தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை.. நதிகளை இணையுங்கள்.. சிவக்குமார் ஆவேசம் !!

தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை.. நதிகளை இணையுங்கள்.. சிவக்குமார் ஆவேசம் !!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Sivakumarநதிகளை இணைத்து தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்க அரசுகள் முன்வர வேண்டும். தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்காமல் செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் விட்டு என்ன புண்ணியம் என்று நடிகர் சிவக்குமார் ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.

காவிரி விவகாரம் பற்றி எரிகிறது. இந்த விவகாரம் குறித்து சிவக்குமார் அறிவுப்பூர்வமாக சில கருத்துக்களைக் கூறியுள்ளார்.
சிவக்குமாரின் கருத்து:
தமிழ்நாடு முழுவதும் குடிக்க தண்ணீர் இல்லாமல் ஜனங்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். குடிப்பதற்கு மட்டுமில்லாமல், விவசாயத்துக்கே தண்ணீர் இல்லாததால் நிறைய பேர் கூலிக்காரனாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு விவசாயத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி. நமக்கு நீராதாரம் வேண்டும். ஆனால், நடக்கக்கூடியது என்ன?
கர்நாடகாவில் மிச்சமிருக்கும் காவிரி நீரைத்தான் நமக்கு கொடுக்கிறார்கள். முல்லை பெரியாறு பக்கம் பார்த்தால் நீர்பிடிப்பு ஏரியாக்கள் எல்லாம் தமிழ்நாட்டில் இருக்கிறது. ஆனால், அணை கேரளாவில் இருக்கிறது. 10 அடி தண்ணீர் மேலே ஏற்றுவதற்கு அவர்கள் விடமாட்டேன் என்கிறார்கள்.

பாலாற்றில் வெறும் மணல்தான் இருக்கிறது. கண்டலேறுவில் குடிதண்ணீருக்கு பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறோம். இதற்கெல்லாம் ஒரேயொரு வழிதான் இருக்கிறது. கங்கை காவிரி இணைப்புதான் அது. கங்கையாற்றிலும், யமுனையாற்றிலும் இருந்து 60 சதவீதம் தண்ணீர் வீணாக போகிறது. அந்த தண்ணீரை தெற்கு நோக்கி திருப்பினால் கண்டிப்பாக சுபிட்சமான வாழ்க்கை கிடைக்கும். அதற்கு பலகோடி செலவாகும் என்று சொல்கிறார்கள்.

செவ்வாய் கிரகத்துக்கு பலகோடிகள் செலவழித்து ராக்கெட் அனுப்பியிருக்கிறார்கள். செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்புவது இப்போது நாட்டுக்கு முக்கியமா? மக்களுக்கு அடிப்படை தேவை தண்ணீர். அந்த தண்ணீருக்கு வசதி செய்துவிட்டு 10 வருடத்திற்கு பிறகு செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட்டை அனுப்பலாம்.

தமிழ்நாட்டுக்கு தண்ணீரை கொண்டு வந்து காவிரி, தாமிரபரணி உள்ளிட்ட எல்லா கிளை நதிகளிலும் தண்ணீர் பாய்ந்தோடினால், ஆறு, குளம் எல்லாம் நிரம்பி விவசாயம் செழிக்கும். இதற்கு இந்தியாவின் பிரதமர்தான் வழிவகுக்கவேண்டும். தமிழக மக்கள் சார்பில் அதை நான் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் சிவக்குமார்.
இது சிவக்குமார் என்ற தனி நபரின் பேச்சு அல்ல.. ஒட்டுமொத்த அப்பாவித் தமிழ் மக்களின் ஏக்கமும் இதுதான். அரசியல்வாதிகள் எந்த லாபமும் பார்க்காமல் மக்களுக்காக இதைச் செய்ய முன் வருவார்களா..?

தமிழக ரஜினி ரசிகர்களிடம் பாரபட்சம் காட்டும் ‘பாட்ஷா’

தமிழக ரஜினி ரசிகர்களிடம் பாரபட்சம் காட்டும் ‘பாட்ஷா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth Baashaசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்த படங்களில் மாபெரும் சாதனை படைத்து ரஜினியின் திரையுலக வாழ்க்கையை வேறு தளத்தில் கொண்டு சென்ற படம் பாட்ஷா.

இப்படம் வெளியாகி 23 வருடங்களை கடந்துவிட்ட போதிலும் இன்றும் இப்படத்திற்கு மாஸ் கொஞ்சம் கூட குறையவில்லை.

எனவே இதை டிஜிட்டல் முறையில் புதுப்பித்து வருகிற மார்ச் 3ஆம் தேதி தமிழகத்தில் ரிலீஸ் செய்யவிருக்கின்றனர்.

ஆனால் லண்டனில் மட்டும் பிப்ரவரி 26ஆம் தேதியே வெளியாகவுள்ளதாம்.

இதனால் ஒரு வாரம் காத்திருக்க முடியாத தமிழக ரஜினி ரசிகர்கள், லண்டனில் மட்டும் முன்பே ரிலீஸ் செய்து, இங்கே பாரபட்சம் காட்டுகின்றனர்? என்று கேட்டு வருகின்றனர்.

 

Baasha digital version release on 3rd Mar 2017 in Tamilnadu

அம்மா கோயிலை திறக்க ரஜினியை அழைக்கும் லாரன்ஸ்

அம்மா கோயிலை திறக்க ரஜினியை அழைக்கும் லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Lawranceதிரையுலகில் பன்முக திறமைகள் கொண்டவர் ராகவா லாரன்ஸ்.

இத்துடன் சமூக சேவைகளையும் செய்து வருகிறார்.

இவர் தன் அம்மாவுக்காக கோயில் ஒன்றை கட்டி வருகிறார் என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் இதன் திறப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களை அழைத்து வருகிறார்.

இதுதொடர்பாக இன்று ரஜினியை சந்தித்து அழைத்துள்ளார்.

ரஜினியும் சம்மத்தித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

Lawrance invited Rajinikanth to open his mothers temple

நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல்

நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Top Actress Bhavana Kidnapped and Molestedமலையாள சினிமாவில் அறிமுகமாகி பின்னர் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கியவர் நடிகை பாவனா.

தமிழில் தீபாவளி, அசல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் மர்ம நபர்களால் நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

இச்செய்தி கேரளா மற்றும் தமிழக நடிகைகளையும் ரசிகர்களையும் ஆழ்த்தியுள்ளது.

அதன் விவரம் வருமாறு…

பாவனா சென்ற காரை  திடீரென மர்ம கும்பல் வழி மறித்தது.

பின்னர் காரில் ஏறிக் கொண்டு டிரைவரையும் நடிகையும் மிரட்டியுள்ளனர்.

அதன்பின்னர் பாவனாவுக்கு பாலியல் தொல்லையும் கொடுத்தனர்.

இதனிடையில் பாவனைவை விதவிதமாக போட்டோ எடுத்துள்னர்.

சிறிது நேரம் சென்றதும், காரை நிறுத்தி கீழே இறங்கியது அந்த கும்பல்.  அதன்பின்னர் வேறு ஒரு காரில் அவர்கள் ஏறி தப்பிச் சென்றுள்ளனர்.

அதன்பின்னர்  காவல்துறைக்கு பாவனா தகவல் கொடுத்துள்ளார்.

இதில் டிரைவருக்கு தொடர்பு உள்ளதா என்ற அடிப்படையில் அவரை கைது செய்து தீவிர விசாரணையில் போலீஸ் இறங்கியுள்ளது.

Actress Bhavana Kidnapped and Molested

இப்போ மிக்சர் சாப்பிடுறது யாருன்னு சூர்யாவே சொல்லிட்டாரு

இப்போ மிக்சர் சாப்பிடுறது யாருன்னு சூர்யாவே சொல்லிட்டாரு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriyaஅதிமுகவில் உள்ள ஓ.பன்னீர் செல்வம் மற்றும் சசிகலாவுக்கு ஏற்பட்ட மோதலை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வர் ஆனார்.

இதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று சட்டசபையில் நடைபெற்றபோது அங்கே கலவரம் ஆனது.

இதனால் தமிழகமே தற்போது பதட்டமான சூழ்நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து நடிகர் சூர்யா தன் ட்விட்டரில் கூறியுள்ள கருத்தால் பரபரப்பு ஆகியுள்ளது.

அந்த ட்வீட் இதோ…

Suriya Sivakumar ‏@Suriya_offl 3m3 minutes ago
இப்போது மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பது நாம் தான் நண்பர்களே….

Suriya says about tn politics and floor test at assembly

திடீர் பெற்றோர் கூறிய அடையாளங்கள் தனுஷ் உடலில் உள்ளதா?

திடீர் பெற்றோர் கூறிய அடையாளங்கள் தனுஷ் உடலில் உள்ளதா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush sudden parentsநடிகர் தனுஷ், தங்களின் சொந்த மகன் என மேலூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பஸ் கண்டக்டர் கதிரேசன் மற்றும் இவரது மனைவி மீனாட்சி ஆகியோர் கூறி வருகின்றனர்.

இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

அதற்கான ஆதாரங்களை அவர்கள் கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளனர்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, தனுஷை மகன் என கொண்டாடும் பெற்றோர் கூறியபடி அடையாளங்கள் தனுஷ் உடலில் உள்ளதா? என்பதை தனுஷ் தரப்பு தெரிவிக்க வேண்டும் என்றார்.

இதனையடுத்து, இந்த விசாரணையை பிப்ரவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும் இதில் எவரேனும் தவறான தகவல்களை கொடுத்திருந்தால் விளைவுகளை சந்திக்க நேரும் எனவும் நீதிபதி எச்சரித்துள்ளார்.

Actor Dhanush sudden parents case updates

dhanush childhood

More Articles
Follows