தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உலகையே கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல நாடுகளில் இன்னும் ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்தியாவில் பல தளர்வுகளுடன் ஊரடங்கு நவம்பர் 30 வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இதுவரை 35,152 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து மீண்டுள்ளனர்.
இதுவரை புதுச்சேரியில் மொத்தம் 608 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
தற்போது மருத்துவமனைகளில் 705 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்
இவ்வாறு புதுச்சேரி சுகாதாரத்துறை கொரோனா தகவல்களை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் புதுச்சேரியில் இரவு நேரங்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு முற்றிலும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
மேலும் ஹோட்டல், தொழிற்சாலைகள், பார்கள், கடைகள் ஆகியவை வழக்கம்போல் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புதுச்சேரி கடற்கரை சாலையில் விதிக்கப்பட்டிருந்த தடையும் திரும்ப பெறப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் அருண் அறிவித்துள்ளார்.
COVID-19 lockdown at night time from 10 pm to 6 am lifted in Puducherry