தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இன்று அக்டோபர் 2ஆம் தேதி மகாத்மா காந்தி பிறந்தநாள் நினைவாக காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் காந்திக்கு சில கேள்விகளை கேட்டுள்ளார் நடிகரும் இயக்குனருமான சேரன்.
அவரின் ட்விட்டர் பதிவில்…
பிறந்தநாள் வாழ்த்துக்கள் காந்தி அய்யா.. எங்களுக்காக நீங்கள் இழந்ததை நாங்கள் இன்னும் உணரவே இல்லை.. நீங்கள் பெருமைப்படும்படி நாங்கள் ஏதும் செய்துவிடவில்லை.. இன்னும் குற்றங்களும் பாலியல் வன்முறைகளும் நடத்தி நாங்கள் அதை நீதி வென்றதென சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
உங்கள் ரத்தக்கறை படிந்த நாட்டில் இன்று துடைக்கமுடியாத ஏகப்பட்ட கறைகள்.. இந்த ஜனங்களுக்காக எதற்கு உயிரை இழந்தீர்கள் என உங்கள் மேல் கேள்வியும் பரிதாபம்தான் வருகிறது… சரி.. உங்கள் கடமையை நீங்கள் செய்தீர்கள்.. எங்கள் கடமையை நாங்கள் மறந்தோம் என்பதே உண்மை.. உம்மைச்சொல்லி குற்றமில்லை..
என நாட்டில் நடக்கும் குற்ற சம்பவங்களை குறிப்பிட்டு தன் ஆதங்கத்தை பதிவிட்டுள்ளார் சேரன்.
Cheran tweets on Gandhi Jayanthi day