அசிஸ்டெண்ட் டைரக்டர்களுக்கு பாடம் சொல்லும் சாக்கோபார்

அசிஸ்டெண்ட் டைரக்டர்களுக்கு பாடம் சொல்லும் சாக்கோபார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chocobar stillsவெறும் இரண்டேகால் லட்சத்தில் ஒரு படம் எடுக்க முடியுமா? இன்று
இருக்கும் சினிமா சூழலில் டிஸ்கஷனுக்கே அது போதாது என்கிறீர்களா?

மிகக்குறைந்த செலவில் படம் எடுப்பது தான் திறமையான இயக்குனருக்கு சவால்
என்பதை நிரூபிக்கும் வகையில் தெலுங்கின் பிரபல இயக்குனர் ராம்கோபால்வர்மா
இரண்டேகால் லட்சத்தில் ஒரு படம் எடுத்து வெளியிட்டு அதனை சூப்பர்
ஹிட்டும் ஆக்கினார்.

தமிழ்நாட்டில் சினிமாவுக்கு வரத் துடிக்கும் இளம் இயக்குனர்களுக்கு
அந்த படம் ஒரு பாடமாக அமையட்டுமே என்று அதனை வாங்கி டப் செய்து
சாக்கோபார் என்ற டைட்டிலில் வெளியிடுகிறார் தயாரிப்பாளர் மதுராஜ்.

இந்த படம் பற்றி மதுராஜ் என்ன சொல்கிறார்? ‘’ இந்திய சினிமாவில் ஒரு
வரலாற்று சாதனை செய்த திரைப்படம் தமிழில் ’சாக்கோபாரா’க வெளிவருகிறது.

ஒரு திரைப்படம் எடுக்க ஒரு அலுவலகம் அமைப்போம். அதற்கு குறைந்தபட்சம்
இரண்டு லட்சத்தில் இருந்து 3 லட்சம் அட்வான்ஸாக கொடுப்போம்.

ஆனால் அந்த
அட்வான்ஸ் பணத்திலேயே படத்தை முடித்திருக்கிறார்கள் என்றால் நம்ப
முடிகிறதா? நம்ப முடியவில்லை என்றால் வரும் 26 ஆம் தேதி தியேட்டரில்
வந்து பாருங்கள்.

வெறும் இரண்டேகால் லட்சம் பட்ஜெட்டில் ஒரு தரமான படத்தை
ராம்கோபால் வர்மா இயக்கியுள்ளார்.

இதில் இதுவரை இந்திய சினிமாவில்
காட்டப்படாத காட்சிக் கோணங்கள் இடம் பெற்று இருக்கிறது. கிளாமர் ஹாரர்
படமான சாக்கோபார் படத்தில் ஆறு பேர் மட்டுமே நடித்து இருக்கிறார்கள்.

ஆறு
நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்துள்ளது. அதன்பிறகு இப்படத்திற்கு
ராம்கோபால்வர்மா ஒன்றரை கோடி சம்பளமாக வாங்கியிருக்கிறார். தெலுங்கிலும்

இந்தியிலும் சக்கைபோடு போட்ட இந்த படத்தை இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம்
என வெளிவந்து இருக்கிறது.

நான் ஹைதராபாத் சென்றபோது யதார்த்தமாக பார்த்த படம் தான் இது.
படத்தைப் பற்றி கேள்விப்பட்டதும் வாங்கி வெளியிட முடிவு செய்துவிட்டேன்.

எப்போதும் சர்ச்சைக்கு பெயர் பெற்ற இயக்குனர் ராம்கோபால்வர்மா ‘என் படம்
தமிழ் ரசிகர்களுக்கு புரியாது’ என தர யோசித்தார்.

நான் உறுதியாக இருந்து
படத்தை வாங்கி டப்பிங் செய்துள்ளேன். ஒரே ஒரு லொக்கேஷனில் மிகக்குறைந்த
கலைஞர்களை
வைத்து மிக்க்குறைந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள சாக்கோபார் படம்
திரைத்துறையினருக்கு மிகவும் உதவும்.

சாதாரண ரசிகனையும்
திருப்திபடுத்தும் அளவுக்கு திகில் காட்சிகளும், கவர்ச்சியும்
நிறைந்திருக்கிறது சாக்கோபார்.

இப்படியும் நடக்குமா என்ற ஆச்சர்யம்
உங்களுக்கு இருந்தால் சாக்கோபார் படத்தை ஒருமுறை பார்த்துவிட்டு உங்கள்
கருத்துகளை பகிருங்கள்.

அடுத்து தமிழில் வெளியாகும் குற்றமே தண்டனை
படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை வாங்கியிருக்கிறேன். அந்த பணிகள்
போய்க்கொண்டிருக்கிறது.

இங்கே குற்றமே தண்டனை வெளியாகும் நாளிலேயே
அங்கேயும் அந்த படம் வெளியாகும்’’ என்றார்.

ரசிகர்களுக்கு இன்று கபாலி தரும் இன்ப அதிர்ச்சி

ரசிகர்களுக்கு இன்று கபாலி தரும் இன்ப அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali movie stillsரஜினிகாந்த் நடித்த கபாலி படத்திற்கு உலகளவில் பெரும் எதிர்பார்ப்பும் உருவானது.

அதன்படியே இப்படம் வெளியாகி உலகம் முழுவதும் ரூ.550 கோடியை வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறாத ஒரு பாடலை இன்று வெளியிடவிருக்கிறார்களாம்.

இத்தகவலை இப்படத்தின் இசை உரிமையை பெற்ற திங்க்மியூசிக் இந்தியா நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளது.

ஏற்கெனவே கபாலி சாதனை படைத்துள்ள நிலையில், இந்த பாடல் பெரும் அலையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கபாலி வழியில் கமல் சகோதரர் சாருஹாசன்

கபாலி வழியில் கமல் சகோதரர் சாருஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

charu haasan stillsரஞ்சித் இயக்கிய கபாலி படத்தில் ரஜினிகாந்த், மலேசியா டானாக நடித்திருந்தார்.

இப்படம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இதே போன்ற கதையம்சம் கொண்ட கேரக்டரில் நடிக்கவிருக்கிறாராம் சாருஹாசன்.

இவர் கமல்ஹாசனின் சகோதரர் என்பது தாங்கள் அறிந்ததே.

அறிமுக இயக்குனர் விஜய்ஸ்ரீ இப்படத்தை இயக்க, ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். பிரகாஷ் நிக்கி இசையமைக்கிறார்.

முதலில் இவ்வேடத்தில் நடிக்க 88 வயதான சாருஹாசன் மறுத்தாராம். பின்னர் இயக்குனர் வறுபுறுத்தவே நடிக்க ஒப்புக் கொண்டு இருக்கிறார்.

இப்படத்தில் சாருஹாசன் உள்பட எவருக்கும் மேக்கப் கிடையதாம். அதாவது இப்படத்தின் டேக்லைன் ‘நோ பவுடர் நோ மேக்கப்’ என்பதுதான் ஹைலைட்

விஜய் தந்தை எஸ்.ஏ.சி.க்கு விபத்து; அதிர்ச்சியில் ரசிகர்கள்

விஜய் தந்தை எஸ்.ஏ.சி.க்கு விபத்து; அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay dad s a chandrasekar admitted in hospital for regular checkupஇளைய தளபதி விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ். ஏ. சந்திரசேகர் அவர்களுக்கு சற்றுமுன் சிறு விபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள குமரகோம் என்ற இடத்தில் உள்ள ஒரு அலுவலகத்திற்கு சென்று வந்துள்ளார்.

அங்கு கால் தவறி கீழே விழுந்துள்ளார்.

எனவே அவரை உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தகவல்கள் வந்தன.

ஆனால் அதை மறுத்துள்ள விஜய் தரப்பு… குளித்துவிட்டு வரும்போது , வழக்கி விழுந்துள்ளார்.

வேறு எந்த விதமான விபத்தும் ஏற்படவில்லை. அவர் நலமுடன் உள்ளார்  என தெரிவித்துள்ளனர்.

 

 

ரஜினிக்கு தேசிய விருது; கபாலி தீர்த்து வைப்பாரா?

ரஜினிக்கு தேசிய விருது; கபாலி தீர்த்து வைப்பாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali stillsஇந்தியளவில் ரஜினிகாந்துக்கு இருக்கும் மாஸ் கபாலி மூலம் உலக நாடுகளுக்கும் தெரிந்தது.

இதனால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

ஆனால் அவர்களுக்கு இருக்கும் ஒரே குறை படங்களின் மூலம் ரஜினிக்கு இதுவரை தேசிய விருது கிடைக்காததுதான்.

கபாலி படத்தில் ரஜினியின் நடிப்பை பலரும் பாராட்டி வரும் நிலையில், இப்படத்தை தேசிய விருது குழுவுக்கு அனுப்ப இருக்கிறாராம் தயாரிப்பாளர் தாணு.

எனவே, கபாலி மூலம் ரஜினி ரசிகர்களிள் நீண்ட நாள் குறை தீருமா என பார்ப்போம்.

அஜித்-நயன்தாரா-விக்னேஷ் சிவன் இணையும் படம்

அஜித்-நயன்தாரா-விக்னேஷ் சிவன் இணையும் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith nayanthara vignesh shivanவிக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடிதான் படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது.

இதனையடுத்து காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கவிருப்பதாக செய்திகள் வந்தன.

ஆனால் அப்படம் என்னவானது என்ற விவரம் தெரியாத நிலையில், விக்னேஷ் சிவன் தன் அடுத்த படத்தை இயக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இப்படத்தை நயன்தாரா தயாரித்து நாயகியாக நடிக்கக்கூடும் எனவும் தெரிய வந்துள்ளது.

இதில் ஒரு மாஸ் ஹீரோ நாயகனாக வேண்டுமென்பதால், அஜித்தின் கால்ஷீட்டை பெறும் முயற்சியில் இருவரும் இணைந்துள்ளனர்.

இதற்காக அஜித்துக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கவும் தயாராக இருக்கிறாராம் நயன்.

ஆனால் அஜித் மௌனம் கலைத்தால்தான் இந்த தகவல்களுக்கு நம்பகத்தன்மை கிடைக்கும் என்பதே உண்மை.

More Articles
Follows