தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி விவசாயிகள் சார்பில் ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஹரியானா, பஞ்சாப், கேரளா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
கிட்டத்தட்ட 2 வாரங்களாக அதாவது கடந்த நவம்பர் 26-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசு சார்பில் விவசாயிகளிடம பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் விவசாயிகளுக்கு குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் ஆதரவு கொடுத்துள்ளார்.
வேளாண் சட்டத்தை திரும்ப பெறாவிட்டால் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை திருப்பி அளிப்பேன் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இவர் 2008 ஒலிம்பிக் போட்டியில் வெண்கலமும், உலக சாம்பியன்ஷிப், காமென்வெல்த் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் பதக்கங்களையும் வென்றிருக்கிறார்.
Boxer Vijender Singh joins protesting farmers, says he will return Rajiv Gandhi Khel Ratna