திருக்குறளுக்கு நிறைய பேர் உரை எழுதியும் பயனில்லையே..; நடிகர் சிவகுமார் வேதனை

திருக்குறளுக்கு நிறைய பேர் உரை எழுதியும் பயனில்லையே..; நடிகர் சிவகுமார் வேதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் மொழியை வளர்ப்பதற்கும் தமிழ் இலக்கிய முயற்சிகளை ஊக்கமூட்டுவதற்கும் கனடாவில் இயங்கிவரும் கனடா ‘தமிழ் இலக்கியத் தோட்டம் ‘அமைப்பு பல்வேறு பணிகளைச் செய்து வருகிறது.

தமிழ்ப் படைப்பாளிகளுக்கும் தமிழ்த்தொண்டு புரிபவர்களுக்கும் இயல் விருது உள்ளிட்ட பல விருதுகளை வழங்கிக் கொளரவித்து வருகிறது.

நேற்று கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் சார்பில் விருது வழங்கும் விழா இணையவழியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார்.

அவர் சிறப்புரையாற்றும் போது ,

“கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பு விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இங்கே விருது விழாவிற்கு கொடையாளர்கள் அதிகம் நிதி உதவி செய்தால் நிறைய பேருக்கு விருதுகள் வழங்கலாம் என்று கூறினார்கள்.

அடுத்த ஆண்டு என் மூலமாக ஒரு கணிசமான தொகை வழங்க நான் ஏற்பாடு செய்கிறேன். மேலும் பலருக்கு விருதுகள் வழங்க வேண்டும்” என்றும் ஆரம்பத்திலேயே அறிவிப்பை வெளியிட்டார்.

அவர் மேலும் பேசும் போது,

தான் எழுதிக் கொண்டிருக்கும் திருக்குறள் கதைகள் பற்றிப் பேச ஆரம்பித்தார்.

“என்னுடைய திருக்குறள் கதைகள் பற்றி இங்கே அறிமுகம் செய்தார்கள் .பாமர மனிதனுக்குத் திருக்குறள் போய்ச் சேரவில்லை என்பது தான் என்னுடைய அபிப்பிராயம். திருக்குறளுக்கு எவ்வளவோ பேர் உரை எழுதி இருக்கிறார்கள்.

மணக்குடவர், பரிதி, பரிமேலழகர் போன்று நிறையபேர் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு, 1000 ஆண்டுகளுக்கு முன்பு என பல பேர் உரை எழுதியிருக்கிறார்கள்.

திருக்குறளுக்கு டாக்டர் மு. வ அவர்கள் எழுதிய உரை ஆறு லட்சம் புத்தகங்கள் விற்றதாகச் சொல்கிறார்கள். திருக்குறளுக்கு கலைஞர் அவர்கள். சாலமன் பாப்பையா போன்று நிறைய பேர் உரைகள் எழுதிவிட்டார்கள்.

எவ்வளவு பேர் எழுதினாலும் புத்தகங்கள் அலங்காரமாக அலமாரிகளில் உள்ளன. திருக்குறள் பாமர எளிய மக்களைப் போய்ச் சேரவில்லை.

அவர்களுக்குப் போய் சேரும் வகையில் நான் ஒரு முயற்சி செய்கிறேன்.
நான் சொல்வது என்னவென்றால்
வணங்கத்தக்க அரசியல் தலைவர்கள், கலை உலகத்தில் சாதனை படைத்தவர்கள், தனிமனித வாழ்க்கையில் மேன்மையாக வாழ்ந்தவர்களின் வாழ்க்கையை எடுத்துக்கொண்டு அதிலிருந்து சம்பவங்களைத் தொகுத்து ஒன்றரை நிமிடங்களுக்குள் சொல்லக்கூடிய ஒரு கதையாகக் கூறி அதற்கு பொருந்துகிற மாதிரி திருக்குறளை எடுத்துக் கொண்டு நூறு கதைகள் சொல்லி இருக்கிறேன்” என்றவர் உதாரணமாக அதிலிருந்து ஐந்து கதைகள் எடுத்துக் கூறினார்.

காமராஜர், லால் பகதூர் சாஸ்திரி, சிவாஜி கணேசன் , இன்ஸ்பயரிங் இளங்கோ உள்ளிட்ட ஐந்து பேர் வாழ்க்கையைப் பற்றி எடுத்துக் கூறி அதற்கான திருக்குறளையும் கூறினார்.

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் விருது விழாவில் படைப்பாளிகளுக்கான பிரிவில் கவிதைக்கு பெருந்தேவி, புனைவுக்கு பா. கண்மணி, இலக்கிய சாதனைக்கு பி.ஜே.திலீப்குமார்,பிறமொழி இலக்கியத்துக்கு லோகதாசன் தர்மதுரை, தமிழ்த் தொண்டுக்கு வீரகத்தி சுதர்சன் ஆகிய ஐந்து பேர் விருது பெற்றனர்.விருதாளர்கள் ஏற்புரை நிகழ்த்தினார்கள்.

கவிஞர் ரவி சுப்ரமணியன் நவீன கவிதைக்கு இசை எதற்கு? என்ற தலைப்பில் பேசினார்.

இவ்விருது விழாவில் மானுவேல் ஜேசுதாசன் , எழுத்தாளர் அ .முத்துலிங்கம் உள்ளிட்ட கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பின் பொறுப்பாளர்கள் , மற்றும் பல நாடுகளிலிருந்து இலக்கிய வாசகர்கள் கலந்து கொண்டனர்.

Actor Sivakumar recent speech about Thirukkural

‘ருத்ர தாண்டவம்’ இயக்குனர் மோகனுடன் கூட்டணி போடும் செல்வராகவன்

‘ருத்ர தாண்டவம்’ இயக்குனர் மோகனுடன் கூட்டணி போடும் செல்வராகவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் இயக்குனர் மோகன்ஜி.

அதையடுத்து ‘திரௌபதி’ படத்தின் மூலம் தான் தமிழக மக்களின் கவனம் ஈர்த்தார்.

அதிகாலை 5 மணி காட்சி போடும் அளவுக்கு அந்தப் படம் பேசப்பட்டது.

இதனையடுத்து ரிச்சர்ட் ரிஷி உடன் 2வது முறையாக கூட்டணி போட்டு ‘ருத்ர தாண்டவம்’ படத்தை இயக்கினார் மோகன்.

இந்த படமும் சர்ச்சைப் பொருளானது.

இந்த நிலையில் மோகன்ஜி இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படத்தில் செல்வராகவன் நடிக்கவுள்ளார் என அறிவித்துள்ளனர்.

மோகன்.ஜி இயக்கத்தில் கதை நாயகனாக நடிக்கிறார் இயக்குனர் செல்வ ராகவன்

மற்ற நடிகர்கள் நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Director Selva Raghavan and Mohan G joins for a new film

நயன்தாரா செய்த கேவலமான விஷயம் அது..: கிராண்மா’ இசை விழாவில் கே. ராஜன் கடும் தாக்கு

நயன்தாரா செய்த கேவலமான விஷயம் அது..: கிராண்மா’ இசை விழாவில் கே. ராஜன் கடும் தாக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹாலிவுட் தரத்தில் ஒரு பேய்ப் படம் என்கிற அழுத்தமான நம்பிக்கையோடு
‘கிராண்மா’ என்கிற படம்
உருவாகியுள்ளது.

இப்படத்தை GMA பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெயராஜ் ஆர், விநாயகா சுனில் தயாரித்துள்ளனர்.

ஷிஜின்லால் எஸ்.எஸ் இயக்கியுள்ளார்.

பிரதான பாத்திரங்களில் சோனியா அகர்வால், விமலா ராமன், சார்மிளா நடித்துள்ளனர்.

மலையாளப் படங்களில் நாயகனாக நடித்து வந்த ஹேமந்த் மேனன் இதில் வில்லனாக நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் பௌர்ணமிராஜ் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.

கேரளாவின் மலைப் பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது .இதன் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் சர்வதேச தரத்தில் வரவேண்டும் என்பதற்காக மிகுந்த பொருட்செலவில் காட்சிகளை உருவாக்கியுள்ளனர்.

இப்படத்தின் இசை வெளியீடு இன்று மாலை சென்னையில் நடைபெற்றது.

அதில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட பிரபல தயாரிப்பாளர் கே. ராஜன் பேசும்போது…

“எந்த புரோமோசன் நிகழ்ச்சிக்கும் செல்லாத நயன்தாரா அவரது நெற்றிக்கண் பட புரோமோசன் நிகழ்ச்சிக்கு மட்டும் வந்திருந்தார்.

அவரிடம் கேட்டால் நான் புரோமோசனுக்கு வந்தால் படம் ஓடாது என்பார். எப்படி ஒரு கேவலமான காரணம் பார்த்தீர்களா?” என பேசினார் கே. ராஜன்.

Producer K Rajan slams actress Nayanthara

டிஸ்சார்ஜ் ஆன உடனே பிக்பாஸ் செட்டுக்குள் நுழைந்த கமல்ஹாசன்

டிஸ்சார்ஜ் ஆன உடனே பிக்பாஸ் செட்டுக்குள் நுழைந்த கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சிகிச்சை மேற்கொண்டார் கமல்ஹாசன்.

எனவே இவர் கலந்துக் கொள்ளவிருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கமுடியாத நிலை ஏற்பட்டதால் கடந்த வாரம் ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன், கொரோனா சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.

மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார் கமல்ஹாசன்.

இந்த போட்டோக்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் டிஸ்சார்ஜ் ஆனவுடன் நேரடியாக பிக்பாஸ் படப்பிடிப்பு நடக்கும் ஈவிபி அரங்கத்திற்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார் கமல்.

தற்போது இதற்கான புரமோ வெளியாகியுள்ளது.

இதில் ரசிகர்கள் பலரும் கமலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

KamalHaasan is back to biggboss set after covid treatment

நான்கு நாயகிகள் நடிக்கும் புதிய பட பூஜை.; சிம்பு படத் தயாரிப்பாளர் நேரில் வாழ்த்து

நான்கு நாயகிகள் நடிக்கும் புதிய பட பூஜை.; சிம்பு படத் தயாரிப்பாளர் நேரில் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ்.எஸ்.பிரபு மற்றும் சங்கர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை இன்று போடப்பட்டது.

இப்படத்தில் சாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே, மனிஷா ஜஸ்னானி, சந்திரலேகா ஆகிய நான்கு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். வித்தியாசமான தோற்றத்தில் சார்பட்டா புகழ் டாடி ஜான் விஜய் நடிக்கிறார். கதையின் நாயகனாக எஸ்.எஸ்.பிரபு அறிமுகமாகிறார்.

அமெரிக்காவில் ஆங்கிலப்படம் மற்றும் டெலி பிலிம்களை இயக்கிய கிரிதரன் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

கார்த்திக் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.அசோக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.ராமர் படத்தொகுப்பையும், எஸ்.ஜே.ராம் கலை இயக்குனராகவும் பணியாற்றுகிறார்கள்.

இன்று நடைபெற்ற இப்படத்தின் பூஜையில், மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள்

ஸ்டண்ட் – எஸ்.ஆர்.ஹரிமுருகன், நடன இயக்குனர் – சங்கர், காஸ்டிங் இயக்குனர் – ஆரோக்கியதாஸ், காஸ்ட்யும் டிசைனர் – ரெபேகா மரியா, நிர்வாக தயாரிப்பாளர் – ஆர்.குமரேசன், கே.எஸ்.செந்தில் குமார்,

மக்கள் தொடர்பு – ஆர்.குமரேசன் – சதீஷ்வரன்

Shankar pictures new movie launched today

‘வெயில்’ முதல் ‘ஜெயில்’ வரை..; ஜிவி. பிரகாஷுடன் பயணம் குறித்து வசந்தபாலன்..

‘வெயில்’ முதல் ‘ஜெயில்’ வரை..; ஜிவி. பிரகாஷுடன் பயணம் குறித்து வசந்தபாலன்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

17 வயது ஜீவியுடன் வெயில் திரைப்படத்தில் என் இசைப் பயணம் துவங்கியது.

‘வெயிலோடு விளையாடி…’ பாடலையும் ‘உருகுதே மருகுதே…’ பாடலையும் நேர்த்தியாக உருவாக்கினால் தான் மேற்கொண்டு ஜீவி உடன் நான் பயணிக்க முடியும் என்று ஒரு மாபெரும் சவால் எங்கள் முன் இருந்தது

எப்பாடு பட்டேனும் இந்த இரண்டு பாடலை மகத்தான வெற்றிப் பாடல்களாக உருவாக்க வேண்டும் என்று பகலிரவாக நானும் ஜீவிக்கும் நா.முவும் இடைவிடாது அழித்தழித்து யோசித்து அந்த பாடல்களை உருவாக்கி வெற்றி கண்டோம்.

இன்று திரும்பிப் பார்க்கும்போது ‘வெயிலோடு..’. பாடலும் ‘உருகுதே…’ பாடலும் ரசிகர்களால் ஒரு கிளாசிக்காக பார்க்கப்படுவதைக் காணும் போது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஜீவியின் மாபெரும் பலமாக நான் நினைப்பது இதயத்தை உருக்கும் மெலடி. கதைகளை பேசும் விழியருகே பாடலும்,
உன் பெயரைச் சொல்லும் போதே என்ற பாடலும் அங்காடித் தெருவில் இன்னும் காதலர்களின் கீதமாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.

ஜெயில் திரைப்படத்தில் நாங்கள் இருவரும் இணையும் போது முன்னிருக்கும் பாடலின் சாதனையை இலக்காக வைத்துக் கொண்டு ஜெயில் திரைப்படத்தில் பாடல்களை உருவாக்க அமர்ந்தோம்.

உருகுதே பாடலுக்கு அருகில் செல்லக்கூடிய ஒரு பாடலை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியின் வெளிப்பாடுதான் காத்தோடு காத்தானேன் பாடல்.

6 பாடல்களைக் கொண்ட ஜெயில் திரைப்படத்தின் இசை ஆல்பம் மிக அழகாக வந்துள்ளது. உங்கள் இசை ரசனை மீது பெரும் நம்பிக்கை கொண்டு இந்த ஆல்பத்தை உருவாக்கியுள்ளோம்.

உங்களின் பேரன்பை எதிர்நோக்கி அன்புடன் – G.வசந்தபாலன்

Vasantha balan talks about working with GVP

More Articles
Follows