தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கர்நாடகா சிறைத்துறையில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றியவர் ஐ.பி.எஸ்.அதிகாரி ரூபா.
இவர் சசிகலா இருக்கும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையை ஆய்வு செய்த போது, பல முறைகேடுகளும் நடப்பதை தெரிவித்தார்.
மேலும் ரூ.2 கோடி தொகையை சசிகலாவிடம் பெற்றுக்கொண்டு அவருக்கு சிறை அதிகாரிகள் பல்வேறு சலுகைகளை வழங்கிவருவதாக குற்றம் சாட்டினார்.
இதனையடுத்து ரூபா போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் இந்த சம்பவகங்களை அடிப்படையாக வைத்து ஒரு சினிமா உருவாகிறதாம்.
இப்படத்தை வனயுத்தம் , ஒரு மெல்லிய கோடு படங்களை இயக்கிய ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கவிருக்கிறாராம்.
இதுபற்றி ரூபாவிடம் அவர் பேசி அனுமதியும் வாங்கிவிட்டாராம்.
ரூபா கேரக்டரில் நயன்தாரா அல்லது அனுஷ்கா நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வாசகர்களே நீங்க சொல்லுங்க.. உங்க சாய்ஸ் யாரூ?