‘போட்டும் போகட்டுமே’ இசை: கொரோனா நெருக்கடியில் நம்பிக்கை தரும் பாடல்

‘போட்டும் போகட்டுமே’ இசை: கொரோனா நெருக்கடியில் நம்பிக்கை தரும் பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arjun dasநீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நலமாக பத்திரமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.

இந்த வீடியோவின் போஸ்டர், பிரமோ வீடியோவைத் தவிர நான் கடந்த சில காலமாக வேறெதுவும் பகிரவில்லை.

உண்மையச் சொன்னால், எனக்கு வேறதையும் பகிரும் மனநிலை இல்லை. உலகம் முழுவதும் நம்மைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது இது மாதிரியான நிகழ்வுகளில் ஈடுபட மனமில்லை.

இந்த வீடியோவையும் கூட இன்னொரு தருணத்தில் பகிர்ந்திருக்கலாம்.

ஆனால், இதை உருவாக்குவதன் பின்னணியில் நிறைய பேரின் கடினமான உழைப்பு இருக்கிறது.
இந்த கடினமான நேரத்தில் இந்த வீடியோ உங்கள் ஆன்மாவிலிருந்து நிம்மதியைக் கொணர்ந்து முகத்தில் மகிழ்ச்சியைக் கொண்டு வரச் செய்யும்.

இந்தப் பாடலுக்கு அற்புதமான வரிகளைக் கொடுத்த விஷ்ணுவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். லாவன்யா உங்களுடன் பணியாற்றியது இனிமையான அனுபவத்தைத் தந்தது. அழகான காட்சிகளைக் கொடுத்தமைக்கு பிரிட்டோவுக்கு நன்றி.

எடிட்டிங்கில் கைவண்ணம் காட்டிய ஆகாஷுக்கும், பாடலுக்கு குரல் மூலம் உயிர் கொடுத்த ஜென் மற்றும் சத்யாவுக்கும் நன்றி. அசோக் மாஸ்டரும் அவரது குழுவினர் தெறிக்கவிட்டுள்ளனர். ஸ்ருதி ஆடைவடிவமைப்பில் அசத்தியிருக்கிறார்.
ரியல் ஒர்க்ஸ் ஸ்டூடியோஸ் விஷுவல் எபெக்ஸில் கலக்கியிருக்கிறது.

லோகி, நீங்கள் தான் நான் இதை உருவாக்கக் காரணம். மிகுந்த நன்றி.

ஓர் இசை ஆல்பத்தை உருவாக்குவது போல் எனக்குத் தோன்றவில்லை ஏடோ ஒரு குறும்படம் எடுப்பதுபோல், சினிமா காட்சி எடுப்பது போல் இருந்தது.

ஒரு திரைப்படத்தை இந்தக் குழுவுடன் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன்.
எங்களுக்கு முழு ஆதரவு கொடுத்தமைக்கு திங்க் மியூசிக்கு நன்றி.
இந்த கடினமான காலகட்டத்தைக் கடக்க அதீத அன்பை உங்களுக்கு உரித்தாக்குகிறேன்.

இரட்டை மாஸ்க் அணிந்து கொள்ளவும், சானிட்டைசர்கள் பயன்படுத்தவும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவும். இறையருள் நிறையட்டும்.

அன்புடன் அர்ஜூன்

எல்லா சுரங்கத்தின் முடிவிலும் ஒரு வெளிச்சம் தெரியும். சில சுரங்கங்கள் நீண்ட பாதையைக் கொண்டிருக்கும். ஆனால், ஒளி தெரிவது நிச்சயம். ’போட்டும் போகட்டுமே’, பாடல் அன்பு, நம்பிக்கை, மனஉறுதி, வலிமையை வலியுறுத்துகிறது.

உண்மையான அன்பு எல்லாவற்றையும் வெல்லும். இது உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.

லாவன்யா திரிபாதி (ஹீரோயின்)

தைரியமாக இருக்கவும்…
’போட்டும் போகட்டும்’ பாடல் அதைத்தான் வலியுறுத்துகிறது.

அன்பானவர்களை இழப்பது மிகப்பெரிய துயரம். ஆனாலும் நம்பிக்கையை இழக்கக் கூடாது. இதுவும் கடந்து போகும் என்ற எண்ணம் வேண்டும்.

இசையமைப்பாளர் சத்யா மற்றும் ஜென்

மிகக் கடினமான, துரதிர்ஷ்டமான, கொடுமையான காலகட்டத்தில் போட்டும் போகட்டும் மக்களுக்கு நம்பிக்கையை விதைக்கும் என நம்புகிறேன்.

சுரங்கத்தின் முடிவில் ஒளி இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

இயக்குநர் லோகி

Actor Arjun Das in Pottum Pogattume corona awareness song

பாபா மீது ஆக்சன் எடுக்கலேன்னா மருத்துவ வசதிகளை கலைச்சிடுங்க..; இந்திய மருத்துவ சங்கம் கண்டனம்

பாபா மீது ஆக்சன் எடுக்கலேன்னா மருத்துவ வசதிகளை கலைச்சிடுங்க..; இந்திய மருத்துவ சங்கம் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

baba ramdevகொரோனா என்ற கொடிய வைரசால் எந்த வயதினராலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மருத்துவர்களும், செவிலியர்களும் இரவு, பகல் பாராமல் தங்கள் உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளிகளை காப்பாற்றி வருகின்றனர்.

இதனால் கொரோனா தடுப்பூசிக்கும் அது தொடர்பான மருந்துக்களுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவின் பிரபல யோகா குரு ராம்தேவ் என்பவர், நவீன மருத்துவத்துவத்தையும், (அலோபதி) மருத்துவர்களையும் அவமதிக்கும் விதமாக பேசிய வீடியோ ஒன்று இணையங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில்.. “நவீன மருத்துவமான அலோபதி மருந்துகளை சாப்பிட்டதால் தான் ஆயிரக்கணக்கானோர் இறந்து விட்டனர்

அலோபதி முட்டாள்தனமானது. ரெம்டெசிவிர், பிளாஸ்மா தெரபி் உள்ளிட்ட மருந்துகள் கொரோனாவை குணப்படுத்த இருந்து தவறிவில்லை. ” என சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார்.

இந்த நிலையில் பாபா ராம்தேவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய மருத்துவ சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

“பாபா ராம்தேவின் கருத்துகள் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் உள்ளது.

இதற்கு முன்பே அவர் சுகாதாரத் துறை அமைச்சர் முன்னிலையில் நவீன மருத்துவர்களை கொலைகாரர்கள் என பாபா பேசினார்.

பாபா ராம்தேவும், அவரது கூட்டாளி பாலகிருஷ்ணாவும் உடல்நிலை சரியில்லாத போது அலோபதி சிகிச்சை பெற்றுக்கொள்கின்றனர்.

பாபா ராம்தேவின் குற்றச்சாட்டை ஏற்று நவீன மருத்துவ வசதிகளை கலைத்துவிட வேண்டும், அல்லது அவர் மீது தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.”

இவ்வாறு இந்திய மருத்துவ சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

Indian medical council against Baba Ramdev

இசையில் தொடங்கி திரையில் தடம் பதிக்கும் ஸ்வாகதா கிருஷ்ணன்

இசையில் தொடங்கி திரையில் தடம் பதிக்கும் ஸ்வாகதா கிருஷ்ணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

swagatha krishnanஜோதிகா, விதார்த் நடிப்பில் உருவான காற்றின் மொழி படத்தில் ‘டர்ட்டி பொண்டாட்டி’, பார்ட்டி படத்தில் ஜிஎஸ்டி, ஜடா படத்தில் அனிருத்துடன் இணைந்து அப்படிப் பாக்காதடி, வஞ்சகர் உலகம் படத்தில் கண்ணனின் லீலை உள்ளிட்ட நிறைய பாடல்களைப் பாடிய ஸ்வாகதா கிருஷ்ணன் தான் திரைக்கு வரும் அந்தக் குயில்.

திரைத்துறைக்குள் ஏற்கெனவே நுழைந்துவிட்டாலும் பின்னணிப் பாடகியாக மட்டுமே உலா வந்தவர் ஸ்வாகதா. ஆனால், அவர் இசையமைத்து, பாடி, நடித்து வெளியிட்ட அடியாத்தே என்ற ஆல்பம் அவருக்கு புதிய ரசிகர்களைப் பெற்றுத் தந்தது.

அந்த ரசிகர்கள் அவரின் குரலுடன் சேர்த்து நடிப்புக்காகவும் கிடைத்தவர்கள்.

ஸ்வாகதா இசையமைத்து, பாடி, நடித்த அடியாத்தே பாடலை கெளதம் வாசுதேவ் மேனன், யுவன் ஷங்கர் ராஜா, ரா. பார்த்திபன், விக்னேஷ் சிவன், இயக்குனர் திரு, அசோக் செல்வன், பாடகி சின்மயி, ஹரீஷ் கல்யாண் உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இது நடந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது அவர் நடிப்பில் உருவான காயல் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவிடைந்துவிட்டது.

ஜே ஸ்டுடியோஸ் ஜேசு சுந்தரமாறன் தயாரிப்பில் தமயந்தி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஸ்வாகதா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

சாதி மறுப்புத் திருமணத்தை எதிர்க்கும் பெற்றோர்களால், பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி பேசும் கருவைக் கொண்ட அழுத்தமான படமாக உருவாகி இருக்கிறது காயல்.

முழுக்க முழுக்க கடல் சார்ந்த இடங்களான பாண்டிச்சேரி, நாகப்பட்டினம், வேளாங்கன்னி, ராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளது.

பாடகி நடிகையான பின்னணி:

தான் நடிகையாக முழுமுதற் காரணம் தனது சகோதரி நடிகை மாயா என்கிறார் ஸ்வாகதா.

நடிப்பதற்கு உடலையும் மனதையும் தகுதிபடுத்திக் கொள்ளுமாறு சகோதரி சொன்னதைக் கேட்டு அதற்கானப் பணிகளில் இறங்கியிருக்கிறார்.

நடிப்பு ரீதியாக தன்னை செம்மைப்படுத்திக் கொள்ள ஆதிசக்தி லெபாரட்டரி ஆஃப் தியேட்டரில் தன்னை இணைத்துக் கொண்ட ஸ்வாகதா அங்கு பயிற்சி பெற்றார்.

பின்னர் ஆனந்த் சாமி என்ற தியேட்டர் ஆர்டிஸ்டிடமும் நடிப்பு பழகினார்.

கடந்த ஜனவரி பிப்ரவரி மாதங்களில் ஸ்வாகதா தமிழில் ஒரு படம், தெலுங்கில் ஒரு படம் என இரண்டு படங்களில் ஒப்பந்தமானார்.

அந்தவேளையில் தான், பிப்ரவரி இறுதியில் அவருக்குப் தமயந்தியிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. தமயந்தி, ஸ்வாகதாவிடம் நடிக்க விருப்பமுள்ளதா எனக் கேட்டுள்ளார். வாய்ப்பைத் தவறவிடாத ஸ்வாகதா தமயந்தியிடம் கதை கேட்டிருக்கிறார்.
ஒரு கவிஞரின் கதையில் இசைக்குயில் நடிகையாக ஒப்பந்தமான கதை இதுதான்.

பின்னர், நேரடியாக படப்பிடிப்புக்குச் சென்றுவிட்டனர். குறுகிய காலத்தில் கடலோரப் பகுதிகளில் படப்பிடிப்பு முடிந்தது. திரைக்குப் புதிது என்பதால் ஆரம்ப நாட்களில் சிறு பதற்றம் இருந்தாலும் தனது இயக்குநர் பக்கபலமாக இருந்தால் காயல் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார் ஸ்வாகதா கிருஷ்ணன்.

ஸ்வாகதா மூன்றாவதாக ஒப்பந்தமான ’காயல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முதலில் முடிந்துவிட்டது.

மற்ற இரண்டு படங்களில் படப்பிடிப்புக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்.

Singer Swagatha turns heroine

கொரோனா தொற்றால் இத்தனை மருத்துவர்கள் & வங்கி ஊழியர்கள் மரணமா..? அதிர்ச்சி தகவல்

கொரோனா தொற்றால் இத்தனை மருத்துவர்கள் & வங்கி ஊழியர்கள் மரணமா..? அதிர்ச்சி தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Corona 2nd waveஇந்தியாவில் கொரோனா ஊரடங்கில் பல துறைகள் முடங்கி கிடந்தாலும் வங்கி துறை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இதே சமயம் கொரோனா தொற்றால் பலரும் உயிரிழந்து வருகின்றனர்.

இந்தியாவில் 1,250-க்கும் மேற்பட்ட வங்கியில் பணிபுரிபவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் மரணம் அடைந்துள்ளனர்.

1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரசால் வங்கி பணியாளர்கள் மரணம் அடைந்தால், அவரது குடும்பத்துக்கு ரூ.10 முதல் 15 லட்சம் வரை வழங்க தயாராக இருப்பதாக பெரும்பாலான வங்கிகள் அறிவித்துள்ளதும் இங்கே கவனிக்கத்தக்கது.

வங்கித் துறையை தொடர்ந்து மருத்துவ துறையிலும் மருத்துவர்கள் மரணம் அடைந்து வருவது இன்னும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்திய மருத்துவ கழகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்ட 422 மருத்துவர்கள் கொரோனா 2வது அலையில் இறந்துள்ளனர்.

இந்த மருத்துவர்களில் 100 பேர் டெல்லியை சேர்ந்தவர்கள் என்றும் 96 மருத்துவர்கள் பீகாரிலும் 41 மருத்துவர்கள் உத்தர பிரதேசத்தில் என இந்திய மருத்துவ கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த முன்கள பணியாளர்களுக்கு நம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரங்கல் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Over 400 doctors died due to Covid during second wave

JUST IN மே 22-23 தேதிகளில் அரசு சார்பில் 4500 ஸ்பெஷல் பஸ்..; ஆம்னி பஸ்களும் ரெடி

JUST IN மே 22-23 தேதிகளில் அரசு சார்பில் 4500 ஸ்பெஷல் பஸ்..; ஆம்னி பஸ்களும் ரெடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

special bus tnமே 24ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் எந்தவித தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

இதனால் இன்றும் நாளையும் மே 22-23 தேதிகளில் பேருந்துகள் இயங்கலாம் என அறிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இன்றும் நாளையும் 4500 சிறப்பு பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னையில் இருந்து 1500, மற்ற மாவட்டங்களில் இருந்து 3000 பேருந்துகள் இயக்கப்படும்

இரவு நேரத்திலும் 2 நாட்களில் சிறப்பு பேருந்துகளை இயக்கவும் ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி இன்றும், நாளையும் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படும் என்று தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Tamil Nadu to operate over 4500 special buses

அழகிய ஆண் குழந்தைக்கு தாயானார் ‘மெலோடி குயின்’ ஸ்ரேயா கோஷல்

அழகிய ஆண் குழந்தைக்கு தாயானார் ‘மெலோடி குயின்’ ஸ்ரேயா கோஷல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Shreya Ghoshalகடந்த 2000 ஆம் ஆண்டில் ஜி டிவியில் வெளியான ‘சரிகம’ பாட்டு போட்டியில் கலந்துக் கொண்டு பிரபலமானவர் ஸ்ரேயா கோஷல்.

2002 ஆம் ஆண்டு ஷாரூக்கான், ஐஸ்வர்யா ராய், மாதுரி தீட்சித் உள்ளிட்டோர் நடித்த ‘தேவதாஸ்’ பட மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார் இவர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், நேபாளம், பாகிஸ்தானி, பெங்காலி, போஜ்பூரி என பல மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார்.

நான்கு முறை தேசிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

இந்திய சினிமாவில் முன்னணி பாடகியான இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு அவரின் நண்பரும் தொழிலதிபருமான ஷைலாதித்யா முகோபாத்யாயாவை திருமணம் செய்துக் கொண்டார்.

இந்நிலையில், ஷ்ரேயா கோஷலுக்கு இன்று மதியம் ஆண் குழந்தை பிறந்துள்ளதை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில்…

“கடவுள் அருளால் இன்று மதியம் எங்களுக்கு விலைமதிப்பற்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுபோன்ற ஒரு மகிழ்ச்சியான உணர்வை இதற்கு முன்பு அடைந்ததில்லை. நான், எனது கணவர் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் அளவுகடந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம். உங்களது வாழ்த்துக்களுக்கு என்ற நன்றி` எனக் குறிப்பிட்டுள்ளார்.

God has blessed us with a precious baby boy this afternoon. It’s an emotion never felt before. @shiladitya and I along with our families are absolutely overjoyed. Thank you for your countless blessings for our little bundle of joy.

Singer Shreya Ghoshal blessed with baby boy today

More Articles
Follows