தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சினிமாவில் இருந்து அரசியலுக்கு தாவிய சிரஞ்சீவி, பல கட்ட பிரச்சினைகளுக்கு பிறகு (10 வருடங்களுக்கு) மீண்டும் சினிமாவுக்கே திரும்பிவிட்டார்.
2017ல் கத்தி பட ரீமேக்கான ‘கைதி நம்பர் 150’ படத்தில் நடித்தார். இந்தாண்டில் ‘சைரா’ படத்தில் நடித்தார். இந்த படமும் வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில் தன் அடுத்த படத்தை உடனே தொடங்கியுள்ளார்.
கொரட்டலா சிவா இயக்கவுள்ள இந்த படத்தின் பூஜை ஐதராபாத்தில் நடைபெற்றது.
இதில் நாயகியாக த்ரிஷா நடிப்பார் என கூறப்படுகிறது. ஏற்கெனவே முருகதாஸ் இயக்கிய ஸ்டாலின் படத்தில் இந்த ஜோடி நடித்திருந்தனர்.
இவர்களுடன் மோகன்லால் மற்றும் நதியா மற்றொரு ஜோடியாக நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.
விரைவில் இப்பட சூட்டிங் தொடங்கவுள்ளது.