சேரன் சொன்னால் இந்த மாதிரி விஷயங்கள் எடுபடும் : சாய் ராஜ்குமார்

சேரன் சொன்னால் இந்த மாதிரி விஷயங்கள் எடுபடும் : சாய் ராஜ்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Cheran starrer Rajavukku Check will be Emotional Thriller says director Sai Rajkumarஇயக்குநர் சேரன் மீண்டும் நடிப்பு, இயக்கம் என சுறுசுறுவென தனது அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். ஒரு பக்கம் ‘திருமணம்’ படத்தை இயக்கி நடித்துக்கொண்டே, இன்னொரு பக்கம் ‘ராஜாவுக்கு செக்’ படத்திலும் நடித்து முடித்துவிட்டார்.

இதில் ராஜாவுக்கு செக் படம் எமோஷனல் திரில்லராக புதுவிதமான சேரனை நமக்கு காட்டும் படமாகத் தயாராகியுள்ளது

இந்த படத்தை இயக்கியுள்ளார் சாய் ராஜ்குமார். பெயர் புதிது போல் தோன்றினாலும், ஏற்கனவே ’ஜெயம்’ ரவியை வைத்து தமிழில் ’மழை’ என்கிற படத்தை இயக்கிய அதே ராஜ்குமார் தான் இவர்.

கொஞ்ச காலம் தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்றுவிட்டு தற்போது சாய் ராஜ்குமார் ஆக மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். இந்த படம் குறித்த சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் இயக்குநர் சாய் ராஜ்குமார்.

“ ‘ராஜாவுக்கு செக்’ படத்தின் கதையை உருவாக்கி முடித்ததுமே இதில் யார் நடித்தால் சரியாக இருக்கும் என்கிற கேள்வி எழுந்தபோது முதல் ஆளாக என் மனதில் தோன்றியவர் சேரன் தான்..

காரணம் சில விஷயங்களை சிலர் சொன்னால்தான் அது சேரவேண்டிய இடத்திற்கு சரியாக சென்று சேரும். இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு முக்கிய பிரச்சனையை மத்திம வயதில் உள்ள அதேசமயம் மக்களுக்கு நன்கு அறிமுகமான சேரன் போன்ற ஒரு நடிகர் சொன்னால் மட்டுமே அது பொதுமக்களிடம் சரியான விதத்தில் சென்று சேரும் என உறுதியாக நம்பினோம்.

அந்தவகையில் இந்த படத்தில் சேரன் ஒரு தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.. எமோஷனல் த்ரில்லாராக உருவாகியுள்ள ‘ராஜாவுக்கு செக்’ , இதுவரை தமிழ் சினிமாவில் வந்திராத ஒரு ஜானரை சேர்ந்த படம் என தைரியமாகச் சொல்வேன்..

இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில்தான் சேரன் தனது ’திருமணம்’ படத்தையும் ஒரே மூச்சில் உருவாக்கிக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் ‘ராஜாவுக்கு செக்’ படத்தில் சேரனுக்கு ஒரு கெட்டப் சேஞ்ச் மாற்ற வேண்டியிருந்த. அதைக் கணக்கிட்டு, அவர் திருமணம் படத்தில் நடித்து முடித்துவிட்டு வந்ததும், அவரது கெட்டப்பினை மாற்றி அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினோம்..

தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவுபெற்று இன்னும் சில நாட்களில் முதல் காப்பி கைக்கு வந்துவிடும். சென்சார் சான்றிதழ் மற்றும் தயாரிப்பாளர் சங்க தேதி ஒதுக்கீடு ஆகிய விஷயங்களுக்குப் பிறகு படத்தின் ரிலீஸ் தேதி குறித்து முறையாக அறிவிக்கப்படும்” என்கிறார் இயக்குநர் ராஜ்குமார்

‘ராஜாவுக்கு செக்’ வைக்கும் ராணிகளாக மலையாள திரையுலகைச் சேர்ந்த சரயூ மோகன், நந்தனா வர்மா மற்றும் ஒரு முக்கியவேடத்தில் சிருஷ்டி டாங்கே என மூன்று பேர் நடித்துள்ளனர்.

சுண்டாட்டம், பட்டாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள விஜய் டிவி புகழ் இர்பான் வில்லனாக நடித்திருக்கிறார்.

மலையாள திரையுலகின் பிரபல தயாரிப்பாளர்களான சோமன் பல்லாட் மற்றும் தாமஸ் கொக்காட் ஆகியோர் இந்த படத்தை பல்லாட் கொக்காட் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கின்றனர்.

இந்த படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் எம்எஸ் பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். குற்றம் கடிதல் படத்தின் எடிட்டிங்கிற்காக பேசப்பட பிரேம் இந்த படத்தின் படத்தொகுப்பைக் கவனிக்கிறார்.

தெலுங்கில் பிரபலமாக உள்ள வினோத் யஜமானியா இசையமைப்பாளர். இப் படத்தின் மூலம் தமிழுக்கு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்

எமோஷனல் த்ரில்லர் என்றாலும் படத்தில் தேவையான அளவுக்கு ஆக்சன் காட்சிகளும் உண்டு. ஆக்சன் காட்சிகளை டேஞ்சர் மணி வடிவமைத்துள்ளார். ஒட்டுமொத்த படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Cheran starrer Rajavukku Check will be Emotional Thriller says director Sai Rajkumar

Cheran starrer Rajavukku Check will be Emotional Thriller says director Sai Rajkumar

சினிமா பாடல் பட்ஜெட்டில் மகிழ்ச்சி-யின் 8 பாடல்களை தயாரித்த ரஞ்சித்

சினிமா பாடல் பட்ஜெட்டில் மகிழ்ச்சி-யின் 8 பாடல்களை தயாரித்த ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Pa Ranjith Produced Magizhchi album in huge budgetஇயக்குனர் பா.இரஞ்சித் திரைப்படங்களை இயக்குவதோடு தயாரிப்பாளராகவும் இயங்கி வருகிறார்.

சமீபத்தில் வெளியாகி வெற்றி படமாகிய “பரியேறும் பெருமாள் ” படத்தை தயாரித்ததோடு தனது அடுத்த படத்தை “இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு” என்ற பெயரில் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் தனது கேஸ்ட்லெஸ் இசைக்குழுவினர் இசையமைத்த பாடலை இயக்கியுள்ளார்.

நடன இயக்குனர் சாண்டி யின் நடனத்தில் கேஸ்ட்லெஸ் இசைக்குழுவினரை நடிக்கவைத்திருக்கிறார்.

மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த படப்பிடிப்பு சினிமா படத்தின் பாடலுக்கு செலவாகும் பொருட்ச்செலவில் படமாக்கப்பட்டுள்ளது.

மகிழ்ச்சி என்று துவங்கும் இந்த பாடலில் நடிகர் கலையரசன், லிங்கேஷ் , ஹரி, சாண்டி மற்றும் குழுவினர் பங்குபெற்றுள்ளனர்.

மகிழ்ச்சி ஆல்பத்தில் மொத்தம் எட்டு பாடல்கள் வெளியாகியிருக்கிறது.

Director Pa Ranjith Produced Magizhchi album in huge budget

காவல் துறை உங்கள் நண்பனுக்கு குரல் கொடுக்கும் ஹரிசரண்

காவல் துறை உங்கள் நண்பனுக்கு குரல் கொடுக்கும் ஹரிசரண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Haricharan to trill a song for Kaval Thurai Ungal Nanbanஒரு திறமையான பாடகரால் மட்டுமே பாடலின் தன்மையை மேலோக்கி கொண்டு செல்ல முடியும்.

இதை பல முன்னோடிகள் செய்திருப்பதால் மக்களும் தங்கள் இசை ஞானத்தை வளர்த்து பாடகர்களையும் பாடலாசிரியர்களையும் பாராட்டும் அளவிற்க்கு வளர்ந்து விட்டனர்.

இந்த லிஸ்டில் பாடகர் ஹரிசரண்னின் குரலையும், பாடல்களையும் ரசிப்பதற்கென்று தனி பட்டாளம் உள்ளது.

தனது ரசிகர்களை பாடல்கள் மூலம் மகிழ்விக்கும் ஹரிச்சரண் தனது அடுத்த பாடலை “காவல் துறை உங்கள் நண்பன்” என்ற படத்திற்க்காக பாடியுள்ளார்.

“ராணி தேனீ” என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்பாடலை கதைக்குப் பொருத்தமாக இசையமைத்திருக்கிறாராகள் இசையமைப்பாளர்கள் ஆதித்யா- சூர்யா.

இந்த பாடலுக்கு வரிகள் எழுதியது ஞானக்குமரவேல்.

நடிகர் சுரேஷ் ரவி மற்றும் நடிகை ரவீனா ரவி நடித்திருக்கும் “காவல் துறை உங்கள் நண்பன்” , காவலருக்கும் -டெலிவரி executive உறவை பற்றி பேசும்.

காவல்துறை உங்கள் நண்பன் திரைப்படத்தை RDM இயக்க , பி.ஆர்.டாக்கிஸ் மற்றும் வைட் மூன் டாக்கிஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

Haricharan to trill a song for Kaval Thurai Ungal Nanban

டூ பீஸ் படங்களை வெளியிட்டு இளைஞர்களை ஹாட்டாக்கிய ஹன்சிகா

டூ பீஸ் படங்களை வெளியிட்டு இளைஞர்களை ஹாட்டாக்கிய ஹன்சிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

CC7AEEFC-76BD-41BE-941F-B2D1F80BD23Eதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்துக் கொண்டிருப்பவர் ஹன்சிகா.

ஆனால் சமீப காலமாக வாய்ப்பில்லாமல் இருக்கிறார்.

ஆனால் அதே சமயம் மிகவும் பரபரப்பாக பேசப்படும் மகா படத்தை நம்பியிருக்கிறார். இதில் ஹன்சிகாவின் போஸ்டர்கள் அசத்தலாக உள்ளது.

இந்நிலையில் அவர் சுற்றுலா சென்ற இடத்தில் எடுத்த மிகவும் ஹாட்டான (ஜட்டி மற்றும் ப்ரா போன்ற டூ பீஸ்) போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.

அவை சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது பட வாய்ப்புக்காக ஹன்சிகா வெளியிட்டு இருக்கலாம் என கூறப்பட்டது.

ஆனால் அதை மறுத்து ஹன்சிகா, தனது போன் மற்றும் சமூக வலைதள பக்கங்கள் ஹக் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

ராம்சரணுக்கு மட்டும் ஓகே சொன்ன நயன்தாரா? கோபத்தில் கோலிவுட்

ராம்சரணுக்கு மட்டும் ஓகே சொன்ன நயன்தாரா? கோபத்தில் கோலிவுட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ram charan and nayantharaலேடி சூப்பர் ஸ்டார் என அன்பாக அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவரின் கால்ஷீட்டுக்கு கோலிவுட்டே தவம் கிடக்கிறது.

தனக்கு பிடித்த படங்களை ஒப்புக் கொண்டு நடித்தாலும் அப்பட விளம்பர நிகழ்ச்சிகளில் எதுவும் கலந்துக் கொள்ள மாட்டேன் என்ற கொள்கையுடன் வாழ்ந்து வருகிறார் இவர்.

இந்நிலையில் தற்போது அந்த கொள்கையை ராம்சரண் தயாரிக்கு படத்திற்காக காற்றில் பறக்க விட்டுள்ளாராம்.

சீரஞ்சீவி நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படம் ‘சயீரா நரசிம்ம ரெட்டி’.

இதில் அமிதாப் பச்சன், தமன்னா, விஜய்சேதுபதி, ஜெகபதி பாபு, ஹூமா குரேஷி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளத்துடன் நயன்தாராவும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

சிரஞ்சீவியின் மகனும், தெலுங்கு சினிமாவின் இளம் முன்னணி ஹீரோவுமான ராம்சரண் தான் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.

இப்படம் மிகப்பெரிய பட்ஜெட் என்பதால், படத்தின் புரோமோஷனையும் பிரம்மாண்டமாக செய்ய உள்ளதாம் படக்குழு.

எனவே படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்கள் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளதாம்.

இது தொடர்பாக நயன்தாராவிடம் ராம்சரண் பேச, அவரும் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.

நாம் என்னதான் தலை கீழாக நின்றாலும் நம் பட விளம்பரங்களுக்கு நயன்தாரா முக்கியத்துவம் தருவதில்லையே என்ற கோபத்தில் உள்ளதாம் கோலிவுட் சினிமா.

சர்வதேச திரைப்பட விருதுகளை குவிக்கும் ‘ஒற்றைப் பனை மரம்’

சர்வதேச திரைப்பட விருதுகளை குவிக்கும் ‘ஒற்றைப் பனை மரம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Otrai Panai Maram movie gets International recognitionநல்ல திரைப்படங்களை வெளியிட வேண்டும்; தயாரிக்கவும் வேண்டும் என்ற எண்ணத்தில் திரையுலகுக்கு வந்திருப்பவர் ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல்.

இவர், நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டார்.
தற்போது இவர் ஒற்றைப் பனை மரம் என்ற புதிய படத்தை தயாரித்து வெளியிட இருக்கிறார்.

‘போர் முடிவுறும் இறுதிநாட்களில் ஆரம்பிக்கும் இப்படம், சமகால சூழலில் முன்னாள் போராளிகளும் மக்களும் முகம் கொடுக்கும் சொல்லத் துணியாத கருவை தெள்ளத் தெளிவாக உருவாக்கி இருக்கிறார்கள்.

யதார்த்த நடிப்பு, இயல்பான காட்சியமைப்பு, இதயத்தை கனத்துப்போக வைக்கும் திருப்பங்கள் என கதைக்குள் உங்களை அழைத்துச் சென்று, ஈழத்தில் கிளிநொச்சியிலுள்ள கிராமத்தில் வாழ வைத்து வதைத்து விடும் அளவிற்கு இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

இப்படத்தை தயாரித்தது குறித்து எஸ்.தணிகைவேல் கூறும்போது…

‘ஒற்றைப் பனை மரம்’ திரைப்படத்தை தயாரித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை இப்படம் கண்டிப்பாக கொடுக்கும். நான் தயாரித்ததில் கிடைத்த மகிழ்ச்சி, நீங்கள் பார்க்கும் போது உங்களுக்கு புரியும்’ என்றார்.

இப்படம் 37 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 12 விருதுகளையும் இப்படம் குவித்திருக்கிறது.

உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அஷ்வமித்ரா இசை அமைத்திருக்கிறார். அவரது இசை தமிழ் பாரம்பரிய வாத்தியங்களை மட்டுமே வைத்து இசையமைத்திப்பது படத்திற்கு ஒரு உயிரோட்டமாக அமைகிறது.

சிறந்த இயக்குனர் விருது பெற்ற மண் பட இயக்குனர் புதியவன் ராசையா இயக்கத்தையும், தேசிய விருது பெற்ற சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பையும், சர்வதேச விருது பெற்ற இலங்கை ஒளிப்பதிவாளர் மகிந்த அபேசிங்க ஒளிப்பதிவையும் மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய பாத்திரங்களாக புதியவன் ராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி , மாணிக்கம் ஜெகன், தனுவன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

Otrai Panai Maram movie gets International recognition

Otrai Panai Maram movie gets International recognition

More Articles
Follows