தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழக முதல்வர் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட சமாதியின் ஈரம் காய்வதற்குள் அடுத்த மரணச் செய்தி தமிழகத்தை இன்று அதிகாலையில் தாக்கியது.
அதிகாலை 3.30 மணியளவில் பிரபல நடிகரும், துக்ளக் பத்திரிகையின் ஆசிரியருமான சோ ராமசாமி காலமானார் என்ற செய்தி வந்தது.
அரசியல் உலகில் இவரை கிங் மேக்கர் என்றே சொல்வார்கள்.
200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள சோ ராமசாமி, 4 திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.
பத்திரிகை துறை சேவைக்காக வீரகேசரி உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்
இவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பின்னர் கூறியதாவது… “பொய் சொல்லாமல், யாருக்கும் பயப்படாமல் வாழ்ந்தவர் சோ ராமசாமி” என்றார்.
இதனையடுத்து, சிவகுமார், சூர்யா, கார்த்தி மற்றும் விஷால் ஆகியோரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
சிவகுமார் கூறியதாவது…
“மிகப்பெரிய மேதையான சோ படங்களில் கோமாளி வேடத்தில் நடிப்பது எனக்கு அப்போது வருத்தத்தை அளித்தது.
அதிக பணம் வருவதால் நடிப்பை துறந்து; பத்திரிகை தொழிலை மட்டும் செய்தவர் சோ.” என்றார்.
ஜெயலலிதாவுடன் அதிக நட்பு பாராட்டிய சோ, ஜெயலலிதா இறந்த மறுநாளே இவரும் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று பிற்பகல் 4 மணிக்கு சோ ராமசாமியின் உடல் பெசன்ட் நகர் பீச்சில் அடக்கம் செய்யப்பட உள்ளது.