‘அஜித் 62’ ஆரம்பம்.; நயன்தாரா விக்னேஷ் சிவனை கைது செய்ய போலீசில் புகார்

‘அஜித் 62’ ஆரம்பம்.; நயன்தாரா விக்னேஷ் சிவனை கைது செய்ய போலீசில் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையில் உள்ள சாலிகிராமம் என்ற பகுதியைச் சேர்ந்தவ சமூக ஆர்வலர் கண்ணன்.

இவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நயன்தாராவின் தயாரிப்பு கம்பெனி குறித்து புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில்…

அஜித் நடிப்பில், விக்னேஷ் சிவன், ‘AK62’ என்ற படத்தை இயக்க உள்ளார்.

இந்த அறிவிப்பால் விக்னேஷ் சிவன் வீட்டில் பட்டாசு வெடித்து கொண்டாடி உள்ளார். இதில் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களும் பங்கேற்றுள்ளனர்.

விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் காதலித்து வருகின்றனர்.

இவர்கள் ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளனர்.

தமிழக போலீஸ் அதிகாரிகள் ரவுடிகளை ஒழிக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

ஆனால், சமூக பொறுப்பின்றி, இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும், ரவுடிகளை ஊக்கப்படுத்தும் விதமாக, ரவுடி பிக்சர்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருப்பது, பொது மக்களை அதிர்ச்சியடைச் செய்துள்ளது.

எனவே ரவுடி பிக்சர்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனத்தை தடை செய்ய வேண்டும்.

இருவர் மீதும், வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவை கைது செய்ய வேண்டும்.”

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

‘AK62’ என்ற படத்தை லைகா தயாரிக்க விக்னேஷ் சிவன் இயக்க நயன்தாரா நாயகியாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Case filed against Nayanthara and Vignesh Shivan

இணையத்தை பற்ற வைத்த அஜித் – ஷாலினியின் ரியல் ரொமாண்டிக் ஸ்டில்

இணையத்தை பற்ற வைத்த அஜித் – ஷாலினியின் ரியல் ரொமாண்டிக் ஸ்டில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ராஜா சின்ன ரோஜா’ படத்தில் ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஷாலினி.

விஜய்யுடன் ‘காதலுக்கு மரியாதை’, மாதவனுடன் ‘அலைபாயுதே’, பிரசாந்துடன் ‘பிரியாத வரம் வேண்டும்’ உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தார்.

சரண் இயக்கிய ‘அமர்க்களம்’ படத்தில் அஜித் & ஷாலினி இணைந்து நடித்தனர்.

அப்போதே ஷாலினியிடம் தன் காதலை வெளிப்படுத்தினார் அஜித்.

இதன் பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் காதலித்து 2000 ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு ஷாலினி திரைப்படங்களில் நடிக்கவில்லை.

தற்போது இவர்களுக்கு ஒரு மகள் (அனோஷ்கா) ஒரு மகன் (ஆத்விக்) உள்ளனர்.

ஷாலினியின் தங்கை ஷாம்லியும் நடிகை ஆவார். இவர் ‘அஞ்சலி’ படத்தில் குழந்தையாக நடித்தவர்

இந்த நிலையில் அஜித் & ஷாலினி இருக்கும் ரொமான்டிக்கான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் ஷாம்லி.

இது இவர்களின் குடும்ப நிகழ்ச்சியில் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. அஜித் ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

Ajith and Shalini’s latest romantic photo goes viral

நடிகரிடமே ‘சதுரங்கவேட்டை’ மோசடி.; கோடிகளில் பணத்தை இழந்த விக்னேஷ்

நடிகரிடமே ‘சதுரங்கவேட்டை’ மோசடி.; கோடிகளில் பணத்தை இழந்த விக்னேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நட்டி நடித்த ‘சதுரங்கவேட்டை’ படத்தில் ரைஸ் புல்லிங் இரிடியம் மோசடி பற்றிய காட்சிகள் இருக்கும். இந்த படம் வெளியானபோது இந்த மோசடி பரபரப்பாக பேசப்பட்டது.

தற்போது இந்த மோசடி ஒரு சினிமா நடிகரிடமே நடந்துள்ளது.

கிழக்கு சீமையிலே, பசும்பொன், மண்ணுக்கு மரியாதை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் விக்னேஷ்.

தற்போது டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

அண்மையில் நந்தா பெரியசாமி இயக்கிய ‘ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் நடித்து இருந்தார்.

இந்த நிலையில் இரிடியம் மோசடி கும்பலிடம் 2 கோடி ரூபாய் வரை விக்னேஷ் ஏமாந்துள்ளதாக சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: …

“நான் 30 வருடங்கள் சினிமாவில் நடிக்கிறேன். இத்துடன் சொந்தமாகவும் தொழில் செய்து வருகிறேன்.

எனது கடையில் வாடகைதாரராக இருந்த ராம்பிரபு என்பவர் என்னிடம் பழகினார்.

அவர் இரிடியம் விற்கும் தொழிலை சட்டபூர்வமாக செய்வதாக சொல்லி அதில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும்” என்றார்.

என்னிடம் ரூ.5 லட்சம் கொடுத்தால், ரூ.500 கோடியாக திருப்பி தருகிறேன் என நம்பிக்கை ஊட்டும் வகையில் பேசினார்.

அவரின் பேச்சை நம்பி நான் எனது வங்கி கணக்கு மூலமாகவும், மேலும் கடனாக பெற்றும் ரூ.1.81 கோடி கொடுத்தேன்.

ஆனால் அதன் பிறகு அவர் என்னிடம் பேசுவதை தவிர்த்தார்.

என்னைப்போல நிறைய பேர்களிடம் அவர் இதுபோல் பணம் வசூலித்திருப்பது தெரிய வந்தது. அவர் மோசடி பேர்வழி என்றும் தகவல் வந்தது.

யாருக்கும் சொன்னபடி பணம் கொடுக்கவில்லை.

என்னைப்போல 500 பேரிடம் ராம்பிரபு பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவர் மீதும், அவருடன் இருப்பவர்கள் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு புகார் மனுவில் நடிகர் விக்னேஷ் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையில் மோசடி வழக்கில் விருதுநகர் போலீசார் ராம்பிரபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Vignesh loses crores to Iridium scam gang

KGF-2 படத்தின் TOOFAN சாங் வைரல்..; ரசிகர்களின் கனவை நிறைவேற்றும் ட்ரீம் வாரியர்ஸ்

KGF-2 படத்தின் TOOFAN சாங் வைரல்..; ரசிகர்களின் கனவை நிறைவேற்றும் ட்ரீம் வாரியர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்னணி நடிகர் யஷ் நடிக்கும் ‘கே ஜி எஃப் ‘ படத்தின் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்ற ‘தூஃபான்..’ பாடல் வெளியாகி இணையத்தில் சாதனை படைத்து வருகிறது.

ஹோம்பாலே பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கே ஜி எஃப் 2’.

இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி, இந்திய அளவில் வசூலை வாரி குவித்தது. இதனையடுத்து ‘கே ஜி எஃப் 2’ திரைப்படம், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்..

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி வரும் ‘கே ஜி எஃப் 2’ படத்தில் கதையின் நாயகனாக ராக் ஸ்டார் யஷ் நடித்திருக்கிறார்.

இவருடன் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீணா டண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பர்சூர் இசை அமைத்திருக்கிறார்.

இந்தப்படத்தில் பாடலாசிரியர் மதுரகவி எழுதி, ‘ தூஃபான்’ என தொடங்கும் பாடல் இணையத்தில் வெளியானது.

வெளியான குறுகிய தருணங்களில் யூடியூப் இணையதளத்தில், ‘மியூசிக்’ பிரிவில் முதலிடத்தைப் பெற்று, ட்ரெண்டிங்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த பாடலில் ‘ராக்ஸ்டார்’ யஷ்ஷின் தோற்றமும், பாடகர்களின் உணர்ச்சிகரமான குரல்களும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

‘கே ஜி எஃப்’ படத்தின் முதல் பாகத்தை போலவே பிரமாண்டமான காட்சி அமைப்பின் பின்னணியில் ‘தூஃபான்..’ பாடல் இடம் பெற்றிருப்பதால், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

http://bit.ly/ToofanAlllanguagesongs

#Toofan – India’s Most Viewed Lyrical Video Song in 24 hours

மாநாடு’ படத்தை விட ட்விஸ்ட்.. ‘மன்மத லீலை’ கில்மா படமா.?.. முத்தத்தால் ஹீரோயின்ஸ்க்கு பாதிப்பில்ல..; பிரஸ்மீட் சுவாரஸ்யங்கள்

மாநாடு’ படத்தை விட ட்விஸ்ட்.. ‘மன்மத லீலை’ கில்மா படமா.?.. முத்தத்தால் ஹீரோயின்ஸ்க்கு பாதிப்பில்ல..; பிரஸ்மீட் சுவாரஸ்யங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rockfort Entertainment சார்பில் T.முருகானந்தம் தயாரிக்க, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், அசோக் செல்வன் நடிப்பில், நவீன இளைஞனின் வாழ்வில் நடக்கும் லீலைகளை சொல்லும் ஒரு அருமையான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் தான், “மன்மதலீலை”. இப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார்.

2022 ஏப்ரல் 1 உலகமெங்கும் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

Rockfort Entertainment சார்பாக கிரியேடிவ் புரொடுயுசர் K.B.ஶ்ரீராம் அனைவரையும் வரவேற்றார்.

இந்நிகழ்வினில் Rockfort Entertainment சார்பாக நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி முருகனிடம், நடிகர் சங்க வளர்ச்சி நிதியாக ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலை அளிக்கப்பட்டது.

தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் T சிவா பேசியதாவது…

நிச்சயமாக இது ஆபாசமான படமல்ல. இயக்குநர் பாலசந்தர் இருந்து அவர் எடுத்திருந்தால் பாலச்சந்தரின் மன்மதலீலை என்று சொல்லக்கூடிய தகுதி கொண்ட படம். குழந்தைகளுடன் குடும்பங்களுடன் பார்க்க தகுதியுள்ள படம். ‘மாநாடு’ படத்தை விட அதிகமான டிவிஸ்ட்டுடன் இந்தப் படம் உங்களை ஆச்சரியப்படுத்தும், வெங்கட் பிரபு மிக அட்டகாசமாக இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்த காலத்தின் ஜெமினி கணேசன் அசோக் செல்வன் தான். இந்தப் படம் மிக ஜாலியான படம். படம் மிக பெரிய வெற்றி பெறும் வாழ்த்துக்கள்

நடிகை ரியா சுமன் பேசியதாவது…

என்னுடைய முந்தைய படங்களை விட இப்படம் மிக வித்தியாசமான படம், வெங்கட் பிரபு படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. அவர் எனக்கு லீலா பாத்திரத்தை தந்ததற்கு நன்றி.

அசோக் செல்வனுடன் வேலை பார்த்தது மிக ஜாலியாக சந்தோஷமாக இருந்தது. இந்தப் படத்தை நீங்கள் சந்தோஷமாக பார்த்து ரசிக்கலாம். எல்லோருக்கும் நன்றி.

ஒளிப்பதிவாளர் தமிழ் A அழகன் பேசியதாவது…

இப்பட வாய்ப்பு தந்ததற்கு வெங்கட் பிரபு சாருக்கு நன்றி. அசோக் என் காலேஜ் சீனியர் அவருடன் வேலை பார்த்தது நல்ல அனுபவம். நான் வேலை பார்த்த தெலுங்கு படத்திலும் சம்யுக்தா ஹெக்டே தான் நாயகி. இதிலும் அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. படம் நன்றாக வந்துள்ளது எல்லோருக்கும் நன்றி.

நாயகி சம்யுக்தா ஹெக்டே பேசியதாவது..

எல்லோருக்கும் மிக்க நன்றி. இந்த படத்தில் வேலை செய்தது மிக மிக சந்தோஷமாக இருந்தது. ஏப்ரல் 1 தியேட்டரில் வருகிறது எல்லோரும் வந்து பாருங்கள். படம் உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் நன்றி.

நாயகன் அசோக் செல்வன் பேசியதாவது…

காலேஜ் முடிந்த காலத்தில் நண்பர்களுடன் சென்னை 28 பார்த்தோம், இப்போது வெங்கட் பிரபு அண்ணாவுடன் வேலை பார்த்தது வரம், கொரோனா டைம்ல பரிசோதனை முயற்சியாக இதை பண்ணலாம் என்றார். நடுவில் எனக்கு கொரோனா எல்லாம் வந்து போனது, அந்த நேரத்தில் எடுத்தது தான் இந்த முத்த காட்சிகள் எல்லாம். ஆனாலும் ஹீரோயின்கள் யாரும் பாதிப்பிற்கு உள்ளாகவில்லை. பலர் இந்தப் படம் ஏன் செய்தீர்கள் என கேட்டார்கள், இந்த படத்தில் எந்த கெட்ட விசயமும் இல்லை என எனக்கு தெரிந்தது. என்னை நான் ஒரு நடிகனாக மட்டுமே அடையாளப்படுத்தி கொள்ள விரும்புகிறேன். இந்தப் படம் மிக மிக நல்ல படம். எனக்கு வாய்ப்பு தந்த அனைவருக்கும் நன்றி.

ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் பேசியதாவது…

கேமராமேன் தமிழ் A அழகன் என் உதவியாளர் தான். மிக நல்ல பையன். அவரது லீலைகளையே ஒரு படமாக எடுக்கலாம். வெங்கட் பிரபு ஒளிப்பதிவாளரை ஈஸியாக வைத்து கொள்வார். இசை நன்றாக இருக்கிறது. படமும் அழகாக வந்துள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் சிங்காரவேலன் பேசியதாவது….

திரைக்கதையில் அசத்தகூடியவர்களில் சமீப காலத்தில் வெங்கட் பிரபுவை மிஞ்சும் வேறொருவர் இல்லை. மாநாடு படத்தில் அந்தளவு அசத்தியிருப்பார் அதே போல் இந்தப்படத்திலும் மிக வித்தியாசமாக அசத்தியுள்ளார். இந்தப் படத்திற்கு பிறகு அனைவரும் திரைக்கதைக்காக வெங்கட் பிரபுவை பாராட்டுவார்கள். எல்லோருக்கும் லாபம் தந்த படம் மாநாடு, அதே போல் இந்த படமும் வெற்றி பெறும் நன்றி.

நடிகர் நிதின் சத்யா பேசியதாவது…

இந்தப்படம் நான் பார்த்து விட்டேன் இது அடல்ட் படம் கிடையாது. இது வெங்கட் பிரபுவின் விருந்தாக இருக்கும். அசோக் செல்வனை பார்த்து பொறாமையாக உள்ளது. இந்தப் படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி பெறும்.

இசையமைப்பாளர் பிரேம்ஜி பேசியாதாவது…

அண்ணன் படத்திற்கு நான் இசையமைத்து படம் ரிலீஸாவது மகிழ்ச்சி. கல்யாணமான அனைவரும் பார்க்க வேண்டிய படம், 2010 லும் 2020 லும் நடக்க கூடிய கதை. படத்தில் பெண்களை உஷார் செய்வது எப்படி என அசோக் சொல்லி தருவார்.

எல்லோரும் பார்க்கக்கூடிய படம். எங்க அண்ணனுக்கு பயங்கரமான மூளை. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். இந்த படத்தில் நிறைய க்ளாப்ஸ் கிடைக்கும். படத்தை தியேட்டரில் பார்த்து ரசியுங்கள் நன்றி.

நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி முருகன் பேசியதாவது…

இந்தப்படத்திற்கு என்னை அழைத்த போது நான் பொதுவாக சினிமா விழாக்களுக்கு வருவதில்லை என மறுத்தேன், நடிகர் சங்கத்திற்கு நிதி அளிப்பதாக சொன்னார்கள் நடந்தே வருகிறேன் என்றேன். இந்தப்படம் எல்லோரும் நன்றாக இருப்பதாக சொல்கிறார்கள் இது அடல்ட் படம் அல்ல, வெங்கட் பிரபு மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர் தம்பியுடன் இணைந்து நல்ல படங்கள் தந்து வருகிறார். இந்தப் படம் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

இயக்குநர் வெங்கட் பிரபு பேசியதாவது…

என்னுடைய உதவியாளர் மணிவண்ணனின் கதை தான் இது. கொரோனா காலத்தில் வித்தியாசமாக ஏதாவது செய்யலாம் என்ற பொது இந்தக் கதை வந்தது, அருமையான கதை. மணிவண்ணன் பெரிய இடத்திற்கு செல்வார். அசோக்கை கொரோனா நேரத்தில் சந்தித்து இந்தக் கதை சொன்னேன் உடனே செய்யலாம் என்றார்.

என் உடன் பணிபுரிந்த கலைஞர்களின் உதவியாளர்கள் மூன்று பேருடன் இப்படம் செய்துள்ளேன். யுவனின் உதவியாளர் தான் பிரேம்ஜி. இப்படம் கில்மா படம் கிடையாது. எனக்கும் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள், நான் அப்படி படம் எடுக்க மாட்டேன்.

இந்தப் படம் கண்டிப்பாக அனைவரும் இணைந்து ரசிக்கும் படியான படமாக இருக்கும் உங்களுக்கு பிடிக்கும். இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி.

Manmatha Leelai Press Meet highlights

தமன் இசையில் சிவகார்த்திகேயன் ஜோடியாக உக்ரேனியன் நடிகை ஒப்பந்தம்

தமன் இசையில் சிவகார்த்திகேயன் ஜோடியாக உக்ரேனியன் நடிகை ஒப்பந்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘SK 20’ படத்தின் படப்பிடிப்பு, மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் நடிக்கும் பிரபல நடிகர் நடிகைகள் குறித்த தகவல்கள் ரசிகர்களிடம் ஏற்கனவே ஆவலை குவித்த நிலையில், அடுத்த அதிரடியாக படத்தின் நாயகி குறித்து அற்புதமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

உக்ரேனியன் நடிகை மரியா ரியாபோஷப்கா இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்திற்கு அவரது பங்களிப்பு மிகப்பெரும் பலமாக அமையும் என ஒட்டுமொத்த படக்குழுவினரும் நம்புகிறார்கள்.

சர்வதேசத் திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பிற்காக விமர்சன ரீதியாக பெரும் பாராட்டுக்களை குவித்தவர் அவர். இப்படத்திற்காக பல கலைஞர்களை பரிசீலித்த பிறகு, தயாரிப்பாளர்கள் மரியா ரியாபோஷப்கா படத்தின் பாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமானவர் என்று கருதி அவரை தேர்ந்தெடுத்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பில் அவர் ஏற்கனவே பங்குகொண்டு நடித்து வருகிறார்.

இப்படத்தை சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘ஜதி ரத்னதாலு’ படம் மூலம் புகழ் பெற்ற அனுதீப் KV இயக்குகிறார்.

நாராயண்தாஸ் நரங், சுரேஷ் பாபு, மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் இணைந்து தயாரிக்க, அருண் விஷ்வா இப்படத்தில் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கப்பட்டது.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயனுடன் இணைந்து திரையுலகில் இணையும் இந்தப் படத்தில் சத்யராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் முக்கிய பகுதிகள் காரைக்குடி மற்றும் பாண்டிச்சேரியின் கவர்ச்சிகரமான இடங்களிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் படமாக்கப்படுகிறது.

இந்த படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைப்பது மிகப்பெரிய சிறப்பம்சமாகும். தமன் தொடர்ந்து சார்ட்பஸ்டர் ஆல்பங்களை வழங்கி வருவதால், சிவகார்த்திகேயனுடன் அவரது கூட்டணி ரசிகர்களுக்கு பெரு விருந்தாக இருக்கும்.

Ukraine actress is on board for Sivakarthikeyan’s next

More Articles
Follows