார், மனோஜின் காரை மறித்து நிறுத்தியுள்ளனர்.
மேலும், போலீசார் நிறுத்த சொல்லியும் காரை நிறுத்தாமல் சென்றது குறித்து மனோஜிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் குடிபோதையில் இருப்பது போலீசாருக்கு தெரிந்தது.
இதனை அடுத்து சுவாச சோதனை உபகரணம் மூலமாக நடத்தப்பட்ட ஆய்வில் மனோஜ் குடி போதையில் இருப்பது உறுதியானது.
இதனை அடுத்து அவர் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவரது பி.எம்.டபிள்யூ. காரைப் பறிமுதல் செய்துள்ள போலீசார் அபராதம் செலுத்திவிட்டு வாகனத்தை எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
Drunken drive case booked against Bharathirajas son Manoj