தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த ஒரு வார காலமாக கடும் மழை வெள்ளதால் கேரளா மாநிலமே ஸ்தம்பித்து போனது.
இதில் 400க்கு அதிகமான பேர் உயிரிழந்தனர். தற்போது மழை நின்றதால் இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பி வருகின்றனர்.
இருந்தபோதிலும் இன்னும் நிவாரணப் பொருட்கள் அங்கே வழங்கப்பட்டு வருகிறது.
இந்திய அரசு முதல் பல்வேறு மாநிலங்கள், பிரபலங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிவாரண நிதிகளை கொடுத்துள்ளனர்.
நடிகர்களிலேயே அதிகபட்ச தொகையாக ரூ. 1 கோடியை கொடுத்தார் ராகவா லாரன்ஸ்.
இவரின் தொண்டு உள்ளத்திற்கு அனைவரும் தங்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தன் சினிமா வாழ்க்கைக்கும் தன் வெற்றிக்கும் காரணமான ராகவேந்திரா ஸ்வாமி, அம்மா, சுப்பராயன் மாஸ்டர், ரஜினி, சிரஞ்சீவி, விஜய், அஜித், ரசிகர்கள், ஊடகங்கள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
தன் ஆரம்ப காலத்தில் இவர்கள் உதவியால் இன்று நல்ல நிலையில் உள்ளேன். எனவே தன்னால் உதவி செய்ய முடிகிறது என அறிக்கை வெளியிட்டுள்ளார் லாரன்ஸ்.
Actor Raghava Lawrence to donate Rs 1 crore for Kerala flood relief