தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னையில் உள்ள சாலிகிராமம் என்ற பகுதியைச் சேர்ந்தவ சமூக ஆர்வலர் கண்ணன்.
இவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நயன்தாராவின் தயாரிப்பு கம்பெனி குறித்து புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில்…
அஜித் நடிப்பில், விக்னேஷ் சிவன், ‘AK62’ என்ற படத்தை இயக்க உள்ளார்.
இந்த அறிவிப்பால் விக்னேஷ் சிவன் வீட்டில் பட்டாசு வெடித்து கொண்டாடி உள்ளார். இதில் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களும் பங்கேற்றுள்ளனர்.
விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் காதலித்து வருகின்றனர்.
இவர்கள் ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளனர்.
தமிழக போலீஸ் அதிகாரிகள் ரவுடிகளை ஒழிக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
ஆனால், சமூக பொறுப்பின்றி, இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும், ரவுடிகளை ஊக்கப்படுத்தும் விதமாக, ரவுடி பிக்சர்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருப்பது, பொது மக்களை அதிர்ச்சியடைச் செய்துள்ளது.
எனவே ரவுடி பிக்சர்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனத்தை தடை செய்ய வேண்டும்.
இருவர் மீதும், வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவை கைது செய்ய வேண்டும்.”
இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
‘AK62’ என்ற படத்தை லைகா தயாரிக்க விக்னேஷ் சிவன் இயக்க நயன்தாரா நாயகியாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Case filed against Nayanthara and Vignesh Shivan