தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
20 வருடங்களுக்கு முன்பு பேஸ்புக் என்ற சமூக வலைத்தளமே பிரபலமாக இருந்தது. அதில் அக்கௌண்ட் இல்லையென்றால் ஏதோ வங்கி கணக்கு இல்லாத போல சமூகம் பார்க்க தொடங்கியது.
அதன்பின்னர் ட்விட்டர், இன்ஸ்ட்ராகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட பல சமூக வலைத்தளங்களும் இந்தியாவில் பிரபலமாக தொடங்கியது.
இதில் தற்போது பல பிரபலங்கள் ட்விட்டரில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பிரபலங்கள் பெயரில் பலர் போலி அக்கௌண்ட் தொடங்குவதால் சம்பந்தப்பட்ட அக்கௌண்ட்டுக்கு மட்டும் புளு டிக் கொடுப்பது ட்விட்டர் நிர்வாகத்தின் பொறுப்பாகும்.
அதுபோல் மீடியாக்கள் பெயரிலும் நிறுவனங்கள் பெயரில் நிறைய போலி அக்கௌண்ட்டுக்கள் உருவாவதால் இதை நடைமுறை தொடர்ந்து வருகிறது.
ஆனால் ஒரு சிலர் இதை வைத்து பெரியளவில் பிசினஸ் செய்து வருகின்றனர்.
முதலில் கஷ்டப்பட்டு நல்ல பெயரை சம்பாதிக்கும் அவர்கள் நாளடைவில் பணத்திற்கு ஆசைப்பட்டு பொய் பிரச்சாரங்களுக்கு துணை போகின்றனர்.
மேலும் சிலர் பொய்யான பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன்ஸ் போட்டு கூட சில்லரை பார்த்து வருகின்றனர். ஒரு ட்வீட்டுக்கு இவ்வளவு என படத்தயாரிப்பாளர்களிடம் கறந்தும் வருகின்றனர்.
இது தெரியாமல் இவர்கள் சொல்வதை எல்லாம் நம்பி ரசிகர்கள் அதை பரப்பி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் அவர் ட்விட்டரில் புளூ டிக் வைத்திருப்பார்கள். அதாவது VERIFIED ACCOUNT (அதிகாரப்பூர்வ அக்கௌண்ட்) என்ற பெயரில் இதை சிலர் அசால்லட்டாக செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் புளூ டிக் குறித்து நடிகரும் இயக்குனருமான சேரன் தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது..
இங்கே பதில் வருவதற்கும் லைக் வாங்குவதற்கும் ரீடுவீட்டுக்கும் புளூ டிக் தேவையென சிலர் எனக்கு அறிவுரை சொன்னார்கள்… அப்படி ஒரு டிக்கே வேணாம்ன்றேன்…. எனக்கு ரசிகர்கள் மக்களிடம் இருந்து கிடைக்கும் டிக் போதும்ன்றேன்….
இவ்வாறு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் சேரன்.
வேணாம்ன்றேன்…. போதும்ன்றேன்…. என்ற வார்த்தைகளை மறைந்த தமிழக முதல்வர் காமராஜர் கூறுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.