தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நகைக்சுவை நடிகர்களை பற்றி நாம் அறிவோம். ஆனால் அவர்களுக்கு பின்னால் இருக்கும் வசனகர்த்தாவை நாம் அறிவதில்லை.
இதில் மிகவும் முக்கியமானவர் கிரேஸி மோகன்.
இவர் ஏராளமான சினிமா படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.
கே பாலச்சந்தர் இயக்கிய பொய்க்கால் குதிரை என்ற படத்தின் மூலம் வசனகர்த்தாவாக சினிமாவில் அறிமுகம் ஆனார்.
கமல்ஹாசனின் நிறைய படங்களில் இவர் நடித்துள்ளார். முக்கியமாக வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தை யாராலும் மறக்க முடியாது.
ரஜினியுடன் அருணாச்சலம் படத்தில் நடித்துள்ளார்.
அண்மையில் கூட சென்னையில் அவர் நாடகத்தை எழுதி இயக்கி மேடையில் அரங்கேற்றினார்.
இந்த நிலையில் ஹார்ட் அட்டாக் காரணமாக சிகிச்சை பலனின்றி தற்போது மதியம் 2 மணி அளவில் மரணமடைந்தார். அவருக்கு வயது 66 ஆகும்.
Comedy legend Crazy Mohan passes away due to cardiac arrest