தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சீனாவில் ஆரம்பமான கொரோனா வைரஸ் பாதிப்பு மனித இனத்தையே அச்சுறுத்தி வருகிறது.
இந்த நோய்க்கு மருந்து கண்டு பிடிக்க முடியாமல் உலக மருத்துவ நிபுணர்களே திணறி வருகின்றனர்.
இதில் இருந்து மீண்டு வர முடியுமா? என விடை தெரியாமல் கொரோனாவுடன் போராடி வருகின்றன.
இதனால் பல உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
தற்போது இதைவிட கொடிய நோய் சீனாவில் பரவத் தொடங்கியுள்ளது.
அங்கு புபோனிக் பிளேக் நோய் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது. (புபோனிக் பிளேக் என்பது பாக்டீரிய நோய்.)
இதனையடுத்து சீனாவின் பயன்னூர் மற்றும் மங்கோலியாவின் சில பகுதிகளில் மூன்றாம் கட்ட எச்சரிக்கை 2020ம் ஆண்டு டிசம்பர் வரை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட 2 பேர் மர்மோட் இறைச்சியை சாப்பிட்டதாக தெரிய வந்துள்ளது.
இந்த நோய் மர்மோட் போன்ற காட்டில் வாழும் கொறித்து திண்ணும் உயிரினங்களால் பரவுகிறது.
இதற்கு உடனடி சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், பாதிக்கப்பட்ட நபர் 24 மணி நேரத்தில் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.