தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பத்து வருடங்களுக்கு முன் ரிலீசான ‘உதயன்’ என்ற பட மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் பிரணிதா சுபாஷ்.
இவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்.
அதன் பின்னர் கார்த்தி நடித்த சகுனி, சூர்யா நடித்த மாசு என்கிற மாசிலாமணி ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.
எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் ஆகிய படங்களிலும் நாயகியாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் பிரணிதாவுக்கும், பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் நிதின் ராஜு என்பவருக்கும் நேற்று நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் எளிமையான திருமணம் நடைபெற்றுள்ளது.
பிரபலங்கள் எவருக்குமே திருமண அழைப்பிதழ் கொடுக்கலையாம்.
ஒரு நண்பர் மூலமாக பிரணிதாவின் திருமணப் புகைப்படங்கள் வெளிவந்த பிறகுதான் நடிகைக்கு திருமணம் நடைபெற்ற விஷயமே வெளியில் தெரிய வந்துள்ளது.
கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக இருப்பதால் யாருக்கும் சொல்லாமல் திருமணத்தை நடத்தியுள்ளனர்.
காதல் மற்றும் பெரியவர்கள் ஏற்பாடு செய்த திருமணம் இது என கூறப்படுகிறது.
பெரும்பாலும் தன் பெர்சனல் விஷயங்களை வெளியே சொல்வது பிரணிதாவுக்கு பிடிக்காதாம்.
இவருக்கு வசதியாக கொரோனா ஊரடங்கும் இணைந்து விட்டதால் இந்த ரகசிய ஏற்பாடாம்.
வாழ்த்துக்கள் பிரணிதா…
Actress #PranithaSubhash ties the knot with businessmen #NithinRaju in a private wedding ceremony yesterday.