தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இயக்குநர் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார் அமலாபால்.
ஆனால் சில மாதங்களிலேயே இருவருக்கும் விவாகரத்து ஆனது.
தற்போது 2வது திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார் விஜய்.
ஆனால் அமலாபால் படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் மும்பையைச் சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங்கை அமலாபால் 2வதாக திருமணம் செய்துள்ளதாக போட்டோஸ் வெளியானது.
அந்தப் படங்களை பவ்னிந்தர் சிங் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பின்னர் சில மணி நேரங்களில் அதை நீக்கி விட்டார்.
ஆனால் அப்போது அமைதியாக இருந்தார் அமலாபால்.
தற்போது சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார் அமலா.
அதில், ‘எக்ஸ் பாய் ப்ரெண்ட் பவ்னிந்தர் சிங், தனக்கும் அவருக்கும் திருமணம் ஆகிவிட்டதாக குறிப்பிட்டு சில படங்களை வெளியிட்டுள்ளார்.
அவற்றை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும், அவர் மீது அவதூறு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என அமலாபால் கேட்டு இருந்தார்.
இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வரவே பவ்னிந்தர் சிங்க்கு எதிராக அவதூறு வழக்கு தொடர அமலாபாலுக்கு அனுமதியளித்துள்ளார்.
Amala Paul to file case against her ex boy friend