தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
இதனால் இந்திய மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கை திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
தினக்கூலியை நம்பியுள்ள ஏழை மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இருந்தபோதிலும் இந்த கொடி நோயை எதிர்க்க வீட்டில் தங்களை தனிமைப்படுத்த வருகின்றனர்.
பிரபலங்கள் பலரும் ஏழை, எளியோருக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகர் இசையமைப்பாளர் அம்ரீஷ் கணேஷ் தனது பெண்குழந்தை ஜெய கௌஷிகாவின் முதல் பிறந்த நாளை முன்னிட்டு எளியவர்கள் 100 பேருக்கு தலா 1 மூட்டை என 100 மூட்டை அரிசி வழங்கியுள்ளார்.
பிரபல நடிகை Dr. ஜெயசித்ரா அவர்களின் புதல்வனும் பிரபல இசையமைப்பாளருமான அம்ரீஷ் வழக்காமாகவே தனது பிறந்த நாள் மற்றும் முக்கியமான நல்ல நாட்களை முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று (31.03.2020) மார்ச் 31 தனது பெண்குழந்தை ஜெய கௌஷிகா பிறந்த நாளை,வெகு வித்தியாசமான வகையில் கொண்டாடியுள்ளார் அம்ரீஷ்.
கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் காரணமாக அனைவரும் வீட்டிற்குள் தனிமைப்பட்டிருப்பதால தன் குழந்தையின் பிறந்த நாளை ஆதரவற்ற இல்லங்களுக்கு சென்று கொண்டாட முடியாத காரணத்தால் எளியவர்கள் 100 பேருக்கு தலா 1 மூட்டை அரிசி வழங்கி கொண்டாடியிருக்கிறார்.
இவரது செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
நடிகர் பிரபுதேவா நடிகர் லாரன்ஸ் முதலான பிரபலங்கள் இவரது செயலை பாராட்டி பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Amrish celebrated his daughter birthday by helping Poor peoples