தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இடைச் செவல் என்ற கிராமத்தில் பிறந்தவர் கி.ரா என அழைக்கப்படும் கி. ராஜநாராயணன்.
இவர் தற்போது புதுச்சேரி லாசுப்பேட்டையில் உள்ள அரசுக் குடியிருப்பில் வசித்து வந்தார்.
கரிசல்காட்டு விவசாயி, கதைசொல்லி, வட்டார சொல்லகராதியை உள்ளிட்டவைகளை உருவாக்கியவர் இவர்.
சிறுகதை, குறுநாவல், நாவல், கிராமியக்கதைகள் என பல்வேறு நூல்களையும் புதினங்களையும் படைத்திருக்கிறார்.
இவர் எழுதிய கோபல்லபுரத்து மக்கள் நாவலுக்காக 1991ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றார்
1958இல் எழுத்துப் பணியைத் தொடங்கினார். ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும் அவரது எழுத்தின் திறனால் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சிறப்பு பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
தமிழ் இலக்கிய பேராளுமை, கரிசல் மண் எழுத்துக்கு சொந்தக்காரர், கரிசல் இலக்கியத்தின் தந்தை என போற்றப்பட்டவர் .
கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள் , கரிசல்காட்டு கடுதாசி , வட்டார வழக்கு சொல்லகராதி போன்ற காலத்தால் அழியாத படைப்புகளை தந்த
கி. ராஜநாராயணன்.
தன்னுடைய தள்ளாத வயதிலும் பல புத்தகங்களை எழுதிக் கொண்டே இருந்தார்.
இந்த நிலையில் கி. ராஜநாராயணன் வயது முதிர்வின் காரணமாக 17-05-2021 நள்ளிரவில் காலமானார். அவருக்கு வயது 99.
ஞானதந்தையை இழந்து விட்டேன் என இலக்கிய ஆளுமை கீரா அவர்களுக்கு நடிகர் சிவக்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கீரா அவர்களின் மறைவு குறித்து நடிகர் சிவக்குமார் கூறியதாவது..
நான் பிறந்த பத்து மாதத்தில் என் தந்தையை இழந்து
விட்டேன்.
தற்போது 80 வயதில் எனது ஞானதந்தை 99 வயது வாழ்ந்த கீரா அவர்களை இழந்து விட்டேன்.
கீரா அவர்களும் கணபதி அம்மாளும் எனக்கு இன்னொரு தாய் தந்தையர். எனக்கு அவருக்கும் 35 வருடகாலமாக உறவு உண்டு.
அவர் சம்பந்தபட்ட பல விழாக்களில் பாண்டிச்சேரி சென்று கலந்துகொண்டிருக்கிறேன்.
அந்த மகத்தான மனிதர் கரிசல் மண்ணை பற்றி எழுதிய கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள் , கரிசல்காட்டு கடுதாசி , வட்டார வழக்கு சொல்லகராதி போன்ற அழியாத படைப்புகளால் என்றென்றும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பார்.
அவரது ஆத்மா சாந்தியடையட்டும். இந்த கொரோனா பொது முடக்கத்தால் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செய்ய முடியாயததற்கு மனமார வருந்துகிறேன்.
மீண்டும் அவரது சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
பிராத்திக்கும்,
சிவக்குமார்.
Actor Sivakumar condolence message to Keera