தசரா OTT ரிலீஸ்.; மைனரு வேட்டி கட்டி.. பாட்டை இனிமே ஓடிடியில் பாருங்க மக்களே!

தசரா OTT ரிலீஸ்.; மைனரு வேட்டி கட்டி.. பாட்டை இனிமே ஓடிடியில் பாருங்க மக்களே!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடிப்பில் வெளியான படம் ‘தசரா’.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், தீக்‌ஷித் ஷெட்டி, பிரகாஷ் ராஜ், ஷைன் டாம் சாக்கோ, சமுத்திரகனி, பூர்ணா உட்பட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படம் மார்ச் 30, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

இந்தப் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது.

ரூ.65 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்து வருகிறது.

மேலும் அதன் டிஜிட்டல் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், ‘தசரா’ படத்தை ஏப்ரல் 27-ம் தேதி முதல் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தசரா

‘Dasara’ to stream on OTT from April 27th

குற்றாலத்தில் ‘ரகு தாத்தா’ உடன் நடிகை கீர்த்தி சுரேஷ்

குற்றாலத்தில் ‘ரகு தாத்தா’ உடன் நடிகை கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த டிசம்பர் 2022 இல், நடிகை கீர்த்தி சுரேஷ் ஹோம்பலே பிலிம்ஸின் ‘ரகு தாத்தா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

இப்படத்தை அறிமுக இயக்குனர் சுமன் குமார் இயக்கி வருகிறார். இதன் மூலம் ஹொம்பலே பிலிம்ஸ் தனது முதல் தமிழ்த் திரைப்படத்தை தயாரிக்கிறது.

இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்தசாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் குற்றாலத்தில் நேற்று இப்படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கினார்.

ரகு தாத்தா

Keerthy Suresh resumes shooting for ‘Raghu Thatha’ in Courtallam

JUST IN மம்மூட்டியின் தாயாரும் துல்கரின் பாட்டியுமான பாத்திமா காலமானார்

JUST IN மம்மூட்டியின் தாயாரும் துல்கரின் பாட்டியுமான பாத்திமா காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் மம்மூட்டி.

கடந்த 40 வருடங்களுக்கு மேலாக 393 மலையாள படங்களிலும் மற்ற மொழிகளை சேர்த்து 420 படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

மலையாள சினிமாவில் நடித்து கேரள அரசின் பல விருதுகளையும் வென்றுள்ளார். கேரள அரசின் 7 விருதுகளையும் மத்திய அரசின் 3 தேசிய விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

தமிழில் நடிகர் ரஜினியுடன் தளபதி படத்திலும் நடித்திருந்தார். மேலும் நிறைய நேரடி தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

அழகன், மௌனம் சம்மதம், மறுமலர்ச்சி உள்ளிட்ட படங்கள் இவருக்கு தமிழில் நல்ல பெயரை பெற்று தந்தது.

தற்போது மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.

இவரும் நேரடி தமிழ் படங்களில் நடித்து வருகிறார். ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால், ஹே சினாமிகா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் மம்முட்டியின் தாயாரும் துல்கர் சல்மானின் பாட்டியுமான பாத்திமா இஸ்மாயில் வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார் அவருக்கு வயது 93.

சில நாட்களாக உடல் நல குறைவால் இவர் அவதிப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார் எனக் கூறப்படுகிறது.

இதனை அறிந்த மம்மூட்டி ரசிகர்களும் துல்கர் சல்மான் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து சம்பந்தப்பட்ட நடிகர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

மம்மூட்டி

Mammootty s mother FathimaIsmayil passed away

ரீலீல் ரஜினி.. ரியலில் அஜித்.; மாறிவரும் ஜெயம் ரவி… வைரலாகும் போட்டோஸ்.!

ரீலீல் ரஜினி.. ரியலில் அஜித்.; மாறிவரும் ஜெயம் ரவி… வைரலாகும் போட்டோஸ்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமா நடிகர் நடிகை என்றாலே தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைப்பதிலும் தங்களுடைய அழகை பராமரிப்பதிலும் அதிக அக்கறை செலுத்துவார்கள்.

சினிமாவில் மட்டுமல்லாமல் பொது வெளியில் தோன்றும் போதும் சினிமாவை போன்று மேக்கப்புடன் வலம் வருவார்கள்.

ஜெயம் ரவி

இவையல்லாம் 30 வருடங்களுக்கு முன்பு.

ஆனால் இதை மாற்றியமைத்தவர் என்றால் அது நடிகர் ரஜினிகாந்தை சொல்லலாம்.

சினிமாவில் மட்டுமே மேக்கப் போடுவேன். கேமராவுக்கு முன்னால் மட்டுமே நடிப்பேன். கேமராவுக்கு பின்னால் நடிக்க மாட்டேன் என்ற கொள்கையை வைத்திருப்பவர் ரஜினிகாந்த்.

ஜெயம் ரவி

எனவேதான் அவர் பொது இடங்களில் வரும் போது நரைத்த தாடி முடி இல்லாத தலை என எந்த இமேஜும் கவலை இல்லாமல் வருவார். ஆனால் சினிமாவில் விக் வைத்து நடித்து வருகிறார்.

இந்த ஃபார்முலாவை மாற்றி தன்னுடைய இயல்பான தோற்றத்திலே சினிமாவிலும் நடிக்கத் தொடங்கியவர் நடிகர் அஜித்.

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வலம் வந்தவர் தற்போது முழுக்க நரைத்த தாடியுடன் சினிமாவில் நடித்து வருகிறார்.

ஜெயம் ரவி

இந்த நிலையில் தற்போது நடிகர் ஜெயம் ரவியும் இந்த பாணியில் வலம் வருகிறார்.

சமீப காலமாக அகிலன் பட பிரஸ்மீட் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய பட விழாக்களுக்கு தன்னுடைய இயல்பான தோற்றமான சால்ட் & பெப்பர் லுக்கில் வலம் வருகிறார்.

மேலும் ரவி நடத்திய போட்டோ சூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஜெயம் ரவி

Jayam Ravi’s recent photos viral in social media

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ சூட்டிங் & ரிலீஸ் அப்டேட்

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ சூட்டிங் & ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘மாவீரன்’ படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்க, மிஷ்கின், யோகி பாபு, சரிதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.

சிவகார்த்திகேயன் ஏற்கனவே தனது பகுதியின் படப்பிடிப்பை முடித்துள்ளார்.

ஆனால் ‘மாவீரன்’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாததால், மற்ற நட்சத்திரங்களின் பகுதிகளை படமாக்கி வருகிறார் இயக்குனர்.

இந்த நிலையில், சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தின் ரிலீஸ் ஜூலைக்கு தள்ளப்படும் என்று சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளது.

Sivakarthikeyan’s ‘Maaveeran’ release postponed to July

சினிமாவினால் ஒரு வெங்காயமும் கிடையாது.; மயில்சாமியின் கடைசி பட விழாவில் ஆர்வி உதயகுமார் பேச்சு

சினிமாவினால் ஒரு வெங்காயமும் கிடையாது.; மயில்சாமியின் கடைசி பட விழாவில் ஆர்வி உதயகுமார் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராகுல் என்பவர் இயக்கத்தில் உருவான குறும்படம் ‘விளம்பரம்’. இந்த குறும்படம் தான் நடிகர் மயில்சாமியின் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தான் இறப்பதற்கு முன் இந்த குறும்படத்தில் கதையின் நாயகனாக நடித்திருந்தார் மயில்சாமி. மற்றொரு முக்கிய வேடத்தில் சர்ச்சைக்குரிய நடிகை ரேகா நாயர் நடித்திருந்தார்.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆர்வி. உதயகுமார் பேசும்போது…

“விளம்பரங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். சினிமா என்பது வேறு விளம்பரம் என்பது வேறு.

எத்தனையோ நல்ல திரைப்படங்கள் வந்துள்ளன. அதில் நல்ல நல்ல கருத்துக்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன.

அதையெல்லாம் பார்த்து மக்கள் மாறி இருந்தால் சமூகம் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் படத்தை ரசிக்கும் மக்கள் தியேட்டரை விட்டு வெளியே வந்தபின் அந்த நல்ல கருத்துக்களை மறந்து விடுகிறார்கள்.

சினிமாவினால் ஒரு பெரிய பிரளயம் உண்டாகும் என்பார்கள். ஆனால் சினிமாவினால் ஒரு வெங்காயமும் கிடையாது.. இதை நீங்கள் மறுத்தாலும் இதுதான் உண்மை.” என்று ஆவேசமாக பேசினால் ஆர் வி உதயகுமார்.

Rv Udayakumar speech in Vilambaram Short film Launch

More Articles
Follows