நடிகையின் அம்மாவுக்கு கொரோனா.; கூட்டுக்குடும்பத்தில் சிக்கிய 45 பேர் தவிப்பு

நடிகையின் அம்மாவுக்கு கொரோனா.; கூட்டுக்குடும்பத்தில் சிக்கிய 45 பேர் தவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

deepika singhகொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த பாதிப்பால் உலகளவில் இந்தியா 4வது இடத்துக்கு முன்னேறி விட்டது.

இந்த நிலையில் பிரபல ஹிந்தி டிவி நடிகை தீபிகா சிங் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்…

தனது அம்மாவிற்கு கொரோனா வைரஸ் ்தொற்றியுள்ளது.

தங்கள் குடும்பம் கூட்டுக்குடும்பம் என்பதால் 45 பேர் ரிஸ்க்கில் உள்ளனர்.

இதுகுறித்து டெல்லி அரசு உடனடியாக தகுந்த நடவடிக்கை வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

3 படங்கள் OTTல் ரிலீஸ்.; 3 படங்கள் புரொடக்சன்… : JSK அதிரடி அறிவிப்பு

3 படங்கள் OTTல் ரிலீஸ்.; 3 படங்கள் புரொடக்சன்… : JSK அதிரடி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

producer JSKகொரோனா பொதுமுடக்கத்தால் கிட்டத்தட்ட 3 மாதங்களாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தற்போதும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

சென்னையில் AVM ராஜேஸ்வரி உள்ளிட்ட ஓரிரு தியேட்டர்கள் நிரந்தரமாக மூடப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.

எனவே சில தயாரிப்பாளர்கள் நேரடியாக ஆன்லைனில் OTTல் படத்தை ரிலீஸ் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில்… பிரபல தயாரிப்பாளர் ஜே.எஸ். சதீஷ்குமார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ”எங்கள் ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேசன் தயாரித்துள்ள படங்களான ‘அண்டாவக் காணோம்’, ‘வா டீல்’, ‘மம்மி சேவ் மீ’ ஆகிய படங்கள் நேரடியாக OTT ஆன்லைன் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

நாங்கள் அடுத்ததாக தயாரிக்கவுள்ள 3 படங்களின் நடிகர்கள் தொழில்நுட்பக்கலைஞர்களின் அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளோம். உங்கள் ஆதரவு தேவை” என குறிப்பிட்டுள்ளார்.

‘ராஜமாதா’ ரம்யா கிருஷ்ணன் காரில் சரக்கு பாட்டில்கள்.; டிரைவருக்கு ஜாமீன்.!

‘ராஜமாதா’ ரம்யா கிருஷ்ணன் காரில் சரக்கு பாட்டில்கள்.; டிரைவருக்கு ஜாமீன்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress ramya krishnanசென்னை ECR முட்டுக்காட்டில் உள்ள சோதனைச் சாவடியில் சோதனை செய்துக் கொண்டிருந்தனர் கானத்தூர் போலீஸார்.

அப்போது அங்கு வந்த TN07 CQ 0099 என்ற இன்னோவா காரை மறித்து சோதனையிட்டனர்.

அப்போது நடிகை ரம்யா கிருஷ்ணன், அவரது சகோதரி அபிநயா கிருஷ்ணன் ஆகியோரும் காரில் இருந்தனர்.

படையப்பா படத்தில் நீலாம்பரி, பாகுபலி படத்தில் ராஜமாதா உள்ளிட்ட கேரக்டர்கள் ரம்யா கிருஷ்ணனின் பெயரை என்றும் சொல்லும்.

இந்தச்சோதனையில் அந்தக் காரில் ஏராளமான மதுப்பாட்டில்கள் இருந்தன.

அதில் 97 டின்களில் அடைக்கப்பட்ட பீர் மற்றும் 8 பிராந்தி பாட்டில்களும் இருந்தன.

உடனே போலீஸார் அந்த டிரைவர் செல்வகுமார் என்பவரை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனர்.

கைதான சிறிது நேரத்தில் டிரைவரை நடிகை ரம்யாகிருஷ்ணன் ஜாமீனில் அழைத்துச் சென்றார்.

மதுபாட்டில்களை அவர் பாண்டிச்சேரியில் இருந்து வாங்கி கடத்தி வந்துள்ளாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

சென்னை இனி வேண்டவே வேண்டாம்.; இ-பாஸ் இல்லாமலும் மக்கள் எஸ்கேப்.!

சென்னை இனி வேண்டவே வேண்டாம்.; இ-பாஸ் இல்லாமலும் மக்கள் எஸ்கேப்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chennai policeதமிழகத்தின் தலை நகரம் சென்னை.

வந்தாரை வாழ வைக்கும் சிங்கார சென்னை என்ற பெயரும் இதற்கு உண்டு.

ஆனால் தற்போது சென்னையா? வேண்டவே வேண்டாம் என மக்கள் ஓடத் தொடங்கியுள்ளனர்.

இதற்கு காரணம் கொலைக்கார கொரோனா தான்.

சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வருவதே இதற்கு முக்கிய காரணம்.

சென்னையில் இருந்து ராணிப்பேட்டை வழியாக வேலூர் வரும் வாகனங்கள் தீவிர பரிசோதனை மற்றும் கிருமிநாசினி தெளித்த பிறகு அனுமதிக்கப்படுகின்றன.

இ-பாஸ் இல்லாமல் மக்கள் வெளியேற துவங்கிவிட்டனர்.

வேலூர் வரும் வாகன விவரங்களை பதிவு செய்துகொண்ட பிறகே அந்த பகுதிக்குள் போலீசார் அனுமதிக்கின்றனர்.

பாரதிராஜாவின் கண்கள் என கூறப்படும் ஒளிப்பதிவாளர் கண்ணன் மரணம்

பாரதிராஜாவின் கண்கள் என கூறப்படும் ஒளிப்பதிவாளர் கண்ணன் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

cinematographer kannanதமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா.

இவரது படங்களில் பிரித்து பார்க்க முடியாத கலைஞர் ஒளிப்பதிவாளர் கண்ணன்.

கோலிவுட்டில் மூத்த கலைஞர்களுள் இவரும் ஒருவர்.

பாரதிராஜா இயக்கிய 38க்கும் மேற்ப்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இவர் மொத்தம் 50 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார்.

‘அலைகள் ஓய்வதில்லை’, ‘டிக் டிக் டிக்’, ‘காதல் ஓவியம்’, ‘மண் வாசனை’, ‘முதல் மரியாதை’, ‘கடலோரக் கவிதைகள்’, ‘வேதம் புதிது’, ‘கிழக்குச் சீமையிலே’ நாடோடித் தென்றல், பொம்மலாட்டம் என் பாரதிராஜா இயக்கிய படங்களுக்கு தன் ஒளிப்பதிவால் மெருகூட்டியவர் கண்ணன்.

மேலும் பாரதிராஜாவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர்.

இவரை பாரதிராஜாவின் கண்கள் என்றும் திரையுலகினர் அழைப்பர்.

பாரதிராஜா அளித்த பேட்டியொன்றில், “நான் படப்பிடிப்புக்குச் செல்லும்போது கேமராவை எடுத்துச் செல்வதில்லை. என் கண்ணனுடைய இரண்டு கண்களை மட்டும்தான் எடுத்துச் செல்வேன்.” எனக் கூறியிருக்கிறார்.

கடந்த சில நாட்களாக இதய நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார் கண்ணன்.

இதனையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார் கண்ணன். அவருக்கு வயது 69.

பிரபல இயக்குநர் பீம்சிங்கின் மகனான இவர் எடிட்டர் லெனினின் இளைய சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

தன் நெருங்கிய நண்பரை இழந்துள்ள பாரதிராஜாவுக்கும் ஆறுதல் சொல்லி வருகிறார்கள். கண்ணன் தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தின் செயலாளராகவும் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பாரதிராஜாவும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Attachments area

7ஆம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புக்களுக்கு தடை…; பெற்றோர்கள் மகிழ்ச்சி

7ஆம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புக்களுக்கு தடை…; பெற்றோர்கள் மகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

online classes karnatakaகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த மாதங்களாக பொது முடக்கம் அமலில் உள்ளது.

தற்போது சில தளர்வுகளுடன் வணிக நிறுவனங்களை திறக்க அரசு அனுமதியளித்துள்ளது.

ஆனால் வழக்கமாக ஜீன் மாதம் திறக்கப்படும் பள்ளிகளை திறப்பை ஒத்தி வைத்துள்ளன மத்திய மாநில அரசுகள்.

அதற்கு காரணம் பள்ளிகள் திறக்கப்பட்டால் கொரோனா தொற்று அதிகளவில் பரவக்கூடும் என்பதாலும் சிறுவயது பிள்ளைகள் பாதிக்கப்படும் கூடும் என்பதாலும் பள்ளிகள் திறப்பை இந்திய அரசு ஒத்திவைத்துள்ளது.

இதனால் மாநிலங்களில் பள்ளித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இதனிடையில் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் பாடங்களை நடத்த தொடங்கியுள்ளன.

இந்த நிலையில் கர்நாடகாவில் மாணவர்களின் வயது மற்றும் மனநலம் ஆகியவற்றைக் கருதி மழலையர் குழந்தைகள் முதல் 7ஆம் வகுப்பு வரை, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தக்கூடாது எனக் கர்நாடகா கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமார் தெரிவித்திருந்தார்.

இதனால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More Articles
Follows