முதல் ஸ்னூக்கர் படத்தை இயக்கும் பாலுமகேந்திரா மாணவன்

முதல் ஸ்னூக்கர் படத்தை இயக்கும் பாலுமகேந்திரா மாணவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலர் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் பயின்ற மணி சேகர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் சஞ்ஜீவன்.

இப்படத்தில் வினோத் லோகிதாஸ், ஷிவ் நிஷாந்த், விமல் ராஜா, சத்யா என்.ஜே, யாஷின், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கார்த்திக் ஸ்வர்னகுமார் ஒளிப்பதிவில் தனுஜ் மேனன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் படத்தொகுப்பை ஷிபு நீல் பி.ஆர் கவனித்துள்ளார்.

இப்படத்தின் நடனத்தை சாண்டி மாஸ்டர் கையாள, ஸ்டண்டை ஃபயர் கார்த்தி மேற்கொண்டுள்ளார்.

இப்படத்தை பற்றி இயக்குனர் மணி சேகர் கூறியதாவது…

“நான் இயக்குனர் பாலுமகேந்திரா சாரின் சினிமா பட்டறையில் பயின்ற மாணவன் என்பதாலே படங்களை புதுவிதமாக அணுக வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வந்துவிட்டது.

இப்படம் தென்னிந்தியாவின் முதல் ஸ்னூக்கர் திரைப்படம். நான் அதிக நேரம் ஸ்னூக்கர் விளையாட்டிற்காக நண்பர்களுடன் செலவழித்திருக்கிறேன்.

ஸ்னூக்கர் என்றாலே சூதாட்டம், அதிக பண வைத்து விளையாடக் கூடியது போன்ற பேச்சுக்கள் எழுகிறது. உண்மையில் மற்ற விளையாட்டுக்களை போன்று தான் இதுவும் ஒரு விளையாட்டு.

இப்படம் இளைஞர்களை வெகுவாக கவரக்கூடிய வகையில் கதையையும் திரைக்கதையையும் வடிவமைத்துள்ளேன். ஒரு படம் என்றால் அது ஒரு ஜானரை மைய்யமாக வைத்துக் கொண்டு அதனை உருவாக்குவார்கள்.

இந்த படத்தில் ரசிகர்கள் அனைத்து விதமான ஜானர்களையும் அனுபவிக்கலாம். இதில் காதல், காமெடி, திரில்லர் போன்ற விஷயங்களை ரசிகர்கள் அனுபவிக்க முடியும்.

இப்படத்தில் நடந்த முக்கியமான ஒரு நிகழ்வை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். படப்பிடிப்பில் முக்கியமான காட்சியை படமாக்க மழை தேவைப்பட்டது.

அதற்காக செயற்கை மழையை தயார் செய்ய முயற்சி செய்தோம் சில காரணங்களால் அதனை தயார் செய்ய முடியாமல் போனது. சரியாக படப்பிடிப்பு தொடங்க இருந்த சிறிது நேரத்தில் நாங்கள் எதிர்ப்பார்த்த காற்றுடன் கூடிய மழை இயற்கையாக வந்து எங்களை ஆச்சரியப்படுத்தியது.

இயக்குனர் பாலுமகேந்திரா சார் எங்களை நேரில் வந்து ஆசிர்வதித்து போன்று இருந்தது. ஏனென்றால் பாலுமகேந்திரா சார் இயக்கிய மூன்றாம் பிறை படத்தில் இதேப்போன்று ஒரு நிகழ்வு நடந்ததாக கேள்விப் பட்டிருக்கிறோம். எங்களின் படப்பிடிப்பிலும் இதே போன்று நடந்தது அவரின் ஆசியாக தோன்றியது. படம் மிகவும் சிறப்பாக வந்துள்ளது.

எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் வந்து படத்தை பார்த்து அனைத்தையும் அனுபவியுங்கள் என்றார்.

சஞ்ஜீவன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரல் ஆனது. இப்படம் அக்டோபர் 14 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

திருமணத்திற்குப் பிறகு கணவரை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்திய ‘பிகில்’ நடிகை

திருமணத்திற்குப் பிறகு கணவரை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்திய ‘பிகில்’ நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2019ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த சூப்பர் ஹிட் படமான ‘பிகில்’ படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார்.

பெண்கள் கால்பந்து அடிப்படையிலான திரைப்படத்தில் காயத்ரி ரெட்டி முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் காயத்ரி தனது நிச்சயதார்த்தத்தின் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டார்.

சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட அவர் தனது கணவரின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் மற்றும் “என் கணவரை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்துகிறோம்” என்று தலைப்பிட்டுள்ளார். திறமையான நடிகைக்கு இன்ஸ்டாகிராமில் வாழ்த்துகள் குவிகின்றன.

Gayathri Reddy

கேப்டன் மில்லர் படப்பிடிப்பிற்காக திருநெல்வேலி சென்றடைந்தார் தனுஷ்

கேப்டன் மில்லர் படப்பிடிப்பிற்காக திருநெல்வேலி சென்றடைந்தார் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு இரண்டு வாரங்களுக்கு முன்பு முறையான பூஜையுடன் தொடங்கியது.

1980 களின் பின்னணியில் எடுக்கப்படும் ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் ‘டாக்டர்’ & ‘டான்’ பட நடிகை பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக நடிகர் தனுஷ் திருநெல்வேலி சென்றுள்ளார் என்பது இப்போதைய லேட்டஸ்ட் அப்டேட்.

மேலும் நடிகர் தனுஷ் மூன்று வித்தியாசமான தோற்றங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வட இந்தியாவில் சோழர் வரலாறை கேட்டு தெரிஞ்சிக்கிறாங்க.– நடிகர் கார்த்தி

வட இந்தியாவில் சோழர் வரலாறை கேட்டு தெரிஞ்சிக்கிறாங்க.– நடிகர் கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இந்தப் படத்தில் வந்திய தேவனாக நடித்துள்ள கார்த்தி பத்திரிகையாளர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்தார்..

அப்போது அவர் பேசியதாவது…

“எனக்கு களைப்பாக இருந்தபோதும், இங்கு வந்து உங்களை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. மூன்று வருட உழைப்பிற்கு பலன் கிடைக்கும் தருணம் மகிழ்ச்சியாக உள்ளது.

அதிலும், பத்திரிகையாளர்கள் நீங்கள் இப்படத்தைப் பற்றி மிக ஆழமாக கேள்விகள் கேட்டு இப்படத்திற்கான மதிப்பை அதிகப்படுத்தியிருக்கிறீர்கள்.

பிற மாநிலங்களில் போனியின் செல்வன், போனியின் செல்வம் என்று கூறியவர்கள் இப்போது போனியின் செல்வன் அல்ல பொன்னியின் செல்வன் கல்கி எழுதியது என்று எல்லோருக்கும் தெரிகிறது.

அதுமட்டுமில்லாமல், பத்திரிகையாளர்களான நீங்கள் இதைப் பற்றி நிறைய கட்டுரைகள் எழுதியிருக்கிறீர்கள்.

அது இப்படத்திற்கு ஆர்வத்தை அதிகரித்துள்ளது. மேலும், படத்திற்கான ஆர்வத்தோடு நம் நாட்டு கலாச்சாரம், அந்த காலத்தில் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள்? எப்படி ஆட்சி நடத்தினார்கள்? என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

வெளியூர் செல்லும் போது சோழர்களின் வரலாறை கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள்.

மேலும், உங்களுடைய வாழ்த்துகள் எப்படி இருக்கும் என்று தெரியும். நேரில் வந்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி.

ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் அனைவருடனும் பணியாற்றியது புது அனுபவமாக இருந்தது. முக்கியமாக படிக்கும் பழக்கம் அதிகரித்திருக்கிறது. சோழர்கள் காலத்தில் இருந்த கலாச்சாரத்தை ஆழமாக ஆராய்ச்சி செய்து எழுதியிருந்தார் கல்கி.

அதேபோல், மணி சார் காதல், அரசியல் என்ற எந்த மாதிரியான படம் இயக்கினாலும் காட்சியில் உயர்தரம் இருக்கும். இப்படத்திலும் அந்த தரம் நிச்சயம் இருக்கும்” என்றார்.

மீண்டும் ‘கைதி’ கூட்டணி.; கார்த்திக்கு வில்லனாகும் ‘புஷ்பா’ பட டெரர் வில்லன்

மீண்டும் ‘கைதி’ கூட்டணி.; கார்த்திக்கு வில்லனாகும் ‘புஷ்பா’ பட டெரர் வில்லன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி ஆகிய படங்களை இயக்கியவர் ராஜூ முருகன்.

இதில் ‘ஜோக்கர்’ படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது.

இந்த நிலையில் ட்ரீம் வாரியர்ஸ் மற்றும் ராஜமுருகன் கூட்டணி மீண்டும் இணைய இந்த படத்தில் கார்த்திக் நாயகனாக நடிக்க உள்ளார்.

ஏற்கனவே கார்த்தி நடித்த ‘கைதி’ படத்தை இதே ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்த புதிய படத்தில் கார்த்திக்கு வில்லனாக தெலுங்கு நடிகர் சுனில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என கூறப்படுகிறது.

கடந்த வருடம் 2021ல் வெளியான ‘புஷ்பா’ படத்தில் வில்லனாக அல்லு அர்ஜூனை மிரட்டியிருந்தார் சுனில் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜமெளலி இயக்கிய ‘மரியாதை ராமண்ணா’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார் சுனில். (இந்தப் படம் தான் சந்தானம் நடிப்பில் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற பெயரில் தமிழில் ரீமைக்கானது.)

‘டான்’ இயக்குனரின் படத்தில் ரஜினி.; கோடிகளை கொட்டி கொடுக்கும் லைக்கா

‘டான்’ இயக்குனரின் படத்தில் ரஜினி.; கோடிகளை கொட்டி கொடுக்கும் லைக்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இந்த படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக சென்னையில் உள்ள ஆதித்யராம் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

ரஜினிகாந்த் அமர்ந்திருக்கும் சில காட்சிகளும் அவர் நடந்து செல்லும் சில காட்சிகளும் இணையதளத்தில் லீக் ஆனது.

இந்தப் படம் அடுத்த ஆண்டு 2023 கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்பின்னர் ரஜினி நடிக்கவுள்ள அவரின் 170-வது படத்தை ‘டான்’ பட டைரக்டர் சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் டிசம்பர் 12 ரஜினியின் பிறந்தநாளில் இதன் அறிவிப்பு வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் நடிக்க ரஜினிக்கு ரூ.125-130 கோடி வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

More Articles
Follows