நெகட்டிவ் ரோலில் அஜித்.. வில்லனாக விஜய்சேதுபதி..; மாஸ்டர் ப்ளானில் வினோத்.?

நெகட்டிவ் ரோலில் அஜித்.. வில்லனாக விஜய்சேதுபதி..; மாஸ்டர் ப்ளானில் வினோத்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை என ஹாட்ரிக் ஹிட் கொடுத்தவர் இயக்குனர் வினோத்.

இவர் தற்போது மீண்டும் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி உள்ளார். போனிகபூர் தயாரித்துள்ள இந்த படம் 2022 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இதனையடுத்து மீண்டும் போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் வினோத்.

இந்த படத்தில் மங்காத்தா பாணியில் நெகட்டிவ் ரோலில் அஜித் நடிக்கவுள்ளார்.

இந்தப் படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

இந்நிலையில் வினோத்தின் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இது சம்பந்தமாக விஜய்சேதுபதியை வினோத் சந்தித்து கதை சொன்னதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

இது அஜித் படத்தில் வில்லனாக விஜய்சேதுபதி நடிக்க போகிறாரா? அல்லது விஜய்சேதுபதியை நாயகனாக வைத்து தனிப்படத்தை வினோத் இயக்க போகிறாரா? என்பது தெரியவில்லை.

ஏற்கெனவே ரஜினிக்கும் விஜய்க்கும் வில்லனாக விஜய்சேதுபதி நடித்துள்ளார். எனவே அஜித்துக்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

Ajith and Vijay Sethupathi joins for a new film ?

தமன் இசையில் உருவாகும் சிவகார்த்திகேயனின் 2 மொழி படம்

தமன் இசையில் உருவாகும் சிவகார்த்திகேயனின் 2 மொழி படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் நடிகராக அறிமுகமானவர் தமன்.

ஆனால் தன் நடிப்பு ரூட்டை மாற்றிக் கொண்டு இசையமைப்பாளராக கவனம் செலுத்தினார். தற்போது இவரது இசைக்கு மயங்கிய ரசிகர் பட்டாளமும் இங்குண்டு.

இவரது இசையில் உருவான ‘புட்ட பொம்மா…’ பாட்டு செம ஹிட்டு. இந்த பாடல் தென்னிந்தியளவில் மிகப்பிரபலமானது.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ராம் சரண் படத்திற்கும் தமனே இசையமைத்து வருகிறர்.

இந்த நிலையில் இசையமைப்பாளர் தமன் நேற்று நவம்பர் 16ல் தன் பிறந்தநாளை கொண்டாடினார்.

அவருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்த வாழ்த்தில், “இனிய பிறந்நதாள் வாழ்த்துகள் தமன் ப்ரோ, ‘புட்ட பொம்மா’ போல மேலும் பல ஹிட்களைக் கொடுக்க வாழ்த்துகள்,” என குறிப்பிட்டு வாழ்த்தினார்

அதற்கு தமன், “பிரதர் சிவகார்த்திகேயன், உங்கள் அன்புக்கு நன்றி, பின்றோம், தட்றோம், தூக்கறோம், எஸ்கே 21” என பதிலளித்து நன்றி தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் 21வது படத்தை ‘ஜதி ரத்னலு’ தெலுங்குப் படத்தை இயக்கிய அனுதீப் இயக்கவுள்ளார் என்பதை நம் தளத்தில் சில மாதங்களுக்கு முன் பார்த்தோம்.

இப்படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாரிக்கவுள்ளனர்.

Thaman and Sivakarthikeyan joins for bilingual film

நடிகர் RNR மனோகர் மரணம்..; சில ஆண்டுகளுக்கு முன் PSBB பள்ளியில் தன் மகனை பறிகொடுத்தார்

நடிகர் RNR மனோகர் மரணம்..; சில ஆண்டுகளுக்கு முன் PSBB பள்ளியில் தன் மகனை பறிகொடுத்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் ஒரு நடிகனாக வளர வேண்டும் என நினைத்து வந்தவர் ஆர்என்ஆர் மனோகர்.

பல போராட்டங்களுக்கு பிறகு தான் அதாவது 40 வயதை நெருங்கிய நிலையில் தான் இவருக்கு சினிமாவிலே வாய்ப்ப்புகள் கிடைத்தது.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் ஆர்.என்.ஆர்.மனோகர்.

1994-ல் வெளியான ‘மைந்தன்’ படம் மூலம் கதாசிரியராகவும் இணை இயக்குநராகவும் அறிமுகமானார்.

2009-ம் ஆண்டு நகுல் நடித்த மாசிலாமணி என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குநராக என்ட்ரி கொடுத்தார். இரண்டாவது படமாக வேலூர் மாவட்டம் படத்தினை இயக்கியுள்ளார்.

மேலும் ‘கோலங்கள்’ படத்தில் கதாசிரியராகவும் இணை இயக்குநராகவும் பணியாற்றி நடிகராகவும் அறிமுகமானார்.

அப்படத்திற்கு சிறந்த கதைக்கான தமிழக அரசின் விருதும் கிடைத்தது. தவிர, ‘புதுமைபித்தன்’, ‘தென்னவன்’, புன்னகை பூவே’, ‘வந்தே மாதரம்’ ஆகிய பாடங்களிலும் கதாசிரியராக பணியாற்றியவர்.

அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்திற்கு இவர்தான் வசனம் எழுதினார் என்பது கவனிக்கத்தக்கது.

மேலும் ‛‛ ஆண்டன் கட்டளை, கவண், விஸ்வாசம், தென்னவன், சபரி, சலீம், வீரம், என்னை அறிந்தால், ஈட்டி, மிருதன், காப்பான், டெடி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்துள்ளார் மனோகர்.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மனோகர் கடந்த 20 நாட்களாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இன்று நவம்பர் 17ஆம் தேதி காலமானார்.

சிறந்த நடிகரான மனோகர் மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் இவரது மகன் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார்.

இவரது மகன் ரஞ்சன் PSBB பள்ளியில் கடந்த 2012 ஆம் ஆண்டு நான்காம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த நிலையில் அந்த வருடம் அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி காலை பள்ளியில் உள்ள நீச்சல் குளத்தில் பயிற்சியில் ஈடுபட்ட போது நீரில் மூழ்கி பலியானார்.

மாணவர்களின் நீச்சல் பயிற்சியின் போது, பயிற்சியாளர்கள் இல்லாத காரணத்தினால் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது என பலரும் அப்போது பலரும் குற்றம் சாட்டினர்.

இந்த விவகாரத்தில் பள்ளியில் நீச்சல் பயிற்சியாளரான ராஜசேகர், அருண்குமார், ரவி மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் ரவிச்சந்திரன் மற்றும் நீச்சல் குளத்தின் இன்சார்ஜ் ரங்காரெட்டி ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதன் பின்னர் பள்ளி நீச்சல் குளத்திற்கும் சீல் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Director RNR Manohar passed away

சௌந்தர்யாவின் HOOTE செயலிக்கு ரஜினி ஒரு ப்ராண்ட்..? ஒரு பார்வை

சௌந்தர்யாவின் HOOTE செயலிக்கு ரஜினி ஒரு ப்ராண்ட்..? ஒரு பார்வை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தாதாசாகேப் பால்கே விருதை டெல்லியில் ரஜினிகாந்த் பெற்ற நாள் அன்று Voice based Social Media HOOTE என்ற செயலியை சென்னையில் அறிமுகப்படுத்தினார் சௌந்தர்யா ரஜினி.

அன்று தன் காந்த குரலில் பேசி இந்த செயலியை தொடங்கிவைத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

அன்றைய நாள் முதல் இன்று வரை அவர் ஏதாவது சொல்ல விரும்பினால் இந்த HOOTE மூலமே பேசி மக்களிடமும் ரசிகர்களிடமும் பேசி வருகிறார்.

அண்மையில் புனித் ராஜ்குமார் மறைவுக்கும் இதன் மூலமே குரலில் இரங்கல் தெரிவித்தார் ரஜினி.

தன் மகள் சௌந்தர்யாவின் HOOTEக்கு ப்ராண்ட் போல செயல்படுகிறார் ரஜினி என பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்ட்டா என வெளிநாட்டு செயலிகளுக்கு ஆதரவளிப்பதை விட தன் மகள் நிறுவிய சோஷியல் மீடியாவுக்கு ஒரு தந்தை ஆதரவளிப்பது ஒன்றும் குற்றம் இல்லையே.

மேலும் இது உலகத்திற்காக நம் இந்தியாவில் உருவாக்கப்பட்ட செயலிதானே.

வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பல மணி நேரம் டைப் செய்து போஸ்ட் செய்வதை விட பலரும் தங்கள் குரல் மூலமே பதிவு செய்வதையே விரும்புகின்றனர்.

அதுபோன்ற ஒரு தளத்தை சௌந்தர்யா உருவாக்கி தந்துள்ளார்.

இந்த HOOTE செயலியை பயன்படுத்துவதன் மூலம் படிக்காதவர்களுக்கும் எழுத தெரியாதவர்களுக்கும் நல்ல பலனை பெறலாமே.

யார் எது செய்தாலும் குற்றம் என்று சொல்வதை விட நல்லது என்றால் ஏற்றுக் கொண்டால் அது நன்மைதானே.

அவர் வீட்டு ப்ராண்ட்டுக்கு அவரே ஒரு ப்ரண்டா.. ஒரு ப்ராண்டா இருக்கலேன்னா எப்படி.? கொஞ்சம் யோசிங்க பாஸ்..?

Is Rajinikanth brand ambassador for Hoot app?

அம்மா பாசத்திற்கு அடுத்த படமிது.. சூர்யாவுக்கு ‘நந்தா’.. பிரபுதேவாவுக்கு ‘தேள்’..; ஞானவேல்ராஜா & தனஞ்செயன் வாழ்த்து

அம்மா பாசத்திற்கு அடுத்த படமிது.. சூர்யாவுக்கு ‘நந்தா’.. பிரபுதேவாவுக்கு ‘தேள்’..; ஞானவேல்ராஜா & தனஞ்செயன் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள “தேள்” திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, நேற்று திரைபிரபலங்கள் மற்றும் பத்திரிக்கை ஊடகங்கள் முன்னிலையில், சென்னையில் நடைபெற்றது.

STUDIO GREEN நிறுவனம் சார்பில் K.E. ஞானவேல் ராஜா இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். இயக்குநர்
A ஹரிகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபுதேவா, ஈஸ்வரி ராவ் இருவரும் அம்மா, மகனாக நடித்துள்ளனர். C.சத்யா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இவ்விழாவிலிருந்து சிறு துளிகள்

நடிகர் பிரபுதேவா கூறியதாவது…

இயக்குநர் ஹரிகுமார் மிகச்சிறப்பான பணியினை செய்துள்ளார். இயல்பை விடவும் பலமடங்கு அற்புதமான உழைப்பை தந்துள்ளார். ரசிகர்கள் இது செட்டா இல்லை ஒரிஜினல் லொகேஷனா என சந்தேகப்படும் அளவு அற்புதமாக கலை இயக்கம் செய்துள்ளார்கள். தனஞ்செயன் சாருக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

இப்படத்தின் டப்பிங் பணி மிக சுவாரஸ்யமானதாக அமைந்தது. முழு டப்பிங்கையும் அரை நாளில் முடித்துவிட்டேன். இசையமைப்பாளர் சத்யா எனது பள்ளி கெமிஸ்ட்ரி ஆசிரியரை ஞாபகப்படுத்தினார். அவர் இப்படத்திற்கு மிக சிறப்பான இசையை தந்துள்ளார். அவரும் நானும் பல படங்களில் இணைந்து பணியாற்றி வருகிறோம்.

ஒரு தயாரிப்பாளராக K.E. ஞானவேல் ராஜா மிக அற்புதமாக செயல்பட்டு வருகிறார். அவர் உருவாக்கி வெளியிட்டு வரும் படங்கள், பல தயாரிப்பாளர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறது. ஹரியும் நானும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள். இருவரும் உதவி நடன இயக்குனர்களாக பணியாற்றியிருக்கிறோம்.

இப்போது அவர் மீண்டும் புதிய தளத்தில் தன் திறமையை நிரூபிக்கவுள்ளார். உண்மையாகவே இந்த திரைப்படம் எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இந்தப்படத்தில் எனக்கு நடன காட்சியே இல்லை.

மேலும் நான் இடது கை பழக்கம் கொண்டவனாக முதல் முறையாக நடித்திருக்கிறேன். நான் என் வழக்கமான நடிப்பை நடிக்கிறேனா என என்னை செக் செய்து கொண்டே இருப்பார் இயக்குநர். நான் அம்மாதிரி நடித்தால் உடனே அதை மாற்றுவார்.

ஈஸ்வரி மேடம் தமிழில் மிகச்சிறந்த நடிகைகளுல் ஒருவராக திகழ்கிறார். சம்யுக்தா மிக பப்ளியான அழகான நாயகியாக மிளிர்கிறார். அவரது நடிப்பு இப்படத்தில் மிக முக்கிய அம்சமாக இருக்கும். இப்படம் மிக அழுத்தமான படைப்பாக, அனைவருக்கும் பிடிக்கும் படைப்பாக இருக்கும் என்றார்.

நடிகை சம்யுக்தா கூறியதாவது…

இங்கு திரையிடப்பட்ட பாடலை படமாக்கும்போது நான் ஆக்ஸிடெண்டில் மாட்டிக்கொண்டேன். மைசூரில் பைக் ஓட்டும் போது எதிர்பாராதவிதமாக அது நடந்து விட்டது.

பிரபு தேவா சார் அவரது பிஸியான நேரத்திலும் என்னை ஓய்வெடுக்க சொல்லி, ஒரு மாதம் கழித்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இப்போது வரையிலும் நான் 8 படங்களில் நடித்திருக்கிறேன் ஆனால் ஒரு படத்திலும் எனக்கு டான்ஸ் இல்லை.

பிரபு தேவா சாருடன் முதல் வாய்ப்பை நான் மிஸ் செய்து விட்டேன். இது எனக்கு இரண்டாவது வாய்ப்பு. பிரபு தேவா சாருடன் நடனம் ஆடாமல் வேறெந்த படத்திலும் நடனமாடக்கூடாது என உறுதி எடுத்துள்ளேன். விரைவில் அவருடன் நடனமாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

இந்தப்படத்தில் நடித்தது மிக உற்சாகமான அனுபவமாக இருந்தது. என்னை இப்படத்திற்கு தேர்ந்தெடுத்ததற்கு இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் இந்நேரத்தில் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

இசையமைப்பாளர் C. சத்யா கூறியதாவது…

பிரபுதேவா சாரின் படத்திற்கு இசையமைப்பது எனக்கு கிடைத்த ஆசிர்வாதம். இப்படத்தின் பின்னணி இசைக்காக தான் என்னை இப்படத்தில் தேர்ந்தெடுத்தார் இயக்குநர் ஹரிகுமார்.

படத்தில் நடிகர் பிரபுதேவா தனது அம்மாவை கட்டிப்பிடிக்கும் ஒரு காட்சி வரும், அது என்னை மிகவும் பாதித்த உணர்வுபூர்வமான காட்சி. அதை இயக்குநரிடமும் சொன்னேன். இப்படத்தில் பிரபுதேவா சார் நடிப்பு மிகப்பெரும் பாராட்டை பெறும்.

தங்கள் வாழ்வுடன் ரசிகர்கள் தொடர்பு படுத்திகொள்ளும் படைப்பாக, மிக அழகான படமாக தேள் இருக்கும். என்றார்.

இயக்குநர் ஹரிகுமார் கூறியதாவது…

இன்று நான் இங்கு நிற்க, முழுமுதல் காரணம் இயக்குநர் K.E. ஞானவேல் ராஜா சார் தான். என் மேலும் இந்த படத்தின் மேலும் நம்பிக்கை வைத்ததற்கு அவருக்கு நன்றி. தேள் தலைப்பின் காரணம் இன்று அனைவருக்கும் புரிந்திருக்கும்.

தேள் ஒரு நேரத்தில் 40 குட்டிகளை போடும், அவையனைத்தையும் தன் தோள் மீது வைத்து பாதுகாக்கும். ஆல்கஹால் அதன் மீது ஒரு துளி பட்டாலே இறந்து விடும். மேலும் தேள் கடித்தவர்களுக்கு இதய பாதிப்பு வராது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இது போல் பல ஒற்றுமைகள் இப்படத்தின் கதையோடு பொருந்திபோகும். இசையமைப்பாளர் சத்யாவும், பாடலாசிரியர்கள் 4 பெரும் இணைந்து படத்தின் உணர்வுபூர்வமான பலத்தை பல மடங்கு கூட்டியுள்ளனர்.

பாடல் வரிகளில் பிரபுதேவா சார் பல யோசனைகள் சொன்னார். இப்படத்தில் வரும் அம்மா மகன் உறவு அனைவரும் எளிதில் உணர்வுபூர்வமாக புரிந்து கொள்வதாக இருக்கும். இப்படத்தில் பங்குபெற்ற நடிகர்கள் இப்படத்தில் நடிக்க முதல் காரணம் பிரபுதேவா உடன் இணைந்து நடிக்க வேண்டுமென்பது தான்.

இரண்டாவது இது ஞானவேல் ராஜா சார் தயாரிப்பு என்பதாகத்தான் இருந்தது. ஈஸ்வரி மேடம் மிக அற்புதமான நடிப்பை தந்துள்ளார்கள் இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருப்பார்கள். சம்யுக்தா மிக அழகான நடிப்பை தந்துள்ளார். இந்நேரத்தில் என் தயாரிப்பாளருக்கு, இவ்விழாவிற்காக நன்றி கூறிக்கொள்கிறேன்.

தயாரிப்பாளர் G. தனஞ்செயன் கூறியதாவது…
நான் இந்தப்படத்தை ஏற்கனவே பார்த்துவிட்டேன். இந்தப்படம் இயக்குநர் ஹரிகுமார் வாழ்வில் மிக முக்கியமான படமாக இருக்கும். பிரபு தேவா சார் நடிப்பில் அவரின் மிகச்சிறந்த படமாக இப்படம் இருக்கும். பிரபுதேவா சார் நடனமும் ஆக்சனும் பாராட்ட பெற்றிருக்கிறது.

ஆனால் இந்தப்படம் அவரின் மிகச்சிறந்த நடிப்பை தரும் படமாக இருக்கும். சூர்யாவுக்கு ஒரு நந்தா போல் பிரபுதேவா சாருக்கு இந்தப்படம் அமையும்.

செண்டிமெண்ட் காட்சிகளில் மிக அற்புதமான நடிப்பை தந்துள்ளார். அனைத்து நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பை வழங்கியுள்ளனர். இப்படம் வெற்றிக்கு இப்போதே வாழ்த்துகளை கூறுகிறேன். இப்படத்தின் வசனங்கள் பாராட்டை பெறும்.

சம்யுக்தா வழக்கமாக அவரது நடனத்திற்கு பெயர் பெற்றவர். ஆனால் இப்படத்தில் அவரை வேறொரு கோணத்தில் காண மகிழ்ச்சியாக இருந்தது. அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்படும். இப்படம் K.E. ஞானவேல் ராஜா அவர்களுக்கு ஒரு மைல்கல்லாக அமையும்.

தயாரிப்பாளர் K.E. ஞானவேல் ராஜா கூறியதாவது…

Studio Green Movies நிறுவனம் எப்போதுமே கமர்சியலாக வெற்றியடையும் வகையிலான தரமான படங்களை தந்து வருகிறது. இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்குமே இப்படம் மிக முக்கியமான படைப்பாக இருக்கும்.

சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு பிறகு பள்ளிக் காலத்திலிருந்தே பிரபு தேவா சாரின் அதிதீவிர ரசிகன் நான். அவரது சகோதரர் நாகேந்திர பிரசாத்தும் நானும் பள்ளி தோழர்கள், இருவரும் அவர் படத்தை ஒன்றாக தான் பார்ப்போம். ஒரு முறை அவர் வீட்டுக்கு சென்றபோது, பிரபு தேவா சார் ரிகர்சல் செய்வதை வாய் பிளந்து பார்த்து ஆச்சர்யப்பட்டேன். பிரபு தேவா சார் தன் வேலையில் கச்சிதமாக இருக்க கூடியவர் அவர் இடத்தில் இருந்து எனக்கு ஒரு சிறு பிரச்சனை கூட வரவில்லை.

இயக்குநர் ஹரிகுமார் மிக நேர்த்தியான படைப்பை தந்துள்ளார். சிவகார்த்திகேயன் எப்படி டாக்டர் படத்தில் வசனங்கள் இல்லாமல் அசத்தியுள்ளாரோ, அதே போல் பிரபுதேவா சாரும் மற்ற நடிகர்களும் இப்படத்தில் அசத்தியுள்ளார்கள்.

யோகி பாபுவுக்கும் நாயகிக்கும் கூட அதிக வசனங்கள் இருந்தது. இப்படம் பார்க்கும் அனைவரும் அவர்களின் அம்மாவை மிஸ் செய்வார்கள். தியேட்டர்களில் இருந்து வெளியே வந்த உடனே தங்கள் அம்மாவிடம் பேசுவார்கள்.. இப்படம் மிகச்சிறந்த குடும்ப திரைப்படமாக இருக்கும்..” என்றார்.

Gnanavel Raja and Dhananjayan wishes to Prabhu Deva’s Theal

‘ஜெய்பீம்’ விவகாரம் இத்துடன் முடிவுக்கு வருவது நம் சமூகத்திற்கு நல்லது.. – நாசர்

‘ஜெய்பீம்’ விவகாரம் இத்துடன் முடிவுக்கு வருவது நம் சமூகத்திற்கு நல்லது.. – நாசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரசியலை வியாபாரமாக்குவதும் வியாபாரத்தை அரசியலாக்குவதும் இந்த ஒரு நிகழ்வோடு நிறுத்தி விடுவீராக! யாரும் தனிமனிதரல்ல இந்த தரணியிலே, அப்படி தனித்தனியா குரல் கொடுப்பதினாலேயே இன்று நாம் தனித்தனி தீவுகளாக மிதந்து கொண்டிருக்கிறோம்.

ஒன்றுகூடி தீர்க்க வேண்டியவைகளின் பட்டியல் நீண்டு கிடக்கிறது. கூட்டாக உருவாக்கப்படும் திரைப்பட ஊடகத்தில் தனியொரு நபரின் கருத்துக்களாக வெளிவருவதில்லை.

சமயத்தில் சொந்தக் கருத்துக்களையும் ஒதுக்கி வைத்து படம் சொல்கின்ற கருத்தினை சொல்ல வேண்டியிருக்கிறது. நம் வரலாற்றில் சோகமும் வலியுமாய் அடங்கி கிடக்கிறது.

ஒவ்வொரு கலைக்கும் ஊடகத்திற்கும் அதனதற்கான சமுதாயப் பொறுப்புகள் இருக்க செய்கின்றன.

தம்பி சூர்யா அவருக்குக் கொடுத்த பொறுப்பினை செவ்வனே செய்யத்தான் முற்பட்டிருக்கிறார். வேறு உட்காரணங்கள் இருப்பதாக வர்ணம் பூசி, போதுமான அளவிற்கு அறுத்து ஆயப்பட்டு விட்டது. சிலர் மனம் புண்பட்ட அந்த பிம்பம்கள் படத்தினின்று எடுத்தெறியப்பட்டு விட்டதாகவும் அறிகிறேன்.

இந்தச்சூழலில் இதற்கான, விலை பேச முற்படுவது வேதனை. எதிர்காலம் குறித்த கவலையையும், அச்சத்தையும் கொண்டு சேர்க்கிறது. சம்பந்தபட்டவர்கள் இத்தோடு இதனை முடிவுக்கு கொண்டு வருவது பொது சமூகத்திற்கு நன்று.

மேற் சொன்னதுபோல் ஒன்றுகூடி ஆற்ற வேண்டிய கடமைகளும், எடுக்கப்பட வேண்டிய தீர்வுகளும் எண்ணிலடங்கா சிதறிக்கிடக்கின்றன. வன்மமின்றி அன்பால் அதைப் பொறுக்கிச்சேர்ப்போம், புதியதோர் உலகஞ்செய்வோம்.
நன்றி!

– நாசர்,

நடிகர்.
நடிகர், நடிகைகள் சமூகம் சார்பாக.
16.11.2021

Actor Nassar supports Suriya’s Jai Bhim

More Articles
Follows