தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் அமலாபால்.
இவர் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து செய்தார்.
இயக்குனர் விஜய்க்கு மறுமணம் நடந்து விட்டாலும் அமலாபால் மறு திருமணம் செய்து கொள்ளவில்லை.
சமீபத்தில் அமலாபால் தயாரித்து நாயகியாக நடித்திருந்த ‘கடாவர்’ படம் வெளியானது.
இந்நிலையில் அமலா பாலுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக அவரது முன்னாள் காதலன் பவ்நீந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ராஜஸ்தானை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமலா பால் அளித்த புகாரின்பேரில் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தனது காதலனை கருத்து வேறுபாட்டால் பிரிந்த நிலையில் தன்னை துன்புறுத்தியதாக புகார் அளித்துள்ளார்.
தன்னை ஏமாற்றி, அச்சுறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசிடம் புகார் அளித்திருந்தார்.
பவ்நீந்தர் சிங்குடன் இணைந்து திரைப்பட நிறுவனம் தொடங்கி நடத்தி வந்ததாகவும் அமலாபால் தகவல் அளித்துள்ளார்.
புதுச்சேரி பகுதியில் பாவந்தர் சிங் தத்தை கைது செய்து விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை
கூடுதல் தகவல்…
பிரபல பாடகரும் தனது நண்பருமான பவிந்தர் சிங்கை அமலா காதலிப்பதாக கூறப்பட்டது.
ஒரு கட்டத்தில் இருவரும் மணக்கோலத்தில் இருந்த படங்களை பவிந்தர்சிங் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு அது பரபரப்பாகவே பின்னர் நீக்கினார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
#AmalaPaul
JUST IN Sexual harassment: Actress Amala Paul’s ex-boyfriend arrested