மருத்துவமனையில் நடிகர் நாசர் அனுமதி.; இப்போ எப்படி இருக்கிறார்.?

மருத்துவமனையில் நடிகர் நாசர் அனுமதி.; இப்போ எப்படி இருக்கிறார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹீரோ வில்லன் காமெடியன் குணச்சித்திர கேரக்டர் இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் நாசர்.

இவர் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடப் படங்களில் நடித்து வருகிறார் நடிகர் நாசர்.

தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதன் சூட்டிங் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

இந்த படத்தில் மெஹ்ரின், சுகாசினி, நடிகர் சாயாஜி ஷிண்டே ஆகியோருடன் நடித்து வருகிறார்.

தெலங்கானா போலீஸ் அகாடமியில் நேற்று சூட்டிங் நடைபெற்றது.

மாடிப்படி கட்டுகளில் நாசர் இறங்கி வந்த போது கால் வழுக்கி கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து அடுத்து அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

“நாசருக்கு லேசான காயம்தான். பயப்படும்படி ஏதுமில்லை. அவர் நலமாக இருக்கிறார்’’ என நாசரின் மனைவி கமீலா தெரிவித்துள்ளார்.

Actor Nasser health updates

வாரிசுகள் வரணும்.. ஆனா என் குடும்பத்துல அது நடக்கல.; ‘கொடை’ பட விழாவில் ராதாரவி பேச்சு

வாரிசுகள் வரணும்.. ஆனா என் குடும்பத்துல அது நடக்கல.; ‘கொடை’ பட விழாவில் ராதாரவி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ்எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராஜா செல்வம் இயக்கத்தில் வளரும் இளம் திறமையாளர்களின் கூட்டு முயற்சியில் ஒரு அழகான படைப்பாக உருவாகியுள்ள படம் ‘கொடை’ .

இப்படத்தில் கார்த்திக் சிங்கா கதாநாயகனாக நடிக்க, அனயா கதாநாயகியாக நடித்துள்ளார். மற்ற நட்சத்திர நடிகர்களில் ரோபோ சங்கர், எம்.எஸ். பாஸ்கர், மாரிமுத்து, சிங்கமுத்து, அஜய் ரத்தினம், போஸ் வெங்கட், சுவாமிநாதன், ஞானசம்பந்தன் ஆகியோருடன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

5 பாடல்கள் கொண்ட இந்த படத்திற்கு சுபாஷ் கவி இசையமைத்துள்ளார். தமிழ் திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடந்தேறியது.

இவ்விழாவினில்

இசையமைப்பாளர் சுபாஷ் கவி பேசியதாவது..

இந்த படத்தில் அதிகபட்சமாக லைவ் சவுண்ட் தான் பயன்படுத்தி இருக்கிறோம். தமிழில் இதுவரை பணிபுரிந்த பல மூத்த இசை கலைஞர்கள் இந்த படத்தில் பணியாற்றியுள்ளனர். படத்தின் பாடல் வரிகளை எழுதியவர்களுக்கும், பாடலை பாடியவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன். எங்களுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

நடிகர் கார்த்திக் சிங்கா பேசியதாவது..

இசையமைப்பாளருக்கு இது முதல் படம் மாதிரி தெரியவில்லை. அனுபவம் மிக்கவர் போல இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்னை இதில் நடிக்க வைக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார், அது எனக்கு உத்வேகத்தை கொடுத்தது. இந்த படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படம். படத்தில் எல்லா வித அம்சங்களும் இருக்கிறது. படம் மிக நன்றாக வந்துள்ளது, நீங்கள் பார்த்து உங்கள் ஆதரவை தர வேண்டும்.

நடிகை அனயா கூறியதாவது..

தமிழில் இது என் முதல் படம். நான் இந்த திரைப்படம் மூலமாக நிறைய கற்றுகொண்டேன். கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.

நடிகர் ராதாரவி கூறியதாவது..

இசையமைப்பாளருக்கு முதல் படம் போன்று தெரியவில்லை, அவருடைய இசை ஈர்க்கும் படி உள்ளது. இளைஞர்கள் திரைத்துறைக்கு வந்து ஜெயிக்க வேண்டும். இந்த படத்தின் கதாநாயகன் சிறப்பாக நடித்துள்ளார்,

ரோபோ சங்கர் மிகச்சிறந்த கலைஞன், அவன் பெரிய ஆளாக வரவேண்டும். சிங்கமுத்து என் குடும்பத்தில் ஒருத்தன் அவன் மகன் நடிகனாகியிருப்பது மகிழ்ச்சி. என் குடும்பத்திலிருந்து யாரும் நடிக்க வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள்.
வாரிசுகள் சினிமாவிற்கு வந்தால் தான் நம் பெயர் நிலைக்கும். நாயகனுக்கு உங்கள் ஆதரவு தேவை. இந்த படத்திற்கு உங்களது ஆதரவை கொடுத்து, படத்தை வெற்றி பெற வையுங்கள்.

நடிகர் எம் எஸ் பாஸ்கர் கூறியதாவது..

இந்த படத்தில் எனக்கு சிறிய ரோல் என்றாலும், அது நல்ல கதாபாத்திரமாக அமைந்திருந்தது. இந்த படத்தில் என் கதாபாத்திரத்தை வசனங்கள் வாயிலாகவும், நடிப்பு வாயிலாகவும் மெருகேற்ற படக்குழு நிறைய உதவி செய்தனர். படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கிறது, அதில் சில முக்கிய கதாபாத்திரங்களுடன் நான் நடித்துள்ளேன். படத்தின் நாயகன் கார்த்திக் மிகப்பெரிய நாயகனாக மாற வேண்டும், அதற்கு உங்கள் ஆதரவு தேவை. எல்லோருக்கும் நன்றி

நடிகர் ரோபோ சங்கர் கூறியதாவது..,

இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. பாடல்கள் எல்லாம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர். கதாநாயகன் கார்த்திக் நடனத்திலும், நடிப்பிலும் மிரட்டலான பங்களிப்பை கொடுத்துள்ளார். படத்தில் நான் முக்கிய பாத்திரத்தில் வருகிறேன். படம் நன்றாக வந்துள்ளது பார்த்து ஆதரவளியுங்கள் நன்றி.

தயாரிப்பாளர் கே ராஜன் கூறியதாவது..

படத்தின் பாடல்கள் அனைத்தும் கேட்க இனிமையாக இருந்தது. இசையமைப்பாளருக்கு எனது வாழ்த்துகள். கொடை என்ற டைட்டிலே நன்றாக இருக்கிறது, இந்த காலத்தில் யாரும் தமிழில் நல்ல டைட்டில் வைப்பதில்லை, படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். இயக்குனருடைய பணி சிறப்பாக வந்துள்ளது என்பது படத்தின் காட்சிகளை பார்த்தாலே தெரிகிறது. படம் மிகப்பெரிய வெற்றியடையும், அதற்கு என்னுடைய வாழ்த்துகள்.

தயாரிப்பாளர் அம்மா T சிவா கூறியதாவது..

ஒட்டுமொத்த படக்குழுவின் கூட்டு முயற்சியாக இந்த படம் உருவாகியுள்ளது. எம் எஸ் பாஸ்கர் போன்ற சிறந்த நடிகர்களை திரையில் பார்ப்பது மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது. படத்தை சரியான முறையில் புரமோட் செய்து, மிகப்பெரிய வசூலை, படக்குழு ஈட்ட வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன். படம் மிகப்பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துகள்.

இயக்குனர் எழில் கூறியதாவது..

இந்த படத்தின் டிரெய்லர் ஈர்க்கும் படி அமைந்து இருந்தது. படத்தின் ரீரெக்கார்டிங் கதையோட்டதோடு ஒன்றி போய் உள்ளது. இந்த படம் வெற்றி பெரும் என்று எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. படக்குழுவினர் உடைய உழைப்பு பாடல்களிலும், டிரெய்லரிலும் நன்றாக தெரிகிறது. படம் மிகப்பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துகள்.

இயக்குனர் ராஜா செல்வம் கூறியதாவது..

மிகப்பெரும் ஜம்பாவான்கள் எங்கள் படத்திற்கு வந்து வாழ்த்தியது மிக மகிழ்ச்சி. இப்படம் ஒரு கூட்டு முயற்சி. பல தடைகளை கடந்து படத்தை உருவாக்கியுள்ளோம். அனைவரும் கடுமையாக உழைத்துள்ளார்கள். படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து ஆதரவளியுங்கள் நன்றி.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

தயாரிப்பு நிறுவனம்: எஸ்எஸ் பிக்சர்ஸ்
எழுத்து இயக்கம் : ராஜசெல்வம்
இசை: சுபாஷ் கவி
ஒளிப்பதிவு: அர்ஜுனன் கார்த்திக்
எடிட்டர்: G.சசிகுமார்
கலை: K.M.நந்தகுமார்
நடனம்: தினேஷ், ராதிகா
சண்டைக்காட்சிகள்: பீனிக்ஸ் பிரபு ஆடைகள்: P.ரெங்கசாமி
ஒப்பனை: P.S.குப்புசாமி
ஸ்டில்ஸ்: மோகன்
மக்கள் தொடர்பு – சதீஷ் AIM

கூடுதல் தகவல்…

இது போன்ற ஒவ்வொரு நிகழ்ச்சியிலும்.. தான் பங்கேற்க கொடுக்கப்படும் பணத்தை தயாரிப்பாளர் கே ராஜன் ஏழைகளின் ஏழைகளுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொடுத்து உதவுவார்.

இந்த நிகழ்விலும் ரூ. 5000க்கும் மேற்பட்ட தொகையை ஒரு பெண்மணிக்கு கொடுத்து உதவினார்.

கொடை

Actor Radha Ravi speech at Kodai audio launch

‘தொடையழகி’ தொட்டதெல்லாம் தொழிற்சாலை.; ரம்பாவின் போட்டோஸ் வைரல்

‘தொடையழகி’ தொட்டதெல்லாம் தொழிற்சாலை.; ரம்பாவின் போட்டோஸ் வைரல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அழகிய லைலா.. இவளது ஸ்டைலா.. என்ற இந்த பாடலைக் கேட்டால் நாம் நினைவுக்கு வருவது ரம்பாவும் அவரது தொடை அழகும் தான்.

1990களில் தன் தொடை அழகால் தென்னிந்திய ரசிகர்களை கிறங்கடித்தவர் நடிகை ரம்பா.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், கார்த்திக், சத்யராஜ் ஆகியோருடன் நடித்துள்ளார்.

மேலும் அஜித் , விஜய் , பிரசாந்த் ஆகியோருடனும் டூயட் பாடியுள்ளார் ரம்பா.

அவர் 2010ல் இந்திரகுமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின்னர் திருமணம் இல்லற வாழ்க்கை என்ற செட்டிலாகி சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

அவர்களுக்கு தற்போது இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை ரம்பா தனது குடும்ப புகைப்படங்கள் அவ்வப்போது வெளியிட்டு வருவது வழக்கம்.

ரம்பாவின் கணவர் இந்திரகுமார் கனடாவை சேர்ந்தவர் என்றாலும் சென்னையில் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார்.

கிட்சன் உபகரணங்கள் தயாரித்து விற்பனை செய்யும் தொழிற்சாலை தான் அது.

சமீபத்தில் ரம்பா அவரது குடும்பத்துடன் அந்த தொழிற்சாலைக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு எடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் அவரே வெளியிட்டு இருக்கிறார்…

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரம்பா

Actress Rambha photo with family goes viral

JUST IN ‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன் காலமானார்.; அவரது வாழ்க்கை தொகுப்பு

JUST IN ‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன் காலமானார்.; அவரது வாழ்க்கை தொகுப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராசர் மற்றும் பாடலாசிரியர் கண்ணதாசன் உள்ளிட்ட ஆளுமைகளுடன் நெருங்கி பழகியவர் நெல்லை கண்ணன்.

இன்றைய இளைஞர்களுக்கு புரியும் வகையில் சொல்ல வேண்டுமென்றால்
. youtube தளங்களில் இவரது பேச்சு பிரபலம்.

பெருந்தலைவர் காமராஜரிடம் நெருங்கி பழகியதால் இவர் சொல்வதில் யதார்த்தம் உண்மை கலந்திருக்கும். இதனாலேயே இவருக்கு ரசிகர்கள் ஏராளம்.

1970களில் தொடங்கி தமிழ் மேடைகளில் இவரின் கம்பீர குரல் ஒலித்து வந்தது.

பாற்கடல் போல் தமிழ் மொழியில் புலமைப் பெற்றிருந்ததால் இவரை தமிழ்க்கடல் என்று அழைத்து வந்தனர்.

இந்நிலையில் தமிழறிஞரும், பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

77 வயதான இவர் அண்மைக் காலமாக உடல்நலக் குறைவால் சிகிச்சைப் பெற்று வந்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் உடல்நலக் குறைவால் இன்று மதியம் காலமானார்.

இவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும்.

நெல்லை கண்ணன் வாழ்க்கை தொகுப்பு :

சுப்பையா பிள்ளை இலக்குமி அம்மையார் ஆகியோரின் 4-வது மகனாக 1946ல் பிறந்தவர். தகப்பனார் குடும்பம் நெல்லையை பூர்விகமாகக் கொண்டது.

விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் தமிழ் மீது தனியாத ஆர்வம் கொண்டவர்.

பாரதி பாடல்கள், தமிழ் இலக்கிய நூல்கள் என அனைத்தையும் கற்றவர்.

பேச்சாற்றல் மிக்கவர் என்பதால் ஏராளமான பட்டிமன்றங்களில் கலந்து கொண்டவர்.

இவரது பேச்சாற்றலும், நினைவாற்றலும், பேச்சு இலக்கிய நயமும் சிறப்பாக இருக்கும்.

காங்கிரஸ் கட்சியில் தீவிர ஈடுபாடு கொண்ட இவர், இளம் வயது முதலே கட்சியில் இணைந்து பணியாற்றியவர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும், துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார் கண்ணன்.

சிவாஜிகணேசன் தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்தபோது, அவர் வருகைக்கு முன் நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பிரசார பொதுக்கூட்டத்தில் 5 மணி நேரத்திற்கும் மேலாக உரையாற்றியவர்.

பிரதமராக ராஜீவ் காந்தி இருந்த நிலையில், பிரசாரத்திற்காக அவர் நெல்லை வருகை தந்தபோது இவரது வீட்டில் மதிய உணவு எடுத்துக்கொண்டார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த ஜி.கே.மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி, கே.வி.தங்கபாலு ஆகியோருடன் நெருக்கமான நட்பு கொண்டவர்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் போது இவருக்கு திருநெல்வேலி தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டு இரு முறை திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

1996ல் சட்டப்பேரவைத் தேர்தலில் கருணாநிதியை எதிர்த்து சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோற்றார்.

1992 ஆம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினர் தேர்தலின்போது வேட்பாளராக ஜெயந்தி நடராஜன் மற்றும் இவரது பெயரும் தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அப்போதும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

2001-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தன்னை அ.தி.மு.கவில் இணைத்துக் கொண்டார்.

ஜெயலலிதா இவருக்கு ஒரு கார் பரிசளித்த தாகவும் கூறப்பட்டது. ஆனால் அவரால் அ.தி.மு.கவில் நீண்டநாட்கள் நீடிக்க முடியவில்லை. ஓர் ஆண்டு இடைவெளியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பினார். அரசியலில் மிகப் பெரிய பதவிக்கு அவரால் வர முடியவில்லை.

தொடர்ந்து இலக்கிய சமய சொற்பொழிவு ஆற்றி வந்த அவர், தனியார் தொலைக்காட்சி நடத்திய பேச்சாளர்களை உருவாக்கும் நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டார்.

Tamil orator Nellai Kannan passed away

நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே சூர்யாவின் திருமண அப்டேட்

நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே சூர்யாவின் திருமண அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் இரு வேடங்களில் நடித்த ‘வாலி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ் ஜே சூர்யா.

இதனைத் தொடர்ந்து விஜய்யை வைத்து ‘குஷி’ என்ற படத்தை இயக்கி அந்தப் படத்தையும் வெற்றி படமாக்கி காட்டினார்.

இதன் பின்னர் நியூ’ படத்தின் மூலம் அவரே கதையின் நாயகனாக அறிமுகமானார்.

இதன் பின்னர் சில படங்களில் நாயகனாக நடித்து வந்தார். அந்த படங்கள் பெரிய வெற்றி பெறாத நிலையில் திடீரென இசை படத்தின் மூலம் இசையமைப்பாளராக உருவெடுத்தார்.

இதன் பின்னர் இறைவி, மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து தன்னை ஒரு குணச்சித்திர நடிகராகவும் காட்டினார்.

மெர்சல், டான், மாநாடு உள்ளிட்ட படங்களை வில்லனாக நடித்தும் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றார்.

அண்மையில் இவர் நாயகனாக நடித்த கடமையை செய் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

தற்போது விஷாலுடன் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்த வருகிறார்.

இந்த நிலையில் 52 வயதாகும் எஸ் ஜே சூர்யாவிற்கு அவரது குடும்பத்தார் பெண் பார்த்து வருவதாக தெரியவந்துள்ளது.

தற்போது பெண் முடிவாகிவிட்டதாகவும் விரைவில் அது பற்றி அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Actor and director SJ Surya’s wedding update

விஜய்யின் ‘வாரிசு’ பட சூட்டிங்கில் செல்போனுக்கு தடை.; இதான் காரணமா?

விஜய்யின் ‘வாரிசு’ பட சூட்டிங்கில் செல்போனுக்கு தடை.; இதான் காரணமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய் நடிப்பில் வம்சி பைடிப்பள்ளி இயக்கி வரும் படம் ‘வாரிசு’.

தமிழ் தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தை தில் ராஜூ தயாரிக்க தமன் இசை அமைக்கிறார்.

இதில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், பிரபு, யோகி பாபு, குஷ்பு, சங்கீதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இதன் சூட்டிங் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

அதே நேரம் படப்பிடிப்பு வீடியோ & போட்டோக்கள் இணையத்தில் கசிந்து வருகிறது.

பின்னர் விசாகப்பட்டினத்தில் எடுக்கப்பட்ட காட்சியும் லீக்கான நிலையில் தற்போது மருத்துவமனைக் காட்சி ஒன்றும் கசிந்துள்ளது.

அதில்… ஸ்டிரெச்சரில் இருக்கும் சரத்குமாரை டாக்டரான பிரபு உள்ளே கொண்டு செல்கிறார். அவர்களுடன் விஜய்யும் செல்வது போல காட்சி இருக்கிறது.

அடிக்கடி காட்சிகள் லீக் ஆவதால் படப்பிடிப்பில் செல்போன் எடுத்து வர படக்குழுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Cell phone ban on Vijay’s ‘Varisu’ shooting.; Is this the reason?

More Articles
Follows