தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. பல உயிர்கள் தினம் இறப்பதை கண்கூடாக பார்த்து வருகிறோம்.
கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகின்றன.
அரசுக்கு உதவிடும் வகையில் தொழிலதிபர்கள், திரைப்பிரபலங்கள் தமிழக அரசுக்கு கொரோனா நிவாரண நிதியை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தயாரிப்பாளரும் பிரபல இயக்குனருமான லிங்குசாமி, கொரோனா நோயாளிகளுக்காக ஓர் ஆசிரமத்தைத் தொடங்கி உள்ளார்.
மணப்பாக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த ஆசிரமத்தின் தொடக்க விழாவில், உதயநிதி ஸ்டாலின், தா.மோ. அன்பரசன் மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அவரை பாராட்டினர்.
CIPACA_Official உடன் இணைந்து ஹார்ட்ஃபுல்_நெஸ் ஏற்பாடு செய்த அம்கம்லேஷ்தாஜியின் ஆசிர்வாதத்துடன் இந்த ஆசிரமம் தொடங்கப்பட்டுள்ளது என இயக்குனர் லிங்குசாமி தெரிவித்தார்.
Director Lingusamy opens Ashram for covid patients