தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய்சேதுபதியின் உதவியாளர் தன்னை தாக்கியதாகவும், அவமரியாதை செய்ததாக நடிகர் மகாகாந்தி என்பவர் சில நாட்களுக்கு முன் வழக்கு தாக்கல் செய்தார்.
சென்னை சைதாப்பேட்டை 9வது பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில் நடிகர் மகா காந்தி என்பவர் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கில் ஜனவரி 4ல் ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு.
மனுவில்… நவம்பர் 2ஆம் தேதி இரவு பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்ததாகவும், ஆனால் ஏற்க மறுத்தி பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்தி பேசியதுடன், தன்னையும் தனது சாதியையும் பற்றி தவறாக பேசியதாகவும் வழக்கு தொடுத்துள்ளார்.
விஜய்சேதுபதியின் மேலாளர் ஜான்சன் மூலமாக தாக்கியதாகவும், காதில் அறைந்ததாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனால் தனது செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளார்கள்.
உண்மை இவ்வாறிருக்க, மறுநாள் மீடியாக்களில் தான் தாக்கப்பட்டதாக விஜய்சேதுபதி தரப்பில் அவதூறு பரப்புவதாக மனுவில் குற்றம் குறிப்பிட்டுள்ளார்.
எனவே திரைத்துறையில் இருக்கின்ற சக நடிகரை பாராட்ட சென்ற தன்னை தாக்கி, அதை உண்மைக்கு புறம்பாக செய்தியாக்கிய நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
Case filed against Vijay Sethupathi