தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 60-70 வருடங்களுக்கு மேலாக சபரிமலையில் 10 முதல் 50 வரையில் உள்ள பெண்களுக்கு அனுமதியில்லை.
ஆனால் அண்மையில் எல்லா வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என கேரள அரசை கேட்டுக் கொண்டது.
ஆனால் இதற்கு சபரிமலை தேவசம் போர்ட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதனால் சபரிமலை பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது.
இந்நிலையில் இன்று 2 பெண்கள் சபரிமலை சந்நிதானத்திற்கு இன்று செல்ல முயன்ற போது, போராட்டக்காரர்கள் தடுத்தனர்.
இறுதியாக அவர்கள் பக்தர்கள் இல்லை என போலீசாரும் அவர்களை திருப்பி அனுப்பினர்.
இந்த சம்பவம் குறித்து நடிகர் சிவகுமார் கூறியிருப்பதாவது…
“நூறு வருடங்களுக்கு முன்னர் வரை சபரிமலை தற்போது உள்ளதை விட மேலும் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. சந்நிதானத்துக்கு செல்ல சரியான பாதை வசதி இல்லை. விலங்குகள் தாக்கும் அபாயம் அதிகமாயிருந்தது.
எனவே ஆண்கள் மட்டும் கூட்டம் கூட்டமாக கோஷம் போட்டுக் கொண்டே சென்று வழிபட்டனர். பெண்களுடைய உதிர போக்கு மோப்ப சக்தி கொண்ட விலங்குகளை ஈர்க்கும் சக்தி கொண்டதால் அவர்களை ஆண்கள் உடன் அழைத்து செல்வதில்லை.
தற்போது காலம் நவீனமயமாகி விட்டது. பழைய காலத்து அச்சங்கள் இப்போது இல்லை. நீதிமன்றமும் அனுமதி வழங்கி விட்டது.
இனியும் பெண்களை சந்நிதானத்துக்குள் வரவே கூடாது என்று தடுப்பது தவறு. விரத காலங்களை தவிர்த்து வேறு நாட்களில் பெண்களும் வந்து வழிபாடு செய்யுமாறு ஒரு ஏற்பாடும் உடன்பாடும் உருவாகவேண்டும்” என சிவகுமார் கூறியுள்ளார்.
All women should be allowed in Sabarimala Temple says Sivakumar