தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
முன்னாள் உலக அழகியும் பிரபல நடிகையுமா ஐஸ்வர்யா ராய், குழந்தை பெற்றபின் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.
தவிர்க்க முடியாத வேடங்களில் மட்டும் அவர் நடிக்க ஒப்புக் கொண்டு நடித்து வருகிறார்.
இந்நிலையில் முதன் முறையாக தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி உடன் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
’கைதி நம்பர் 150’ படத்திற்கு பிறகு சிரஞ்சீவி நடிக்க உள்ள ஒரு வரலாற்றுப் படத்தில்தான் ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடிக்கவிருக்கிறாராம்.
அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகிறது.
”உய்யலவாடா நரசிம்ம ரெட்டி” என்ற சுதந்திர போராட்ட வீரரின் கதைதான் இப்படம் என தெரிய வந்துள்ளது.
Aishwarya Rai to romance Chiranjeevi in Uyyalawada Narasimha Reddy